தமிழ் எழுத்தாளர் விழா 2023 - சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி

 .      


அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  சிட்னியில்   தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில்  முற்பகல் 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில்  வதியும் எழுத்தாளர்களின்  நூல்களின் கண்காட்சி, , மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன்  எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப்பங்களிப்பை  பாராட்டும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு  எழுத்தாளர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும்  அவுஸ்திரேலியாவில் தமிழையும் ஒரு பாடமாக உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களையும், தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

            அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

          அனுசரணை :  சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம்  

               Cumberland Council, Wentworth Ville Library,

 


No comments: