அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்துல் ஐப்பார்

.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தூங்காபி மண்டபத்தில் இடம் பெற்றது. ATBC யின் நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில்நுட்ப வியலாளர்கள் என பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில்  ATBC  எதிர் கால செயற்பாடுகள் பற்றிய திட்டங்களைப் பற்றி சிவசம்பு பிரபாகரன்  எடுத்துக் கூறினார் . இந்த வானொலி தற்போது  லாப நோக்கமற்ற சமூக   வானொலியாக  பதியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில்  வானொலி யாளரும்  IBC மற்றும் ,ATBC வானொலிகளில் தற்போது நிகழ்ச்சிகளை  படைத்து வருபவருமான திரு அப்துல் ஐப்பார்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் .
வானொலி பணியில்  தான் பெற்ற அனுபவங்கள் , அரசியல் அனுபவங்கள்  அரசியல் ரீதியான விமர்சனங்களை கையாளும் விதம் என்பன பற்றி  நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.
நிறைவாக  தேநீர் சிற்றுண்டியுடன் கூட்டம் நிறைவுற்றது.









No comments: