

மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு பெரியவர்களுக்கான விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதி-களினாலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
வழமைபோன்று தாயக உணவுவகைகளான தோசை, பூரி, வடை, கொத்துரொட்டி ஒடியற்கூழ் முதலான உணவுகளும், வடை, றோல், பற்றீஸ், டோனட் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு வலூடா உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன.
துடுப்ந்தாட்டத்தில் MTG அணியும், Shivash Reegal அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டு Shivash Reegal அணி 2020ம் ஆண்டிற்கான வெற்றியாளர் விருதை தனதாக்கிக்கொண்டது. கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணியினருக்கும், செந்தமிழ் அணியினருக்கு-மிடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணி வெற்றியீட்டி 2020ம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர். 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் ஈழம் போய்ஷ் - சிவப்பு அணியினர் 2020 ஆண்டு சம்பியனாகவும், ஈழம் போய்ஷ் - மஞ்சள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பவற்றில் இறுதியாட்டங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டு, இறுதியாட்டங்களில் பங்கெடுத்து வெற்றியீட்டிய அணிகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, இவ்விளையாட்டுக்களில் இறுதியாட்டங்களில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இறுதியாக பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வையடுத்து மாலை 8.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டடு தமிழர் விளையாட்டுவிழா_ 2020 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.
No comments:
Post a Comment