.
என்னை எப்போ தமிழில் எழுதப்போரிங்க என்று இங்கு வந்திருக்கும் SBS Renuka Thuraisingham ஒரு முறை கேட்டிருக்கிறார் அப்போ JKyin
‘kollaipuraththu kathalikal’ பாணி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன் .அதன் பிறகு அவர் எழுத்துமேல் காதல் கொண்டேன்.
Wlliam
Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூக
குறைபாடுகளை
கேலிப்பேச்சு அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேகேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக
, Touchstone என்று oru fool,
Shakespearin As you like it நாடகத்தில் அப்பப்ப தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார்
.
Bernard
Shawin Pygmalion நாடகத்தில் Eliza
Doolittle ஒரு சாதாரண பூக்காரி.
அவளின் நடை உடை பேச்சை அடியோடு மாத்தி
, London வாழ் upper class மக்களை திணறவைக்கிறார் Professor
Henry Higgins.
Kandhasaamiyum galaxiyum நாவலில்கதாசிரியர் JK இந்த satirai கையாளுகிறார் அவரின் கதாநாயகன் எப்போதும் அரையில்
சாரம் கட்டி தோளில்
துவாய்
துண்டு போட்டிருப்பார். அதிகாலையில் வளவுக்கு போக சுருட்டு புஹைப்பார். “அய்யய்யோ உலகம் அழியப்போகிது ,” எண்டு மக்கள் அலறியடித்து திண்டாடியபோதும் தில்லுமுல்லு பண்ணற சுமந்திரன், “ஏய்,
மறந்திடாமல் துவாயை
எடுத்து வா,” என்கிறார் . அதன் ரஹஸ்யம் thaan என்ன ?
அதுதான்
அவர்கள் கலக்ஸியில் போறதுக்கு magic carpet
போலும்.
அதே நேரத்தில் அச்சன் குளத்து மைதிலி தின்னவேலி கடையில் காலை உணவு சாப்பிடுறாள். அவள் மனசில் பல குழப்பங்கள். ஆனா பச்சைமிளகாயை கடித்த மாத்திரத்தில் அவளுக்கு ஞானோதயம் பிறக்கவும் , உடனே தன் சிநேகிதருடன் முக நூலில் பகிர்ந்து கொள்ள நினைக்கவும், எங்கள் அருமையான பூமி வெடித்து பொடிபொடியாய் சிதறுகிறது.
கந்தசாமியும் சுமந்திரனும் போடுகிற
கோமாளி விடயங்களை கந்தர்மடத்தில் நாங்கள் பார்த்து சிரித்திட்டோம் வயிறு குலுங்க
. அடுத்து
, நாவலாசிரியர் எங்களுக்கு பால்
மண்டலத்தில்
பிரயாணம் செய்ய வாய்ப்பளிக்கிறார். பயணம் கொழும்பு…யாழ் A9 பாதையிலும் பார்க்க, ரொம்mmbbba smoothaa, aanaa
speed of thought வேகத்தில்
விரைகிறது.
கலக்ஸியிலும் மிஹிந்தர்கள் பண்ணும் அட்டூழியங்களை ஜீரணிக்க
முடியாது தவிக்கிறார்
கந்தசாமி.
அதுகள் இயற்றிய கவிதைகள் கேட்டு கந்தசாமிக்கு வாந்தி வருது.
“பயப்படாதே . நாங்கள் பயணிக்கும் எதிர்காலத்துக்குள் மிஹிந்தர் வர மாட்டாதுகள்," என்கிறார்
சுமந்திரன்
. “ஏன் எனில்
அவர்கள் எதிர்காலத்தின் விளைவுகளை துளியளவும் பொருட்படுத்துவதில்லை." இதைக்கேட்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தாலும், கந்தசாமி சாரத்தையும் துவாயைyum கெட்டியாக பிடிக்கிறார்.
அங்கேயும் mental sumanthiran கந்தசாமியை விட்டபாடில்லை. இவண்டை
தொல்லையா அல்லது Mrs செல்வராணி கணவருக்கு கொடுத்த கருக்கு மட்டை அடியா
மோசம் என்று எனக்கு oru doubt.
இதிலே வரும் விடுப்பு மீன்
பற்றிய தகவலை பிரகாராதிரியிலே வாசித்து எனக்கு
அன்று ராத்திரி துண்டா நித்திரை வரல்லே.
ஒருவர் மூளைக்குள் சென்று அவர் நினைக்கும் அந்தரங்களை கண்டு பிடிச்சு எவ்வளவு சண்டைகளை விளைவிக்கிறது இந்த விடுப்பு மீன்.
இந்தக்கதையில்
இருவர் தத்தம் மனசில்
ஒருவரை ஒருவர் கெட்ட
வார்த்தைகளால் திட்ட, இனக்கலவரத்தில் முடிந்தது
என்று வாசித்தேன். இந்த விடுப்பு மீன் தான்
அநேக அபத்தங்களின் மூல காரணமோ?
இந்த நாவலின் பல இடங்களில் ஏதோ
பதிலை தேடுவதும் பின்னர் அதற்கேற்ற கேள்வியை தெரியாமல் மிஹிந்தர்களும் சபரி மக்களும் அலைகின்றனர். “காலமே ஒரு அபத்தம்
. இந்தப் பிரபஞ்சம் ஒரு அபத்தம்
..." என்கிறார் சுமந்திரன். "எல்லாத்தையும் குழப்புகின்ற அந்தக் கேள்வியை
மட்டும்
..."
மேலே
அவர் பேச்சை கேளாமல் நான்
நாவலை மூடி வைத்தேன்.
அன்று என்
சிந்தனை எல்லாம் 2016 American elections
மேல் தாவியது. அதை விட மாபெரும்
அபத்தம்
வேறென்ன? பட்டம் பதவிக்காக என்னவெல்லாம் இரு தரப்பினரும் கையாளுகிறார்கள்?
அடுத்த நாட் காலை மீண்டும் கந்தசாமியும் கலக்ஸியும் நாவலை திறந்தேன். எங்கே அந்த அச்சன் குளத்து பச்சைமிளகாய் கடித்த மைதிலி? அவளிடம் கேள்வி பதில் தெரிந்து கொள்ளலாம்.
அந்த
நேரம் பார்த்து CNN channelil Donald
Trump mediavukku interview கொடுத்தார். “I am the 45th
American ப்ரெசிடெண்ட் ,” என்று பெலத்த குரலில் கத்திறார்.
Ange
யாரோ ஒருத்தன் mikkai பிடித்து, “Ok, but what was the relevant question for your
answer?”
Donald
Trump திணறுறார்.
அப்போ அந்தப்
paiyan, “neer eththanaiyaavathu American
President?” என்று கேட்கிறான். “இந்த
கேள்வியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கvum.”
ப்ரெசிடெண்ட் Elect முகம் சிவந்து
போகிறது
.
எனக்கு
ரொம்ப நாளா ஒரு ஆசை. சிரிச்சுக்கொண்டே போகணும் எண்டு. ஆனா இந்த நாவலை வாசித்த பின்னர் நான் அவசரப்பட வேண்டாம் என்று தோன்றிச்சு . மீண்டும்
மீண்டும் JK yin
படைப்புகளை
வாசிக்க சந்தர்ப்பம் கிட்டும் என்ற நம்பிக்கையில், மேலே போகிறதை
கொஞ்சம் postpone பண்ணியுள்ளேன்.
அவரின் எழுத்துப்பணி மேன்மேலும் உயரட்டும்
என்று நல்லூர் கந்தனை வேண்டுறேன்.
இந்த
நாவல் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
சகுந்தலா கணநாதன்
No comments:
Post a Comment