நலமோடு வாழ்க

 

சிவஸ்ரீ அ. தனராஜசர்மா

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் குருக்கள்




1 தண்ணீர் நிறைய குடியுங்கள்.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
2 இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
3 உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
4 தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
5 நிறைய புத்தகம் படியுங்கள்.
6 ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
7 குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
8 குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
9 உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
10 எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
11 உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
12 மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
13 நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
14 அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம்.
15 உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16 கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17 வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18 எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19 வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20 முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21 வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டிருங்கள்.
22 மன்னிக்கப் பழகுங்கள்.
23 "70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24 அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25 உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26 உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27 ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28 உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29 உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30 எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
வாழ்க_வளமுடன்
அன்புடன் தனாசிவம்....

****************************************************************

குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது
கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது.
புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது
பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்
தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்.
சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.
அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசும் போது
அனைவரிடமும் அன்பு உணர்த்தப்படுகிறது...
அன்புடன் தனாசிவம்..


No comments: