மரண அறிவித்தல்




மரண  அறிவித்தல் - திருமதி மாலினி ராஜ்குமார்

யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மாலினி (யோக ரஞ்சினி) ராஜ்குமார் அவர்கள் செவ்வாய்க் கிழமை 2017 ம் ஆண்டு மார்ச் மதம் 21 ம் திகதி இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி நடராஜா (அச்சுவேலி) அவர்களின் கனிஷ்ட புதல்வியும் திரு திருமதி பரம்சோதிராஜா (தும்பனை) அவர்களின் மூத்த மருமகளுமாவார். இவர் ராஜ்குமார் அவர்களின் ஆருயிர் மனைவியும் பிரசன்னா, சேகான் அவர்களின் அன்புத் தாயாரும், நேகா, சுபாங்கி ஆகியோரின் மாமியாரும். சோனியா, அமரா அவர்களின் அன்பு பேத்தியுமாவார்.

ஜெகரஞ்சினி, ஜெகஸ்காந்தா, காலம் சென்ற சிவகாந்தா, தனஸ்காந்தா, சுரேஸ்காந்தா ஆகியோரின் அன்புத் சகோதரியும், சிவா செல்லத்துரை, ஆனந்தி, ராஜனி, ரேணுகா, வசந்தி, ஆகியோரின் அன்பு மைத்துனியும், திரு திருமதி விஜய், திரு திருமதி மகேந்திரன் ஆகியோரின் சம்பந்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 2017 மார்ச் மாதம் 25 ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை Pinegrove Crematorium, Kington Street, Michinbury - North Chapel ல் பார்வைக்கு வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் 10:30 முதல் 12:30 வரை இறுதிச் சடங்குகள் இடம் பெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

தகவல் - பரிபுரபவன் தொலை பேசி: 0416226915