இலங்கைச் செய்திகள்


நீதிபதி இளஞ்செழியனின் செயலால் மனமுருகிய முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்

யாழ். சுற்­றி­வ­ளைப்பில் 33 பேர் கைது

சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இராஜிநாமா !

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்

அடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்

 வடக்கில் மீண்டும் இரா­ணுவம்









நீதிபதி இளஞ்செழியனின் செயலால் மனமுருகிய முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்

08/08/2017 முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

குறித்த சம்பவத்தை அவதானித்த முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர், நீதிபதியின் இவ்வாறான செயற்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











யாழ். சுற்­றி­வ­ளைப்பில் 33 பேர் கைது

08/08/2017 குடா­நா­டெங்கும் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கை­களில் மொத்­த­மாக 33 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் தெரி­வித்துள்ளது. 
கடந்த சனிக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்­புக்­களில் காங்­கே­சன்­துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்­தி­யங்­களில் இந்த கைது கள் பதி­வா­ன­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக தக­வல்­களை மேற்கோள் காட்டி பொலிஸ்  ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­தது.
குடா­நாட்டின் குட­வத்தை , துன்­னாலை, வேம்­படி, அல்வாய் மற்றும் யாழ். பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் கடந்த ஜூலை 9 ஆம் 10 ஆம் திக­தி­களில் பருத்­தித்­துறை மணல்­காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில்    இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட  சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­ட­வர்­களும், ஜூலை 21 ஆம் திகதி மணல்­காடு பகு­தியில் கட­லோர பாது­காப்புப் பிரி­வினர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக   சுற்­றி­வ­ளைப்பை நெறிப்­ப­டுத்­திய உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 
இத­னை­விட விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் பவல் வாகனம் மீது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்­களும் கைதா­னோரில் அடங்­கு­வ­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது. 
வட­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் உத்­த­ர­வுக்கு அமைய  சனிக்­கி­ழமை  அதி­காலை 4.00 மணி முதல் முற்­பகல் 9.00 மணி­வரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்­டோவின் மேற்­பார்­வையில் இரு நாட்கள்  விஷேட சுற்­றி­வ­ளைப்­புக்கள் இடம்­பெற்­றன. 
இதன் போது , காங்­கே­சன்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மாசிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் வட­ம­ராட்சி, துன்­னாலை கிழக்கு, தெற்கு பகு­தியை மையப்­ப­டுத்­தியும், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்­லெஸின் நேரடி கட்­டுப்­பாட்­டிலும்  யாழ். பகு­தியை மையப்­ப­டுத்­தியும் சுற்றி வளைப்பு நடை­பெற்­றது. இதன்­போது பிராந்­திய பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் வீரர்கள் 100 பேர் வரையில் சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.
காங்­கே­சந்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் மேற்­பார்­வையில் இடம்­பெற்ற சுற்றி வளைப்­புக்கள்  குட­வத்தை , வேம்­படி மற்றும் துன்­னாலை பகு­தி­களில் சுற்­றி­வ­ளைப்­புக்கள் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.
இதன் போது 52 பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஆயுதம் தாங்கி சுற்­றி­வ­ளைப்­புக்­களை முன்­னெ­டுத்­த­துடன் மேலும் சில குழு­வினர் அவ­சியம் ஏற்­படும் போது அப்­ப­கு­தியை சுற்­றி­வ­ளைக்க தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இதன்­போது காங்­கே­சன்­துறை பொலிஸ் அத்­தி­யட்சர் பிரிவில் 13 பேர் கைது செய்­யப்ப்ட்­டனர். இத­னை­விட யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பகு­திக்கு உட்­பட்ட அல்வாய், யாழ். பகு­தியில் வைத்து 20 பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் பவல் வாகனம் மீது தாக்­குதல் நடத்­தியோர், கட­லோர காவல் படை­யி­னரின் மீது தாக்­குதல் நடாத்தி அவர்­களின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்தோர், மணல் காடு பகு­தியில் இளைஞர் ஒருவர் பொலிஸ் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த பின்னர் பிர­தே­சத்தின் அமை­திக்கு பங்கம் ஏற்­படும் வகையில் ையில் பொலிஸ் காவலரணை உடைத்து, வீதிகளில் ரயர் எரித்து கலவரம் புரிந்தோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர், குடி போதையில் வாகனம் செலுத்தியோர், தடை செய்யப்பட்ட கத்திகளை வைத்திருந்தோர், சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியோர் ஆகியோர் அடங்குவதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம்  தெரிவித்தது.  
நன்றி வீரகேசரி











சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இராஜிநாமா !
07/08/2017 வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் குறித்த இராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுகூடலில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி










வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்

08/08/2017 வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று மதியம்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மரக்காரம்பளை  கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நாம் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய நாம் 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

அத்துடன் மழை காலங்களில் இடம்பெயர்வுகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











அடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்
08/08/2017 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுள், பிரதான சந்தேக நபர்  அடையாள அணிவகுப்பில் இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே  குறித்த அணிவகுப்பு இடம்பெற்று சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். புங்குடுத்தீவைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்திருந்தார்.
இந் நிலையிலேயே இன்று நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி, சம்பவ இடத்திற்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் சாரதிகளால் சம்பவம் தொடர்பாக சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி














வடக்கில் மீண்டும் இரா­ணுவம்

12/08/2017 புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்
பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 
ஊழல் மோச­டிகள் குறித்து தற்­போது பேசப்­ப­டு­கின்­றது. கடந்த ஆட்­சி­யாளர் தற்­போ­துள்­ள­வர்­க­ளையும், தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளையும் சுட்­டிக்­காட்டும் படலம் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளது. புதிய ஆட்­சியில் மிகவும் மோச­மான ஒரு செயற்­ப­ாடாக கரு­தப்­படும் பிணை முறிகள் விற்­பனை குறித்து குற்­றச்­சாட்­டுக்­களில் அமைச்சர் இரா­ஜி­னா­மாவும் செய்­தி­ருக்­கின்றார்.
இவ்­வா­றான விட­யங்கள் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் இந்த நாட்டின் ஒரு தேசிய இனத்­திற்கு காணப்­படும் பிரச்­சி­னைகள் பரா­மு­க­மாக தொடரும் நிலை­மையே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற அவ­லத்­தினை யாரும் ஏன் கருத்தில் கொள்­ளா­தி­ருக்­கின்­றார்கள் என்­பதே எனது கேள்­வி­யாகும்.
எத்­த­னையோ தட­வைகள் நாம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக இந்த சபையில் குறிப்­பிட்­டுள்ளோம். அதனை விடவும் அத்­தி­யா­வ­சி­ய­மாக அந்த மக்­க­ளுக்கு அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்ற பல்­வேறு விட­யங்­க­ளையும் முன்­வைத்­துள்ளோம். ஆனால் எதற்­குமே பதிலைக் காண­வில்லை. 
புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. அதன் ஊடாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­படும் என்ற எதிர்­பார்ப்பு எமது மக்­க­ளுக்கு காணப்­பட்­டது.ஆனால் கடந்த காலத்தில்  மிகவும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வொரு விட­ய­மாக காணப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் தற்­போது ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருக்­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 
ஏனைய விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் காட்டும் ஆர்­வத்­தினை தற்­போது அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் காட்­டாது இருக்­கின்­றமை ஐயப்­பாட்­டினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
இவ்­வாறு நிலை­மைகள் காணப்­ப­டு­கின்ற அதே­நேரம் வடக்கில் மீண்டும் இரா­ணு­வத்­தினர் சுற்றி வளைப்­புக்­களைச் செய்யும் செயற்­பா­டு­களும் மக்­களை பதிவு செய்­கின்ற செயற்­பா­டு­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  
கிளி­நொச்­சியில் பல்­ல­வ­ராயன் கட்டு உள்­ளிட்ட பகு­தி­களில் இவ்­வா­றான இரா­ணு­வப்­ப­திவு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. வடக்கின் ஏனைய பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன.
எமது மக்கள் அர­சாங்­கத்­திடம் பெரி­தாக எத­னையும் எதிர்­பார்க்­க­வில்லை. அவர்கள் தமக்­கான வாழ்­வா­தார வச­தி­களை கோரு­கின்­றார்கள். 
நியா­ய­மான தீர்வைக் கோரு­கின்­றார்கள். காணாமல் போன தமது சொந்­தங்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கோரு­கின்­றார்கள். அவற்­றினை அர­சாங்கம் மேற்­கொள்ள முடி­யா­தி­ருப்­பது ஏன்?
அண்­மையில் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த ஐ.நா நிபுணர் ஊடக சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். அதிலே அவர் சில விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். அவை தொடர்பில் வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் தலைப்­புச்­செய்தி பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. 
குறிப்­பாக காணா­மல் ­போ­ன­வர்கள், சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள், திருமலையில் உள்ள நிலக்கீழ் முகாமில் நடைபெற்ற விடயம் ஆகியவை தொடர்பில் உண்மைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 
ஆகவே சர்வதேசமும் எமது மக்கள் கோரும் விடயங்களின் நியாயப்பாட்டினை உணர்ந்துள்ளது. அரசாங்கம் அது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கின்ற பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.  நன்றி வீரகேசரி




No comments: