வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப்பிற்கு மரணதண்டனை..!
உலக அழகி பட்டத்தை வென்ற ஜமைக்கா மாணவி ; இந்திய அழகிக்கு 3 ஆவது இடம்
சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவருக்கு 18 மாதம் சிறை
நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்
போயிங் நிறுவனம் மீது 185 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்!
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: 181 பேர் கைது!
நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்- உத்தரபிரதேசத்தில் 15 பேர் பலி
டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் அடுத்தது என்ன?
வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
15/12/2019 நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோர் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஏற்கனவே 15 பேர் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு பேர் காணமால்போயுள்ள நிலயைில் அவர்களை தேடும் நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வைட் தீவிலிருந்து ஆறு பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப்பிற்கு மரணதண்டனை..!
17/12/2019 தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரஃப்பிற்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தற்போது இவர் உடல்நலக் குறைவால் டுபாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது. நன்றி வீரகேசரி
17/12/2019 ஜமைக்கா நாட்டு பெண் உலக அழகியானார். இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த மாணவி டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச் சுற்றில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த மாணவி டோனி ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் (Vanessa Ponce de Leon) மகுடம் அணிவித்தார்.

மொரான்ட் பே-யில் பிறந்து வளர்ந்த டோனி, தற்போது அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, டயானா ஹைடன், யுக்தா முகி, மனுஷி சில்லார் உள்ளிட்டோர் உலக அழகிகளாக வெற்றிபெற்றாலும், முதன்முறையாக சுமன் ராவ்தான் 3-வது இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019 என முடிசூட்டப்பட்டது.


சுமன்ராவ் உதய்பூருக்கு அருகிலுள்ள ஆய்தானா கிராமத்தில் பிறந்தவர் ஆவார். அவருக்கு ஒரு வயது இருக்கும்போது அவரது குடும்பம் முமபைக்கு இடம் பெயர்ந்தது. சுமனின் தந்தை ஒரு நகைக்கடைக்காரர், அவரது தாய் ஒரு இல்லத்தரசி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பள்ளிபடிப்பு முடிந்ததும், சுமன் மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படிப்பைத் தொடங்கினார். அவர் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞரும் கூட. 2018 ஆம் ஆண்டில் மிஸ் நவிமும்பை போட்டியில் சுமன் பங்கேற்று 2-வது இடம் பெற்றார். அதன்பிறகு, மிஸ் ராஜஸ்தான் 2019 போட்டிக்கு சுமன் ஆடிஷன் செய்து பட்டத்தை வென்றார். மிஸ் இந்தியா 2019 போட்டியில், சுமன் ராஜஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த பட்டத்தையும் வென்றார். நன்றி வீரகேசரி
சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவருக்கு 18 மாதம் சிறை
நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்
போயிங் நிறுவனம் மீது 185 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்!
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: 181 பேர் கைது!
நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்- உத்தரபிரதேசத்தில் 15 பேர் பலி
டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் அடுத்தது என்ன?
19/12/2019 தென்கொரியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட் தொலைப்பேசியான சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக செயல் துணை தலைவரை கைது செய்துள்ளதோடு,அவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைவரான லீ சாங் ஹூன், நிர்வாகத்தின் செயல் துணைத் தலைவர் கங் கியூங் ஹூன் ஆகிய இருவரும் அந் நிறுவனத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தல் , தொழிலாளர்களின் சங்கங்கள் என்பற்றை முற்றாக நிறுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அத்தோடு அவர்களை கைது செய்த பொலிஸார் அந்நாட்டின் சியோல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நிறைவேறியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்
19/12/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பிரதிநதிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளதுடன் குறித்த வாக்கெடுப்புக்கு ஆதரவு 230 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ட்ரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ட்ரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.
ட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் ட்ரம்ப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற ட்ரம்புக்கு எதிரான 2 ஆவது தீர்மானமும் நிறைவேறியது.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்கு தற்போது எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
போயிங் நிறுவனம் மீது 185 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்!
18/12/2019 போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமான இறக்குமதி நிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
தனது நிறுவனத்துடன் மேற்கொண்ட 22 ஒப்பந்தங்களை போயிங் விமான நிறுவனமானது மீறியமையை மேற்கொள் காட்டிய குறித்த நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், 185 மில்லியன் டொலரும் நஷ்டஈடாக கோரியுள்ளது.
இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.
இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை போயிங் 737 மெக்ஸ் ரக விமானனத்தின் தயாரிப்பு தற்காலிகமாக ஜனவரி மாதம் வரை இடைறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்தது.
இதன் காரணமாக அயர்லாந்தைச் சேர்ந்த "Timaero Ireland Ltd" என்ற நிறுவனம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தே அமெரிக்கா நீதிமன்றில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது. நன்றி வீரகேசரி
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: 181 பேர் கைது!
18/12/2019 துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், 10 வைத்தியர்கள் உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான கிளர்ச்சியாளர்கள் குழு முயற்சி செய்தது.

எனினும், பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தனர். இதன்போது நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் உயிரிழ்ந்ததோடு, இந்த திட்டத்தை தீட்டிய 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இராணுவ புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், பொலிஸார், அரச ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரச ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த இராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்-தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசாங்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி துருக்கி அரசிடம் ஒப்படைக்குமாறும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
22/12/2019 நியூஸிலாந்தில் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தனி நபர் ஒருவர் மேற்கொண்ட கோ துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் வரை உயிரிழந்தனர்.
அதன் பின்னர் நியூஸிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஆயுத தடை சட்டத்தின்மூலம் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளும் பொலிஸாரும் ஆரம்பித்திருந்தனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்- உத்தரபிரதேசத்தில் 15 பேர் பலி
21/12/2019 இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை உத்தரபிரதேசத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
நேற்று ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு மக்கள் ஈடுபட்டவேளை அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும்இடையில் மோதல்கள் இடம்பெற்றன.
இதன் போது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுவீச்சு மற்றும் தடியடியில் ஈடுபட்டதால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக காயமடைந்தவர்களில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரி;த்துள்ளது.
மீரூட்டில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர்.வரணாசியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக 8 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மீருட்டில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்பட்டன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது,ஜாஹீர்,மொசின் . நூர் முகமட் ஆகியோரின் உடல்களை நேற்று கொண்டுவந்தனர், அசிவ் என்பவரும் நேற்று உயிரிழந்திருந்தார் இன்று ஒரு அசீவ் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை உத்தியோகத்தர் ஒருத்தரும் சிகிச்சை பெற்றுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வரணாசியில் உயிரிழந்த எட்டு வயது சிறுவனான முகமட் சகீரின் உடல் இன்று காவல்துறை பாதுகாப்பிற்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் அடுத்தது என்ன?
20/12/2019 ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தின் இரண்டு சரத்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் புதன்கிழமை இரவு வாக்களித்ததையடுத்து அமெரிக்காவின் வரலாற்றில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியாக அவர் மாறியிருக்கிறார். இரு சரத்துக்களுமே உக்ரேன் ஊழல் விவகாரத்தில் ட்ரம்ப் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், காங்கிரஸின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவையாகும்.
ஜனப்பிரதிநிதிகள் சபை எவ்வாறு வாக்களித்தது?
காங்கிரஸின் 435 ஆசனங்களைக் கொண்ட ஜனப்பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சிக்கு 233 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஆதலால் ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சபையில் ட்ரம்பிற்கு எதிரான பதவி நீக்கப்பிரேரணை நிறைவேறும் என்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாகவே நிச்சயமாகத் தெரிந்தது. பிரேரணையின் சரத்துக்கள் மீது சபை கட்சி அடிப்படையிலேயே பெருமளவிற்கு வாக்களித்தது. முதலாவது சரத்திற்கு ஆதரவாக 230 வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது சரத்து 228 – 198 வாக்குகள் என்ற அடிப்படையில் நிறைவேறியது.
இரண்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் (2016 ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பை ஆதரித்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்) – நியூஜெர்ஸியின் பிரதிநிதி ஜெவ் வான்ட்ரூவும், மினிசோட்டா மாநிலத்தின் பிரதிநிதி கொலின் பீட்டர்சனும் அந்த சரத்துக்களுக்கு எதிராக வாக்களித்தனர். 2016 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வெற்றி பெற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஜெரால்ட் கோல்டன் (மெய்ன் மாநிலம்) முதலாவது சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை, இரண்டாவது சரத்தை எதிர்த்தார். ஹவாயைச் சேர்ந்த ஜனநாயகக்கட்சி உறுப்பினரான ருல்ஸி கப்பாட் இரண்டு வாக்கெடுப்புக்களின் போதும் பிரசன்னமாகியிருந்து வாக்களித்தார்.
ட்ரம்பிற்கு எதிராக ஏன் பதவிநீக்கத் தீர்மானம்?
பதவிநீக்கத் தீர்மானத்தின் இரு சரத்துக்களுமே உக்ரேன் ஊழல் விவகாரம் தொடர்பானவை. 2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாகக் கூறப்படுகின்ற விவகாரம் தொடர்பிலான ரொபேட் முல்லர் அறிக்கையையும், அதை ட்ரம்ப் கையாண்ட முறையையும் பதவிநீக்கத் தீர்மானத்திற்கான பிரச்சினைகளாக ஜனநாயகக் கட்சியினர் கருதவில்லை என்பதை இது வெளிகாட்டுகிறது.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான முதலாவது சரத்து உக்ரேன் ஊழல் விவகாரத்தில் ட்ரம்பின் நடத்தை பற்றியதாகும். 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வரக்கூடியவரும், முன்னாள் உப ஜனாதிபதியுமான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹன்டர் பிடென் ஆகியோருக்கு எதிராக விசாரணையொன்றைத் தொடங்குமாறு உக்ரேனின் ஜனாதிபதி வோலோடைமிர் செலன்ஸ்கி மீது நெருக்குதலைப் பிரயோகித்ததன் மூலம் தனது அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உக்ரேன் ஜனாதிபதியுடனான வெள்ளை மாளிகைச் சந்திப்பொன்றையும் உக்ரேனுக்கான இராணுவ உதவியையும் ட்ரம்ப் நிறுத்தி வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிடென் மீதும், 2016 ஜனாதிபதித் தேர்தலில் உக்ரேன் தலையீடு செய்ததாக நம்பமுடியாத ஒரு விவகாரம் மீதும் விசாரணைகள் நடத்தப்படும் என்று பகிரங்கமாக அறிவிக்குமாறு உக்ரேன் அரசாங்கத்தை ஊழல்தனமாக ட்ரம்ப் கேட்டுக்கொண்டார் என்று அந்த சரத்து கூறுகிறது.
இரண்டாவது சரத்து காங்கிரஸின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடையூறு விளைவித்தமைக்கு எதிரானது. பதவிநீக்கத் தீர்மானம் தொடர்பான காங்கிரஸின் விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர மறுத்ததன் மூலம் ட்ரம்ப் காங்கிரஸின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என்று அந்த சரத்து கூறுகிறது. சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த ஜனாதிபதி ஜனப்பிரதிநிதிகள் குழுவின் முன்பாக சாட்சியமளிக்க வேண்டாம் என்று பல சாட்சிகளை வலியுறுத்திக் கேட்டார். அத்துடன் காங்கிரஸிடமிருந்து வரக்கூடிய அழைப்பாணைகளை ஏற்றுச் செயற்பட வேண்டாம் என்று வெள்ளை மாளிகையையும், ஏஐனய அரசாங்கத் திணைக்களங்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ட்ரம்ப் இப்பொழுது பதவியில் இல்லையா?
இந்தக் கேள்விக்கான பதில் 'இல்லை" என்பதேயாகும். அதாவது அவர் அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் தொடருகிறார். காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையினால் வரவேற்கப்படும் பதவிநீக்கத் தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதியொருவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கிவிடுவதில்லை. பதவிநீக்கத் தீர்மானத்தின் அர்த்தம் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் குறித்துரைக்கும் சரத்துக்களை ஜனப்பிரதிநிதிகள் சபை பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரித்து, செனட் சபையில் அவர் மீதான விசாரணைக்குக் களம் அமைத்துக்கொடுப்பது என்பதேயாகும்.
செனட் விசாரணைக்குப் பிறகு செனட்டர்கள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீது வாக்களிப்பார்கள். செனட்டர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கினர் (அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 100 பேரில் 67 பேர்) ஆதரவுடன் ஜனாதிபதி குற்றவாளியாகக் காணப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்.
தற்போதைய செனட் சபையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை ஆசனங்கள் (53) இருக்கின்றன. அதேவேளை ஜனநாயகக் கட்சிக்கு இரு சுயேட்சைகள் உட்பட 47 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதன் அர்த்தம் ட்ரம்ப் குற்றவாளியாகக் காணப்பட வேண்டுமானால் தங்களது செனட்டர்கள் எவரும் கட்சியின் தீர்மானத்தை மீறாதிருப்பதை ஜனநாயகக் கட்சியினர் உறுதிசெய்ய வேண்டும்.
அத்துடன் ட்ரம்பை குற்றவாளியாகக் காண்பதற்கு குறைந்தபட்சம் 20 குடியரசுக்கட்சி செனட்டர்கள் ஆதரவளிக்க வேண்டும். காங்கிரஸில் இருக்கின்ற பக்கச்சார்பு மனநிலையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இது சாத்தியமற்ற ஒன்றாகும். ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் குடியரசுக்கட்சியினர் இதுவரையில் நிராகரித்திருக்கிறார்கள். அதனால் ட்ரம்ப் செனட்டில் விடுவிக்கப்படுவார் என்பது பெரும்பாலும் நிச்சயமானதாகும்.
அப்படியானால் ஏன் இந்தப் பதவிநீக்கத் தீர்மானம்?ஜனாதிபதியின் செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதால் பதவிநீக்க செயன்முறைகளை ஆரம்பிக்க வேண்டியது தமது அரசியலமைப்பு ரீதியான கடமை என்று ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் ஒருவருடத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் ஜனப்பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி ஒருவரை மீண்டும் தெரிவு செய்வதா என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கலாம் என்பதே ஜனநாயகக் கட்சியினரின் இந்த வாதத்தின் அடிநாதமாக இருக்கும் செய்தியாகும். இது ட்ரம்பை பொறுத்தவரையிலும் கூட ஒரு தவறான மரபாகவே இருக்கும். அமெரிக்காவில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி என்று ட்ரம்ப் வரலாற்றில் இடம்பெறுவார்.
முதன்முதலாகப் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி அன்ரூ ஜோன்ஸன் (1868) ஆவார். போர் விவகாரச் செயலாளரை அவர் பதவிநீக்கம் செய்தது தொடர்பில் அவருக்கும் காங்கிரஸ_க்கும் இடையிலேற்பட்ட பலப்பரீட்சையை அடுத்தே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது ஜனாதிபதி பில் கிளின்டன் ஆவார். 1998 – 1999 இல் மோனிகா லிவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகைப் பணியாளருடன் கிளின்டனுக்கு இருந்த பாலியல் தொடர்பு விவகாரத்தையடுத்தே அவருக்கெதிராக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விரு ஜனாதிபதிகளும் செனட் சபையில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டனர்.
வாட்டர் கேட் ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி ரிச்சட் நிக்சன் செனட் சபையில் தனது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்து கொண்டதும் அந்த சபையில் பதவிநீக்கத் தீர்மானம் விசாரணைக்கு வரமுன்னரே 1974 ஆம் ஆண்டில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
எனவே தற்போதைய பதவிநீக்கத் தீர்மானம் ஜனாதிபதி ட்ரம்பை ஒரு அரிதான பேர்வழிகளுடன் கூட்டுச்சேர்த்திருக்கிறது. ஆனால் இந்தப் பதவிநீக்கத் தீர்மானம் 2020 ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு தாக்கத்தைச் செலுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வோல்சேட் ஜேர்னல்ஃஎன்.பி.சி.நியூஸ் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வொன்றில் ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க வேண்டுமா என்பது தொடர்பில் அமெரிக்கர்கள் 48 – 48 சதவீதும் என்ற அடிப்படையில் பிளவுபட்டு நிற்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.
குடியரசுக் கட்சியினரில் சுமார் 90 சதவீதமானோர் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கும் அதேவேளை, ஜனநாயக்கட்சியில் 83 சதவீதமானோர் அதை ஆதரிக்கிறார்கள்.
(ஸ்டான்லி ஜொனி – த இந்து) - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment