மெல்பனில், நடேசனின் நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு

 


அவுஸ்திரேலியா மெல்பனில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தென்னாசிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான நடேசனின்  நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு,  எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி                  ( 02-05 – 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு  கிளன்வேவெலி RSL  மண்டபத்தில்

(RSL Glen Waverley)  161 Coleman Parade, Glen Waverley VIC 3150 நடைபெறும்.

ஏற்கனவே வெளிவந்த நடேசனின் அசோகனின் வைத்திய சாலை ( நாவல் ) நூலின் ஆங்கில மொழிபெயர்பு King Asoka Veterinary Hospital, புதிய சிறுகதைத் தொகுதி அந்தரங்கங்கள், சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு Veterinary Vignettes, சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு உமத்துவுவாத் ஒஹு  பிரிமியெக்கி  ( கிறுக்கனாயினும் அவனும் ஆண்மகன்தான் ) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன.

பேராசிரியர் கௌசல் சிறிவஸ்ரா தலைமையில்


இடம்பெறவுள்ள இந்நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கை கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன்  நெறிப்படுத்துவார்.

சிங்கள – ஆங்கில எழுத்தாளர் கலாநிதி ஷண்ண விக்கிரமசேகர, கலாநிதி சமன் கரசின் ஆராச்சிகே,   வானொலி ஊடகவியலாளர் திருமதி டில்ருக்‌ஷி விஜேசூரிய , இலக்கிய ஆர்வலர் திரு. அசோக்குமார் ஆகியோர் நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றுவர்.

நடேசன் ஏற்புரை வழங்குவார்.


 

 

 

 



No comments: