22/08/2017 ஸ்பெயி­னி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்றின் கீர்த்­திக்கு  பங்கம் விளை­விக்கும் வகையில் அதன் சுவரில் அச்­சு­றுத்தல்  மற்றும் அவ­தூறு செய்யும் வாச­கங்கள் கிறுக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
 அந்­நாட்டின் பார்­சி­லோனா நகரில் பொது­மக்கள் மீது வாக­ன­மொன்றை மோதி  நடத்­தப்­பட்ட தீவி­ர­வாதத் தாக்­கு­த­லொன்­றை­ய­டுத்தே கிர­னடா பிராந்­தி­யத்­தி­லுள்ள மேற்­படி பள்­ளி­வா­ச­லுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
"கொலை­கா­ரர்­களே ,  நீங்கள் உங்கள் நட­வ­டிக்­கைக்கு விலை செலுத்­து­வீர்கள்"  மற்றும்  வட ஆபி­ரிக்­கர்­களை அவ­தூறு  செய்யும் வாச­கங்கள் உள்­ள­டங்­க­லாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சுலோ­கங்கள் அந்த சுவரில்   கிறுக்­கப்­பட்­டி­ருந்­தன.
 அதே­ச­மயம்  முஸ்­லிம்­களை தலையைத் துண்­டித்து படு­கொலை செய்யப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுக்கும்  வாச­கங்களும் காணப்­பட்­டன. இந்­நி­லையில் கிர­ன­டா­வி­லுள்ள பிறி­தொரு பள்­ளி­வாசல் மீது 12  பேரைக் கொண்ட குழு­வொன்று நடத்­திய புகைக் குண்டு தாக்­கு­தலில்  அந்த பள்­ளி­வாசல் முழு­வதும் செம்­மஞ்சள் புகை பர­வி­ய­தா­கவும் இதனால் பீதி­ய­டைந்த வய­து­வந்­த­வர்­களும் சிறு­வர்­களும்  அல­றி­ய­டித்துக் கொண்டு அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளனர்.
 மேற்­படி தாக்­கு­தல்கள் இரண்­டுமே இன­வாதத் தாக்­கு­தல்­க­ளாக கரு­தப்­ப­டு­வ­தாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு  எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் வலது சாரி அமைப்பான ஹொகர் சோசலே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.  நன்றி வீரகேசரி