"பக்தி" என்பது கலையின் ஆன்மாவாக செயல்படுகிறது. பல
நூற்றாண்டுகளாக, நாடகம், நடனம் மற்றும் சமகால கலைத் துறைகளில் உள்ள கலைஞர்கள் பக்தியை காட்சி ரீதியாக வெளிப்படுத்தியுள்ளனர், இந்திய பாரம்பரிய நடனத்துடன் ஆழமாக பின்னிப் பிணைந்த ஒன்று பக்தியாகும். .
அமேஷா தர்ஷனா தனது குருவான நாட்டியக்ஷேத்திரத்தின் முதன்மை இயக்குநரான அனுஷா தர்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நடனப் பயணத்தை மேற் கொண்டவர் . இலங்கை நடன ஆசியையான அனுஷா தர்மராஜா, சென்னையில் கலாக்ஷேத்ராவின் நிறுவனரான புகழ்பெற்ற திருமதி ருக்மணி தேவி அருண்டெலிடம் பரதநாட்டியம் கற்ற பெருமைக்குரியவர். கலாக்ஷேத்திரத்தில் ஊட்டப்பட்ட விழுமியங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் ஆசிரியரும் மாணவரும் பரதக் கலையின் புனித பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளனர்.
, நேர்த்தியான மற்றும் ஆற்றல் மிக்க இளம் நடனக் கலைஞர் , பள்ளி ஆசிரியர் , இரண்டு குழந்தைகளின் தாய் அமேஷா, பாங்க்ஸ்டவுன் கலை மையத்தில் தனது நடனப் பள்ளியான நிருத்யசாகரத்தின் முதல் கச்சேரியில் பக்தியை அதன் பல்வேறு வடிவங்களில் திறமையாக கையாண்டு நடன வடிவில் வழங்கினார் . பக்தி என்பது பற்று, மரியாதை, நம்பிக்கை, அன்பு, பக்தி, வழிபாடு மற்றும் தூய்மை போன்ற கருத்துக்களை உள்ளடக்கியது, மேலும் அது தெய்வங்கள், குரு, காதலர் மற்றும் ஒருவரின் தாய்மண் வரை கொள்ளக் கூடியது . பக்தி நம்பிக்கைகள் மற்றும் செயல்களை வடிவமைக்கும் ஒரு பலம் பொருந்திய சக்தியாக செயல்படுகிறது,
ஆசிரியர்கள், தெய்வங்கள் மற்றும் இயற்கை அன்னை மீதான
தடைகளை நீக்கும் விநாயகருக்கு அஞ்சலி செலுத்தும் "ஆதி பக்தி" மற்றும் சிவபெருமானின் தெய்வீக காளையான நந்தியை கௌரவிக்கும் "அயன் பக்தி" ஆகியவற்றுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. நந்தியின் துடிப்பான ஆற்றலையும், சிவபெருமானிடம் அசைக்க முடியாத விசுவாசத்தையும் பறைசாற்றும் வகையில், மிருதங்கத்தின் ஒலிக்கு ஏற்ப வெவ்வேறு தாள ஓசைகளுக்கும் துடிப்புகளுக்கும் இடையில் அமேஷாவின் திறமையான பாத வேலைப்பாடுகள் அமைந்திருந்தன ..
"பாவை பக்தி" பெண் சக்தியைக் குறிக்கிறது, குழந்தை முதல் போர்க்கள வீரமங்கை வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் சக்தி தேவிக்கு மரியாதை செலுத்தியது , மேலும் சர்வவல்லமையுள்ள தேவியின் தயவையும் கருணையயும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பக்தரின் அப்பாவித்தனத்தை "பேதை பக்தி" சித்தரித்ததது.
"யோக பக்தி"யில், நந்தனார் பல சமூகத் தடைகளை மீறி சிவபெருமானைக் காண கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிய கதையை அமேஷா விவரித்தார். மார்க்கண்டேயன் என்ற பக்தன் எமனிடமிருந்து பாதுகாப்புக்கு சிவனை வேண்டி , வழிபாட்டிற்கு அனுமதிக்க சிவனின் அருளைக் கோரிய கதையை கூறினார்.
"பூத பக்தி" என்பது இயற்கை, பூமித் தாய் மற்றும் பஞ்சபூதங்களான
நெருப்பு, பூமி, காற்று,
நிகழ்வு "மோன பக்தி"யுடன் நிறைவடைந்தது, அங்கு ஒரு பக்தர் முருகனின் கருணையை கோரினார். கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து தில்லானா மற்றும் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஆற்றல்மிக்க நடை, துடிப்பான முகபாவனைகள் மற்றும்
அமேஷாவின் அற்புதமான பக்தி நிறைந்த ஒரு வசீகரமான மாலைப் பொழுது நிகழ்வு
No comments:
Post a Comment