மரண அறிவித்தல்



திரு. இ. சேனாதிராஜா (1938 - 2016)

யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இலங்கை தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் முகாமையாளராக இருந்தவரும், பப்புவா நியு கினியில் வாழ்ந்தவரும், சிட்னி Enfieldஐ  வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராசையா சேனாதிராஜா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை தனது 78வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசையா – தங்கம்மாள் தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற ஜெயலக்சுமியின் அன்புக்கணவரும், South Strathfield  ஐச் சேர்ந்த மோகன், மேகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஜிதா, ராஜ்மோகன் ஆகியோரின் மாமனாரும், தங்கரத்தினம் (லண்டன்), கனகாம்பாள் (கிளிநொச்சி), காலஞ்சென்ற இராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நாராயணபிள்ளை, Dr. தர்மலிங்கம், லிலிமலர், நவரஞ்சிதமலர் (வவுனியா), காலஞ்சென்ற இரட்ணசிங்கம், வீரசிங்கம் (யேர்மனி), குலவீரசிங்கம் (லண்டன்), ராஜி தில்லைநடேசனின் (Strathfield) மைத்துனரும், Dr பாஸ்கரனின் (Newcastle) மாமனாரும், Dr. தர்ஷா ஜேம்ஸ், விக்கிஷா விநாயக், மதுரா மயூரதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், லக்சன், விஜே, கிரிஷா, கிஷோரா, ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 06-09-16 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை Liberty Funeral Parlour, 101 South Street, Granville இல் வைக்கப்பட்டு, மறுநாள் புதன்கிழமை (07-09-16) காலை 10.15மணிக்கு Rookwood Crematorium East Chapel, Lidcombe  இல் இறுதிக்கிரிகைள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு மோகன் (0470 358613), மேகலா (9703 5082) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

No comments: