தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடைய அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள் முயற்சியுங்கள்


17/12/2019  நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு புதிய அர­சாங்கம்  பல்­வே­று­ வ­கை­யி­லான அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற சூழலில்   தமிழ் மக்­களின்  தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பா­கவும்  பல­வ­ழி­க­ளிலும்  பல்­வேறு தரப்­பி­னரும்  கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.  பிரி­ப­டாத நாட்­டுக்குள்  அதி உச்ச  அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மையின் ஊடாக  சக­லரும்  ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் ஒரு அர­சியல் தீர்வு  தமக்கு கிடைக்­க­வேண்டும் என்­பதே தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தி­களின் கோரிக்­கை­யா­கவும் நிலைப்­பா­டா­கவும் இருந்து வரு­கி­றது.
இந்த நிலையில் தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் புதிய அர­சாங்கம்  எவ்­வா­றான நகர்­வு­களை  எடுக்­கப்­போ­கி­றது? எந்­தத்­த­ரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­போகின்­றது என்ற கேள்­வி­களும் பர­வ­லாக எழுப்­பப்­பட்டு வரு­கி­ன்றன.
எனினும் புதிய அர­சாங்கம்  இந்த விட­யத்தில்  எவ்­வா­றான அணு­கு­மு­றையை   முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்­பாக  இது­வரை ஒரு தெளி­வற்­ற ­தன்மை காணப்­ப­டு­கின்­றது.   தற்­போது  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு இன்னும் மூன்­று­ மாதங்கள் காணப்­ப­டு­கின்­றன.  அது­வரை  ஒரு இடைக்­கால  அர­சாங்­கமே தற்­போது அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே அர­சாங்கம்   அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர்  இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­குமா என்­பதும் தெளி­வில்­லாமல் இருக்­கி­றது.
எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ  தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று    தெரி­வித்­தி­ருக்­கிறார். அதன் ஊடாக  தமிழ் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டுமா என்­பதும்  கேள்­வி­யாக இருக்­கி­றது.   இந்த நிலையில் தாம்    தமிழ் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் இந்­திய தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருப்­ப­தாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன்  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இலங்­கையில் வாழும் தமிழ் மக்­க­ளுக்­கென்று உள்­ளக சுய­நிர்­ணய உரிமை உள்­ளது. அவை எந்­த­வித தடை­களும் இன்றி தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும், எனினும் நீண்­ட­கா­ல­மாக எமது சுய உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தை நாம் முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் எமது சுய உரி­மை­களை பெறு­வ­தற்கு நாம் தொடர்ந்து முயற்­சிப்போம். அதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது என்றும்  கூட்­ட­மைப்பின் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
மேலும் அர­சியல் தீர்­வு­க­ளுக்­கான வாய்ப்­பு­களை எதிர்­பார்த்து, அர­சியல் தீர்வு சம்­பந்­த­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட முடி­யாது. வாய்ப்­பு­களைப் பார்த்து நாம் ஒரு­போதும்  அர­சியல் தீர்வைத் தேடிப்­போ­வ­தில்லை.  எமது மக்­க­ளுக்­கான நியா­ய­மான உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் ஒரே நோக்­கத்தில் மட்­டுமே நாம் அர­சியல் செய்­கின்றோம்.
சிங்­கள மக்­க­ளைப்­போன்று  தமிழ் மக்­க­ளுக்கும் அடிப்­படை உரி­மைகள் இருக்­கின்­றன. அந்த உரி­மை­களை வழங்­கினால் தான், நாடு பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற முடியும். அர­சியல் அதி­காரப் பகிர்­வி­னூ­டா­கவே உலகில் உள்ள அனைத்து மக்­களும் சம­மா­கவும் சமா­தா­ன­மா­கவும் வாழ்­கி­றார்­கள்­ எ­னவும்  சம்­பந்தன்  எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறார்.
அது­மட்­டு­மன்றி அர­சியல் தீர்வு விட­யத்தில் எந்த அர­சாங்­கத்­தையும் பகைத்துக் கொள்ள நாம் விரும்­ப­வில்லை. அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­காக, நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக, நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் நாம் எப்­போதும் அர­சாங்­கத்­திற்கு உதவத் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் கால­தா­ம­த­மின்றி தீர்க்­கப்­பட வேண்டும். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது பல தட­வைகள் அவ­ருடன் கலந்­து­ரை­யாடி உள்ளோம். இந்­தி­யா­வுக்குச்  சென்று நாம் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம் எனவும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.
அந்­த­வ­கையில்  கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பல முக்­கி­ய­மான விட­யங்­களை  தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக  வெளி­யிட்­டி­ருக்­கிறார். விரைவில் இந்­தி­யா­விற்கு விஜயம் செய்து தேசிய இனப்­பிரச்­சி­னைக்­கான  தீர்வு தொடர்பில் இந்­தியப் பிர­தமர்  நரேந்­திர மோடி­யு­டனும்  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும்   சம்­பந்தன்  கூறி­யி­ருக்­கிறார்.
ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட பின்னர் முத­லா­வது வெளி­நாட்டு விஜ­ய­மாக கடந்­த ­மாதம் இந்­தி­யா­விற்கு சென்­றி­ருந்தார்.  அப்­போது இந்­தியப் பிர­த­ம­ருடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தையில் 13ஆவது  திருத்த சட்டம் தொடர்பில் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது.    இரு­த­ரப்பு சந்­திப்பின் பின்னர் கருத்து வெளி­யிட்­டுள்ள இந்­தியப் பிர­தமர் மோடி இலங்­கையின் ஜனா­தி­பதி   அர­சி­ய­ல­மைப்பின்  13 ஆவது திருத்த சட்­டத்தை  அமுல்­ப­டுத்­துவார் என நம்­பு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.   அந்­த­வ­கையில்  இந்­தி­யாவும்  இந்த விட­யத்தில்  ஒரு  அக்­க­றை­யுடன் இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே விரைவில் இந்­தி­யா­விற்கு விஜயம் செய்து தேசிய  பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் இந்­திய தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த இருப்­ப­தாக கூட்­ட­மைப்பின் தலைவர் கூறி­யி­ருக்­கிறார்.
இந்த நிலையில் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் அனைத்து தரப்­பி­னரும் கவனம் செலுத்த வேண்டும்.   அபி­வி­ருத்தி எந்­த­ளவு தூரம்  தமிழர் பகு­தி­களில் முக்­கி­யமோ, அதே­போன்று அர­சியல் அதி­கா­ரங்­களும் மிக முக்­கி­ய­மா­னவை என்­பதை உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். அதன் கார­ண­மா­கவே  இலங்­கைக்கு சுதந்­திரம்  கிடைத்­ததி­லி­ருந்தே தமிழ் மக்கள்  அர­சியல் அதி­கா­ரத்தை கோரி­வ­ரு­கின்­றனர்.  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப்  பெறும் நோக்கிலான முன்னெடுப்புகள்  கடந்த காலங்­களில்  பல  வடி­வங்­களில் இடம்­பெற்­றன. எனினும்  அவற்றின் ஊடாக  வெற்­றிக்­க­னியை  பெற­மு­டி­ய­வில்லை. அர­சியல் தீர்வு என்­பது   தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் எட்­டாக்­கனி­யா­கவே இருந்து வரு­கி­றது.
எனினும் தமிழ் தரப்பு பிர­தி­நி­திகள் தற்­போது தமக்­கான தீர்வு தொடர்பில் மிகவும் தெளி­வாக இருக்­கி­றார்கள். இதனை பெரும்­பான்மை அர­சியல்  தலை­மைத்­து­வங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.  குறிப்­பாக பிரி­ப­டாத  பிரிக்­கப்­பட முடி­யாத  நாட்­டுக்­குள்­ளேயே  தமக்­கான அர­சியல்  அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­பதில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.
எனவே அதனை உணர்ந்து  அந்த மக்­களின்  அர­சியல் பிரச்­சி­னைக்­கான  தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு   அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் முன்­வ­ர­வேண்டும். முக்­கி­ய­மாக  புதிய  அர­சாங்­க­மானது அர­சியல் தீர்வு விட­யத்தில்   தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன்  விரைவில் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத­னூ­டாக அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு தீர்­வுத்­திட்டம் உரு­வாக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு  தமிழ் பேசும் மக்­க­ளிடம் உள்­ளது.
அதனால் அந்த இலக்கை நோக்கி அனை­வரும் பய­ணிக்­க­வேண்டும். 70 வரு­டங்­க­ளாக இந்த அர­சியல் தீர்வு பிரச்­சினை நீடித்து வரு­கி­றது. அதனைத் தொடர்ந்தும்   இழு­ப­றி­யான நிலை­மைக்கு நீடிக்­க­வி­டாமல்   ஒரு நியா­ய­மான தீர்வைப் பெறு­வ­தற்கு  முயற்­சிக்­க­வேண்டும்.   இந்த நாட்டில்  அதி­கா­ரப்­ப­கிர்­வுடன்  கூடிய அர­சியல்  தீர்வை ஏற்­ப­டுத்­து­வதன் ஊடா­கவே சிறப்­பான எதிர்­காலத்தை  அடைய முடியும் என   கூட்­ட­மைப்பின் தலைவர் அடிக்­கடி கூறி வரு­கிறார். இதற்கு அவர் பல்­வேறு நாடு­க­ளையும் உதா­ரணம் காட்டுகிறார். எனவே அவர் இது தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கின்ற தரப்பினர் பரிசீலிக்கவேண்டும். பன்முகத்தன்மையில் வெற்றியை காணவேண்டுமாயின்   அனைவரும்   ஒற்றுமையுடன் பயணிப்பது அவசியமாகும்.  ஒற்றுமையுடன் பயணிப்பது என்பது அந்தந்த மக்களின்   உரிமைகளை உறுதிப்படுத்துவதை குறிக்கிறது.  ஒரு மக்கள் பகுதியினர் தமக்கான அரசியல் பகுதியினை கோரும்போது அவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம்.   அதுவும்  அனைத்து மக்களினதும் அங்கீகாரத்துடன் பிரிபடாத நாட்டுக்குள்ளான   தீர்வு முறைமையே தமக்கு தேவை என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்ற விடயத்தையும் அதிகாரத்தரப்பினர் புரிந்துகொள்ளவேண்டும். அதனூடாக விரைவாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் வகையிலான  ஒரு தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு  அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் முயற்சிக்கவேண்டும் என்பதே முக்கியமான தேவையாக காணப்படுகின்றது.
(17.12.2019 இன்றைய வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) நன்றி வீரகேசரி 






No comments: