July 23, 2023
இந்தியாவின் தலையீட்டைக் கோரிய சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இருக்கின்ற தெளிவு, ஏன் கட்சிகளிடம் இல்லாமிலிருக்கின்றது? அல்லது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் தீர்வும் கிடைத்துவிடக்கூடாதென்பதில் கட்சிகளின் தலைவர்கள் என்போர் உறுதியாக இருக்கின்றனரா? இந்திய பிரதமரின் தெளிவான செய்தி ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகின்றது.
உண்மையில் அவைகளை ஒரு பொருட்டாகக்கூட புதுடில்லி கருத்தில் கொள்ளவில்லை.
உண்மையில், இந்தியாவிடம் சமஷ்டியை கோரி, கடிதங்கள் எழுதுவதை இந்தியா ஒருபோதும் வரவேற்காது-மாறாக, தங்களுக்கு தேவையற்ற வகையில் இராஜதந்திரச் சங்கடங்களை ஏற்படுத்துவதாகவே அவர்கள் நோக்குவார்கள்.
ஏனெனில், ஒரு நாடு, அதன் நிலைப்பாட்டை முன்வைத்த பின்னர், அதற்கு மாறான கோரிக்கைகளுடன் செல்வதானது, அந்த நாட்டின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டும்.
அவர்கள் வலியுறுத்தும் ஒன்றின் மூலம் சென்று, அதிலிருந்து, முன்னோக்கிச் செல்ல முற்பட்டால் – அது சரியானதாகும்.
இதுவரை இந்தியாவை அணுகியவர்களில், அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சிவில் சமூக முன்னெடுப்பு ஒன்றுதான், இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை புரிந்து கொண்டு, முன்னெடுக்கப்பட்ட ஒரேயொரு நகர்வாகும்.
அந்த வகையில் சிவில் சமூகத்தின் தலையீடு அதன் இலக்கை நிறைவு செய்திருக்கின்றது. இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.
இனியாவது, இதனை புரிந்துகொண்டு, செயற்படுதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment