உலகச் செய்திகள்


சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்

சிலியில் பூமியதிர்ச்சி, சுனாமி: 10 இலட்சம் பேர் வெளியேற்றம்

சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்

17/09/2015 சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தனது முத­லா­வது வான் தாக்­கு­தலை ஆரம்­பித்­துள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள சர்­வ­தேச கூட்­ட­மைப்பு நாடு­களின் தாக்­கு­தல்­களில் அவுஸ்­தி­ரே­லியா பங்­கேற்­றுள்­ளது.



அவுஸ்­தி­ரே­லி­யாவால் சிரி­யாவில் நடத்­தப்­பட்ட முத­லா­வது வான் தாக்­கு­தலில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வாக­ன­மொன்றும் மசகு எண்ணெய் சேக­ரிப்பு தள­மொன்றும் அழி­வ­டைந்­துள்­ளன.
அவுஸ்­தி­ரே­லிய விமானப் படை­யா­னது ஈராக்­கி­லுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 12 மாதங்களாக தாக்குதல்களை நடத்திவருகிறது.   நன்றி வீரகேசரி 






சிலியில் பூமியதிர்ச்சி, சுனாமி: 10 இலட்சம் பேர் வெளியேற்றம்

17/09/2015 தென்னமெரிக்காவிலுள்ள சிலியில் 8.3 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதையடுத்து கடலில் நாலரை மீட்டர் உயரமான சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. இதனால்  கடலை அண்மித்து வாழ்ந்த சுமார் 10 இலட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பாரிய புவியதிர்வு காரணமாக தலைநகர் சாண்டியாகோவில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பூகம்பத்திலும் சுனாமியிலுமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொகிம்போ, வல்பரைஸோ போன்ற இடங்களில் போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிபர் மிஷெல் பஷெலெட் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், பரந்த அளவிலான அபாயகர ஆழிப்பேரலைகள் ஏற்படலாம் என பசுபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 
பேரு, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளுக்கும் அமெரிக்க கலிபோர்னிய கரைப்பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.  நன்றி வீரகேசரி 


No comments: