இலங்கைச் செய்திகள்


இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது

நாட்டில் பாரிய நெருக்­க­டி: 13 இலட்சம் பேர் பாதிப்­பு

கேப்­பாப்­பு­ல­வுவில் 111 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை

இந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை

இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன்









இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது

25/08/2017  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே குறித்த வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்த இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மற்றையவர்  இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறுபேர்  கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 












நாட்டில் பாரிய நெருக்­க­டி: 13 இலட்சம் பேர் பாதிப்­பு

25/08/2017 நாட்டில் ஏற்­பட்­டுள்ள கடும் வரட்­சி­யினால் 13 இலட்­சத்து 23 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.
Image result for கடும் வரட்­சி virakesari
தொடர்ந்தும் வரட்­சி­யான காலநிலை நீடிக்­கு­மாயின் மக்­க­ளுக்கு  நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வதில் பாரிய நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.
நாட்டில் நிலவும் கடும் வரட்­சி­யான கால­நிலை தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.
அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
நாட்டில் நிலவும் கடும் வரட்­சி­யினால் 20 மாவட்­டங்­களைச் சேர்ந்­த மக்கள் பாதிப்­பு­க­ளுக்கு முகம் ­கொ­டுத்­துள்­ளனர். இதன் கார­ண­மாக 13 இலட்­சத்து 23 பேர் தற்­போது வரையில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
யாழ்ப்­பாண மாவட்டத்தில் 1 இலட்­சத்து 28 ஆயி­ரத்து 652 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 928 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 1இலட்­சத்து ஆயி­ரத்து 914 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் 1இலட்­சத்து 64 ஆயி­ரத்து 463 பேரும் மாவட்ட ரீதியில் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
இந்­நி­லையில் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக அர­சாங்கம் 1.5 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­துள்­ளது. திறை­சே­ரி­யி­னூ­டாக குறித்த 1.5 பில்­லியன் ரூபா  நிதி­யினை அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் ஊடாக மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
இருப்­பினும் தொடர்ந்தும் வரட்­சி­யான காலநிலை நீடிக்­கு­மாயின் மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வதில் பாரிய நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும். தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள நிவா­ரண நிதி­யினை இரட்­டிப்­பாக ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­படும் எனவும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
வரட்­சியால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன அண்­மையில் கெப்­பத்­தி­கொல்­லாவ பகு­திக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த போது விடுத்த பணிப்­பு­ரைக்­க­மை­யவே குறித்த உலர் உணவு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 
இதே­வேளை புத்­தளம், குரு­நாகல், கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, அனு­ரா­த­புரம், பொல­ன­றுவை, மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உலர் உணவு நிவா­ரணம் வழங்கு­வ­தற்­காக குறித்த நிதி­யி­லி­ருந்து 1.43 பில்­லியன் ரூபாய் இது­வரை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
மேலும் மட்டக்களப்பு, திருகோண மலை, அம்பாறை, பதுளை, ஹம்பாந் தோட்டை, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் குறித்த மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி









கேப்­பாப்­பு­ல­வுவில் 111 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை

24/08/2017 முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கேப்­பாப்­பு­லவு கிரா­மத்து மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­காக  மேலும் 111 ஏக்கர் காணி­யினை விடு­விப்­ப­தற்கு அவ்­வி­டத்தில் காணப்­ப­டு­கின்ற இராணுவ முகா­மினை பிறி­தொரு இடத்தில் ஸ்தாபிப்­ப­தற்கு தேவை­யான நிதி­யினை ஒதுக்கிக் கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது என்று  அமைச்­சரும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். 
அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கேப்­பாப்­பு­லவு கிரா­மத்து மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­காக  இரா­ணுவ கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன், 
மேலும் 111 ஏக்கர் காணி­யினை விடு­விப்­ப­தற்கு இரா­ணுவ தள­பதி இணக்கம் தெரி­வித்­துள்ளார். அத­ன­டிப்­ப­டையில், அக்­கா­ணிப்­ப­கு­தி­யினை விடு­விப்­ப­தற்காக அவ்­வி­டத்தில் காணப்­ப­டு­கின்ற இராணுவ முகா­மினை பிறி­தொரு இடத்தில் ஸ்தாபிப்­ப­தற்கு தேவை­யான நிதி­யினை ஒதுக்கிக் கொள்­வ­தற்­காக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப் பட்ட யோசனைகளுக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  நன்றி வீரகேசரி 












இந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை
23/08/2017  இலங்­கை­யா­னது   விரைவில் சீனா­வி­னதும் இந்­தி­யா­வி­னதும் பரி­சோ­தனை  மைதா­ன­மாக  மாறப்­போ­கின்­றது.  உலக  நடப்­புக்­களைப் பார்க்­கும்­போது இந்த நிலைமை விரைவில் ஏற்­படும் என்று தோன்­று­கி­றது.  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில்  சீனா காலூன்­றி­யி­ருப்­பதும்  மத்­தள விமான நிலை­யத்தில் இந்­தியா காலூன்­றப்­போ­வதும்  இந்த சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யுள்­ளன என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல  தெரி­வித்தார்.  
அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் ஒன்றை அமைப்­பது என்­பது நூறு­ வ­ரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்த கன­வாகும். அந்­நிய ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இவ்­வா­றா­ன­தொரு திட்டம் காணப்­பட்­டது. ஆனால் கடந்த நூறு  வரு­டங்­க­ளாக அதனை யாராலும் செய்ய முடி­ய­வில்லை. எனினும் முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  இந்தக் கனவை நன­வாக்­கினார் என்றும்   அவர்  குறிப்­பிட்டார். 
மத்­தள விமான நிலை­யத்தை  இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து  அபி­வி­ருத்தி செய்­யப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில்  விப­ரிக்­கை­யி­லேயே  கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல இவ்­வாறு கூறினார்.  
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,-
பொய் ­வாக்­கு­று­தி­களை வழங்­கியே நல்­லாட்சி அர­சாங்கம்   ஆட்­சிக்கு வந்­தது. இன்று அந்த  வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க ­வி­டப்­பட்­டுள்­ளன. தாம் ஏமாற்­றப்­பட்­டுள்ளோம் என்­பதை மக்­களும் உணர்ந்து கொண்­டுள்­ளனர்.  நாடு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  ஆனால்  அர­சாங்­க­மா­னது  தொடர்ந்து நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு  விற்கும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதில்  அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விற்­பனை செய்­யப்­ப­ட­வில்லை என்றும் ஒரு விளக்­கத்தை அர­சாங்கம் அளிக்­கி­றது.  ஆனால் 99 வரு­டங்­க­ளுக்கு  குத்­தகை வழங்­கு­கின்­றது என்­பது அதனை விற்­ப­தற்கே சம­ம­ாகும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். எமது  பேரப்­பிள்­ளை­க­ளுக்­குக்­கூட   இந்த துறை­மு­கத்தின் உரிமை கிடைக்­கப்­போ­வ­தில்லை.  
அது­மட்­டு­மன்றி  அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் அமைப்­பது என்­பது கடந்த நூறு­வ­ரு­ட­கால கன­வா­கவே இருந்து வந்­தது.  காரணம்  அந்­நிய ஆட்­சிக்­காலத்­தி­லேயே  இந்த இடத்தில் ஒரு­ து­றை­மு­கத்தை அமைப்­பது இலங்­கைக்கு பாரிய நன்­மையை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக அமையும் என திட்­ட­மி­டப்­பட்­டது.  ஆனால்  அவர்­களால் கூட அதனை செய்ய முடி­ய­வில்லை.  அத்­துடன்  முன்னாள்  ஜனா­தி­பதி  ஜே. ஆர். ஜய­வர்த்­த­னா­வினால் கூட அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்தை அமைக்க முடி­ய­வில்லை. ஆனால் இந்த  எல்­லா­ வி­ட­யங்­க­ளையும்  உடைத்­தெ­றிந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ
­பக் ஷ அம்­பாந்­தோட்­டையில் துறை­முகத்தை அமைத்தார். அவ்­வாறு அமைத்த துறை­மு­கத்தை இன்று நல்­லாட்சி அர­சாங்கம்  சீனா­வுக்கு வழங்­கி­யுள்­ளது. 
அத்­துடன் நிறுத்­தி­வி­டாமல் அர­சாங்­க­மா­னது  தற்­போது  மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு   வழங்­கப்­போ­வ­தாக  தெரி­விக்­­கின்­றது. இத­னூ­டாக இந்­தி­யாவும்   தென்­னி­லங்­கையில் காலூன்­றப்­போ­கின்­றது. மத்­தள விமான நிலை­யத்­திற்கு 4200 ஏக்கர் காணி  இந்­தி­யா­ வசம் போகப்­போ­கின்­றது.  இதன்­மூலம் எதிர்­கா­லத்தில்  இலங்­கை­யானது  சர்­வ­தே­சத்தின் ஒரு பிடிக்குள்  சிக்­கி­விடும் அபாயம்  இருக்­கி­றது. குறிப்­பாக கூறு­வதென்றால் இலங்­கை­யா­னது இந்­தி­யா­வி­னதும் சீனா­வி­னதும்  பரி­சோ­தனை மைதா­ன­மாக எதிர்­கா­லத்தில் அமை­யப்­போ­வ­தையே இந்த செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இதற்கு ஏற்­றாற்போல் உலக நடப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த உலக நடப்­புக்­க­ளை ­பார்க்­கும்­போது எதிர்காலத்தில் இலங்கையானது  சீனாவினதும் இந்தியாவினதும்  பரிசோதனை விளையாட்டு மைதானமாக  மாறிவிடும் அபாயம் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி திருகோணமலையிலும் இந்தியா காலூன்ற முயற்சிக்கின்றது. அங்கிருக்கும்  எண்ணெய்த்தாங்கிகள் இந்தியாவிற்கு முக்கியமல்ல. மாறாக  திருகோணமலையில்   காணியே  இந்தியா வுக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே இவ்வாறு  சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கிவிடும் அபாயமே இருக்கிறது என்றார்.   நன்றி வீரகேசரி










இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன்

Image result for நீதி­பதி இளஞ்­செ­ழியன் virakesari

21/08/2017 இலங்கை நீதித்­து­றையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் கூடிய விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 
கடமை நேரத்தில் நீதி­மன்­றத்­திலும், அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­திற்கும் இந்த விசேட பாது­காப்பை அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது.
நல்லூர் துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுடன் உட­ன­டி­யாகத் தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்தச் சம்­பவம் பற்­றிய விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பி­லான விட­யங்­க­ளிலும் கூடிய கவனம் செலுத்­தி­யி­ருந்தார். 
அதேநேரம் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர், அத்துல் ஹேசாப் நீதி­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு,  நல்லூர் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் பற்­றிய விப­ரங்களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். 
இத­னை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு அதி­ர­டிப்­படை பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 
யாழ்ப்­பாணம் செம்­மணி புதை­குழி வழக்கு விசா­ர­ணைக்­கான விசேட நீதி­ப­தி­யாக நீதி­பதி இளஞ்­செ­ழியன் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­போது,  ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ரதுங்­க­வினால் அவ­ருக்கு விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 
அச்­ச­மயம் அமெ­ரிக்க தூது­வ­ராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதி­ப­தியின் பாது­காப்பு சம்­பந்­த­மாக விசேட கவனம் செலுத்­தி­யி­ருந்தார். 
நீதி­பதி இளஞ்­செ­ழியன் வவு­னி­யாவில் கட­மை­யாற்­றி­ய­போது, அவ­ருக்கு சிக்மா மோட்டார் சைக்கிள் படை­யணி பாது­காப்பு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 
தற்­போது அவ­ரு­டைய பாது­காப்­புக்­காக விசேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த எட்டுப் பேர் அடங்­கிய குழு­வினர், அவர் நீதி­மன்­றத்தில் கட­மையில் இருக்­கும்­போது பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் கட்டளையின்படி யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அவருடைய வாசஸ்தலத்துக்குப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.  நன்றி வீரகேசரி






No comments: