இலங்கைச் செய்திகள்


தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு

கே.பி.யை கைதுசெய்­வ­தற்கு போதிய சாட்­சி­யங்கள் இல்லை

நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து

தமிழ் மொழி கற்க 192 சிங்கள பொலிஸார் இணைவு

31/08/2015 இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து கொண்டனர்.



மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில் ஆரம்பமானது. 

5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர் கல்லூரியிலிருந்து 1400 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேற்யுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸ்ஸாநாயக தமிழ் கற்கை நெறிக்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜினதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். நன்றி வீரகேசரி 





கே.பி.யை கைதுசெய்­வ­தற்கு போதிய சாட்­சி­யங்கள் இல்லை

01/09/2015 தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் சர்­வ­தேச தலைவர் குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இருந்து அவரை கைதுசெய்­வ­தற்கு போது­மான சாட்­சியங்கள் கிடைக்­க­வில்லை என சட்ட மா அதிபர் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.
குமரன் பத்­ம­நாதன் எனும் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ர­விடக் கோரி மக்கள் விடு­தலை முன்­னணி மேன்முறை­யீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விச­ார­ணையில் அரச சட்ட வாதி துஷித் முத­லிகே இதனை மன்­றுக்கு நேற்று அறிவித்தார்.
கே.பி.தொடர்­பி­லான குறித்த வழக்கு நேற்று மேன் முறை­யீட்டு நீதிமன்றின் தலைமை நீதி­பதி விஜித் மலல்­கொட முன்­னி­லையில் மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது மனு­தா­ர­ரான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் விஜித ஹேரத் உள்­ளிட்­ட­வர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி சுனில் வட்­ட­க­லவும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித் முத­லி­கேவும் நீதிமன்றில் ஆஜ­ரா­கினர்.
மனு­தாரர் சார்­பாக குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக 193 குற்றச் சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் அவை தொடர்­பி­லேயே கே.பி.யை கைது செய்ய கோரப்­பட்­டது.
இந் நிலையில் கடந்த பெப்­ர­வரி மாதம் இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட போது குறித்த 193 குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பிலும் விசா­ரணைசெய்து அறிக்கை சமர்­ப்பிக்க நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­துடன் அது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் கோரப்­பட்ட 6 மாத­கால கால அவ­கா­சத்­துக்கும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

நேற்று குறித்த 6 மாத கால அவ­கா­சத்தின் பின்னர் முதன்­மு­த­லாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித் முத­லிகே, கே.பி.க்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்­றன. இது­வரை இடம்­பெற்­றுள்ள விசா­ர­ணை­களில் குற்­ற­வியல் குற்றச் சாட்டு ஒன்று தொடர்பில் அவரை கைது செய்­வ­தற்கு போது­மான எந்த ஆதா­ரங்­களும் கிடைக்­க­வில்லை. எனவே இந்த விசா­ர­ணை­களை நிறைவு செய்ய மெலும் 6 வர­கால கால அவ­க­சத்தை வழங்­கு­மாறு மன்றைக் கோரு­கின்றோம் என்று அறிவித்தார்.
இந் நிலையில் மக்கள் விடு­தலை முன்­னணி சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி சுனில் வட்­ட­கல குறிப்பிடுகையில், விடு­தலை புலி­களின் சர்­வ­தேச தலைவர் என அறி­யப்­பட்ட கே.பி.க்கு எதி­ராக சான்­றுகள் இல்லை என குறிப்­பி­டு­வ­தா­னது கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும், கடந்த அர­சாங்க காலத்தில் அவ­ருக்கு எதி­ராக பகி­ரங்க குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் சட்ட வாதியின் வாதம் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்றும் கூறினார்.
அத்­துடன் குமரன் பத்ம நாத­னுக்கு குற்றச் சாட்­டுக்­க­ளுடன் நேரடி தொடர்பு இல்­லா­வி­டினும், புலிகள் மேற்­கொன்ட பல குற்­றங்­க­ளுக்கும் நிதி, திட்ட உத­வி­களை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட வேண்­டி­யவர் எனவும் அவர் தெரி­வித்தார்.
இந் நிலையில் இரு தரப்பு வாதாங்­க­ளையும் கேட்ட நீதிவான் விஜித் மலல்­கொட, சட்ட மா அதிபர் கோரிய 6 வார­கால அவ­கா­சத்தை வழங்­கி­ய­துடன் வழக்கை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 28 ஆம் திக­திக்கு ஒத்திவைத்தார்.
இந் நிலையில் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வழக்கை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது கே.பி. தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிவான் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










நெற் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையம்: மக்கள் ஆர்ப்பாட்டம்


02/09/2015 மத்தள விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பிரதேச மக்களால் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் மூடைகளை இன்று லொறியில் கொண்டுச் செல்லும் போதே பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி







கோத்தா, துமிந்த, தன­சிறி, உபாலி உள்­ளிட்ட 9 பேருக்கு ஜனா­தி­பதி ஆணைக்குழு அழைப்பு

02/09/2015 முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை - கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­ய­மை­ உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் இவர்­க­ளுக்கு பாரிய ஊழல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மேஜர் ஜென­ரல்­க­ளான பாலித்த பிர­னாந்து, கே.பீ.கொட­வெல, எம்.ஆர்.டப்ள்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளான உபாலி கொடி­கார, துமிந்த சில்வா, தன­சிறி அம­ர­துங்க, ஜனக ரத்­நா­யக்க ஆகி­யோ­ரே இவ்­வாறு அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள் தெரி­வித்­தன.
ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் 550 பேரை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்காக ஈடு­ப­டுத்­தி­யமை, தேர்­தலின் போது அந் நிறு­வ­னத்தின் பணம் 86 லட்சம் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் இந் நபர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ரக்ன லங்கா நிறுவ­னத்தில் வேலை பார்த்த 550 பேர் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்டு அந்த வெற்­றி­டத்­துக்கு சிவில் பாது­காப்பு வீரர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையும் அகற்­றப்­பட்­ட­வர்கள் தேர்தல் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
ரக்ன லங்கா நிறு­வ­னத்தின் ஊழி­யர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அமைப்­பா­ளர்கள் ஊடாக கோட்டை, கொலன்­னாவை, தெஹி­வளை, கடு­வெல, மஹ­ர­கம ஆகிய பிர­தே­சங்­களின் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஈடு­ப­டுத்தியமை, ஊழி­யர்­களின் வெற்­றி­டங்­க­ளுக்கு இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட சிவில் பாது­காப்பு படை­யி­னரை பயன்­ப­டுத்­தி­ய­மை, அவர்­க­ளுக்கு ரக்ன லங்கா சீருடை வழங்­கப்­பட்­ட­மை, அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான ஆயு­தங்­களை உரிமை பத்­தி­ர­மின்றி களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யமை உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இந்த 9 பேரி­டமும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு 800 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்ள நிலையில் விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முறைப்­பாடு இது­வென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.    நன்றி வீரகேசரி 








கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

04/09/2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி







சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து

05/09/2015 எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 இலங்கை பாராளுமன்றத்தில்  அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருப்பது நம்பிக்கையை தருகிறது. 
இலங்கை தமிழருக்கு உரிய அதிகாரம், நீதி கிடைக்க பாடுபடுவேன் என சம்பந்தன் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி



No comments: