ஏழ்மை (கவிதை) உஷா ஜவாகர் ஸாம்பியாவிலிருந்து....



தலையிலே பழக்கூடை

இடுப்பிலே அழும் குழந்தை

நடுவீதியிலே உழைப்பு

நாளும் பெண்ணிவள் பிழைப்பு


நாளை பெண்ணிவள்

மகவு பாடசாலை - செல்வாளோ 

கல்வி கற்பாளோ

வாழ்வில் உயர்வாளோ


தாயின் ஏழ்மையை

தரணியில் போக்கிடுவாளோ

நாளை காலம்

பதில் சொல்லும்!

No comments: