அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2011 பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

.
சிட்னியிலும் மற்றைய (அவுஸ்திரேலிய, நியூசிலாந்து) மாநகர்களிலும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் திறம்பட நடைபெற்றன.

இந்த வருடம் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் 6 மாநகர்களில் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு மாநகரிலும் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்த 3 மாணவர்கள் சிட்னியில் 02-10-11 அன்று நடைபெறவிருக்கும் தேசிய நிலைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். இத்தேசிய நிலைப் போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். இவ்வாறு 10 போட்டிகள் தேசிய நிலையில் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை, Darcy Road, Wentworthville இல் அமைந்துள்ள Darcy Road Public School மண்டபத்தில் நடைபெறும். நீங்களும் அங்கு வந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தப் போட்டியில் பங்குபற்றித் தமது திறமைகளைக் காண்பித்துப் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கவென ஒரு பரிசளிப்பு விழாவை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழைக்கின்றோம். இந்த விழாவிற்கு வருகை தந்து பரிசுபெறும் சிறார்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எமது பரிசளிப்பு விழா விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நேரம்: பி.ப. 4.00 மணி, ஞாயிற்றுக் கிழமை, 02-10-11 ம் திகதி

இடம்: Bowman Hall,  Campbell St, Blacktown

தொடர்ந்தும் எமது போட்டிகளில் உங்கள் உதவியை நாடி நிற்கின்றோம்.

உங்கள் வரவையும் ஆதரவையும் நாடி நிற்கும்

கலாநிதி. பிரவீணன் மகேந்திரராஜா
இணைப்பாளர்,
தமிழ் ஊக்குவிப்புக் குழு 2011

திரு. அ. தேவரன்ஜித்
போட்டி செயலாளர்,

தமிழ் ஊக்குவிப்புக் குழு 2011
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்







No comments: