முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள் நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை. விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.
நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.
முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.
தன்னுடையவாழ்வின் இறுதியை நோக்கி போய்கொண்டிருப்பவர்கள் அந்த பயத்தில் அவர்களின் ஆசைகளை அவசரமாக நிறைவேற்றும் பொருட்டும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
இது நமக்கு மன உளைச்சலைத் தந்தாலும் அவற்றை அனுதாபத்தோடு பரிசீலிப்பது மிகவும் அவசியமானது. ஒரு காலத்தில் நாமும் அந்த நிலைக்கு தள்ளபடுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் அவர்களை புண்படுத்த தோன்றாது.
மற்றொரு விஷயம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து நிறைய நன்மை தீமைகளை அனுபவித்துள்ளார்கள். அதை கண்டிப்பாக நாம் பெற்றிருக்க மாட்டோம். எனவே அவைகள் நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு தடவை அவர்கள் சொல்வதையும் கேட்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். அவ்வாறு கேட்பது அவர்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தியை கொடுக்கும்.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் உடல் நிலை குன்றி இருந்தாலும் ஆன்ம பலம் மிக்கவர்கள். அவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம பலம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையாமாகவே செயல்படும்.
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற வரிகள் உங்களை வழிநடத்தும் உன்னத வரிகள என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அது பொய்யாகிவிடுமா என்ன ?.
Nantri krvijayan.blogspot
No comments:
Post a Comment