இலங்கைச் செய்திகள்


பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பை மையப்­ப­டுத்தி ஆயு­தக்­க­ளை­வுக்­கு சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொள்ள தீர்­மா­னம்

நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

கண்டி பெண் மரணம்: சந்தேகிக்கும் எபோலா மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா

மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு

சற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமானது த.தே.கூ.

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்
=================================================================

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

19/12/2014  இன்று  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த 44 மாணவர்களது வகுப்புத் தடைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக வளவில் எதி;ர்ப்பு ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டனர்.
மேற்படி வகுப்புத்தடை உடன் நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள்கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதே வேளை இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்,
இதில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. பகிடி வதை  காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாகவே இரண்டு வார வகுப்புத் தடை விதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 




கொழும்பை மையப்­ப­டுத்தி ஆயு­தக்­க­ளை­வுக்­கு சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொள்ள தீர்­மா­னம்

19/08/2014  தலைநகர் கொழும்பை மையப்­ப­டுத்திமேல் மாகாணம் முழு­வதும் சட்ட விரோதஆயு­தங்­களை களை­யும் ­நோக்­­கு­டன் விஷேட தேடுதல் நட­வ­டிக்கை ஒன்­றுக்கு பொலிஸ் தலை­மை­யகம் நேற்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது. கடந்த மூன்று மாதங்­க­ளுக்குள் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற ஆயுதமோதல்கள் மற்றும் கொலை­களை கருத்
தில் கொண்டே கொழும்பு குற்­றத்­த­டுப்புப்பொலிஸார் ஊடாக இந்த விஷேட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க பொலிஸ் தலை­மை­யகம் தீர்­மா­னித்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.
கொழும்பு, பொலிஸ் தல­மை­ய­கத்தில் நேற்று நடை பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். இந்த விஷேட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஆரம்­ப­கட்­ட­மாக தகவல் சேக­ரிப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் அது தொடர்பில் 80 பிரத்­தி­யேக புல­னாய்­வா­ளர்கள் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சுட்­டிக்­காட்­டினார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த ஜூன் மாதம் முதல் நேற்று வரை ஆயுத மோதல்கள், தாக்­கு­தல்கள் கார­ண­மாக 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அவர்­களில் 7 பேர் தன்­னி­யக்க ஆயு­தங்­க­ளுக்கும் ஏனைய இரு­வரும் அது தொடர்­பி­லான வேறு தாக்­கு­தல்­க­ளி­னாலும் உயி­ரி­ழந்­துள்­ளனர். கடந்த ஜூன் மாதம் கிராண்ட்பாஸ் பகு­தியில் இரண்டு பேரும் மட்­டக்­கு­ளி பகு­தியில் இரு­வரும், ஜூலை 22 ஆம் திகதி வெல்­லம்­பிட்டி சிங்ஹ புரவில் இரு­வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி பொரளை சிகை­ய­லங்­கார நிலையம் ஒன்றில் ஒரு­வரும் நேற்று கல்­கிஸ்ஸை பகு­தியில் ஒரு­வரும் நவ­க­முவ பகு­தியில் ஒரு­வரும் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இந்த கொலை­களில் பெரும்­பான்­மை­யா­னவை ரீ - 56 ரக துப்­பாக்­கி­யா­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இந்த மர­ணங்­களில் 7 மர­ணங்கள் போதைப் பொருள் தொடர்­பி­லான பிரச்­சி­னையில் நிகழ்ந்­த­வை­யாகும் என்­பது பொலிஸ் விசா­ர­ணை­களில் உறுதிசெய்­யப்­பட்­டுள்­ளன.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தற்­போது மேற்­கொண்­டுள்ள விஷேட சுற்றி­வ­ளைப்­புக்­களால் அச்­ச­ம­டைந்­துள்ள போதைப் பொருள் வர்த்­த­கர்கள் தமது தக­வல்­களை பொலி­ஸா­ருக்கு வழங்­கு­கின்­றனர் என சந்­தே­கிக்கும் போதைப் பொருள் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்கள் தமக்­குள் மோதிக்­கொள்­வ­தா­லேயே இவை பதி­வா­கி­யுள்­ளன. எனினும் எந்­த­வொரு குற்றச் செய­லையும் நாம் அனு­ம­திக்க முடி­யாது.
நேற்று முன் தினம் கல்­கிஸ்­ஸையில் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­னவர் ஒரு அப்­பாவி. அதே போன்று வெல்­லம்­பிட்­டி­யவில் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கிய 16 வயது மாண­வனும் அப்­பாவி. இந் நிலை­யி­லேயே அதி­க­ரித்துச் செல்லும் ஆயுத கலா­சா­ரத்தை கட்­டுப்­ப­டுத்த இன்று (நேற்று) பொலிஸ் தல­மை­யகம் விஷேட தீர்­மானம் ஒன்­றுக்கு வந்­தது.
கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரை உட்­ப­டுத்தி சட்ட விரோத ஆயு­தங்­களை கலையும் செயற்­பாடே அது. நாட­ளா­விய ரீதியில் இந்த சுற்றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள போதும் முதலில் கொழும்பை மையப்­ப­டுத்தி மேல் மாகா­ணத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் தற்­போது 80 புல­னாய்வு அதி­கா­ரி­களை நாம் பணியில் ஈடு­ப­டுத்­தி­யுள்ளோம்.
இதனை சட்ட விரோத ஆயு­தங்கள் தொடர்பில் தகவல் தெரிந்த பொது­மக்­களும் அது தொடர்பில் எமக்கு தகவல் அளிக்க முடியும். சரி­யான தக­வல்­களை வழங்­கு­வோ­ருக்கு பெறும­தி­யான சன்­மானம் வழங்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அவர்கள் தொடர்­பான ரக­சிய தன்­மையும் பாது­காக்­கப்­படும். தகவல் தெரிந்­த­வர்கள் 0112685151 அல்­லது 0112662311 ஆகிய குற்­றத்­த­டுப்புப் பிரிவின் தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு வழங்க முடியும்.
இந்த சுற்­றி­வ­ளைப்­புக்­களில் விஷே­ட­மாக அனு­மதி பத்­திரம் வைத்­துள்ள ஆயுத உரி­மை­யா­ளர்­களும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். ரீ - 56 ரக துப்­பாக்கி பாவ­னைக்கு இது­வரை அனு­மதி பத்­திரம் எந்­த­வொரு தனி நப­ருக்கும் வழங்­கப்­பட்­டி­ராத நிலையில் ஏனைய தன்­னி­யக்க துப்­பாக்­கி­களை வைத்­துள்ளோர் தொடர்பில் மாவட்ட செய­லகம் ஊடாக தகவல்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில் விஷேட சோதனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­வுள்­ளன.
1916 ஆம் ஆண்டின் ஆயுத பாவனை தொடர்பிலான சட்ட திட்டம் 1996 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக 20 வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படவும் வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கவும் சட்டதில் இடமுள்ளது. அத்துடன் குறித்த நபரை அடையாளம் காணப்பட்ட குற்றவாளியாகவும் பதியவும் முடியும். என குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி 










நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

18/08/2014  இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
' இலங்கை- எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்" என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமான இந்த சர்வதேச கருத்தரங்கில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 
குறித்த பாதுகாப்பு கருத்தரங்கில் 66 நாடுகளைச் சேர்ந்த 197 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 350 பாதுகாப்பு மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இக் கருத்தரங்கில் இந்தியப் படைத்தளபதிகளும் சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சிக் குழுவினரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி 







கண்டி பெண் மரணம்: சந்தேகிக்கும் எபோலா மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை

20/08/2014   மத்திய மாகாண ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் நோய் கண்டறியப்படாத நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்த மாதிரி மற்றும் சில உறுப்புகள் 

சிங்கப்பூருக்கு அனுப்பி நோய் தொடர்பான விபரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்தார். 
மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் சபைத் தலைவர் மகிந்த அபேகோன் தலைமையில் பள்ளேகல மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வைத்தியசாலையின் அறிக்கையின் படி குறிப்பிட்ட பெண் காய்ச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கசிந்துள்ளது. அவர் மரணமடைந்த பின்னரும் வாயிலும் மூக்கிலும் தொடர்ந்து இரத்தம் வடிந்துள்ளது. இப்பெண்ணுக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்றே வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இப்பெண் இந்தியாவிற்கு யாத்திரை சென்று திரும்பியவர் என்று தெரிய வந்துள்ளது. 
இவருக்கு ஏற்பட்டிருந்த நோய் எபோலா என ஊர்ஜிதமாக கூற முடியாது. பெரும்பாலும் எலி காய்ச்சலாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
என்றாலும் இந்நோயின் உண்மை நிலையை கண்டறிய இறந்த பெண்ணின் இரத்தம் மற்றும் சில உறுப்பு பகுதிகள் இரசாயன பகுப்பாய்விற்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நன்றி வீரகேசரி 













பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா


20/08/2014   உள்­நாட்டு யுத்தம் முடி­விற்கு கொண்டு வரப்­பட்ட போதிலும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய சர்­வ­தேச செயற்­பா­டுகள் இன்றும் இடம்­பெ­று­கின்­றன. இலங்­கையில் உள்ள குறிப்­பிட்ட சில அர­சியல் கட்­சி­க­ளுடன் நேர­டித்­தொ­டர்­பு­களை புலம்­பெயர் அமைப்­புக்கள் மேற்­கொள்­கின்­றன என யாழ். மாவட்ட கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரி­வித்தார்.
தொடர்ச்­சி­யாக நான்­கா­வது தட­வை­யாக இலங்­கையில் இடம்­பெறும் பாது­காப்புச் செய­ல­மர்வு கொழும்பில் இடம்­பெ­று­கின்ற நிலையில் அதில் உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
இலங்கை கடந்த காலங்­களில் பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­தது. வடக்கு தீவி­ர­வா­தத்தின் போர்­வையில் சூழ்ந்­தி­ருந்த நிலையில் போராட்­டத்தின் மத்­தி­யி­லேயே வடக்­கையும் சிறு­பான்மை மக்­க­ளையும் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காத்­துள்ளோம். இது தான் இலங்­கையின் உண்­மை­யான நிலைமை. இதற்கு மேல் விமர்­சிக்கும் வகையில் இரா­ணு­வத்தின் எந்­த­வொரு செயற்­பா­டு­களும் அமை­ய­வில்லை.
இலங்­கைக்குள் பயங்­க­ர­வாதம் முற்­றாக அழிக்­கப்­பட்ட போதிலும் விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச வலை­ய­மைப்­பினை அழிக்­க­வில்லை. இன்னும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் செயற்­பட்டு வரு­வது நாட்­டிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. விடு­தலைப் புலிகள் செயற்­பட்ட காலத்தில் மத்­திய கிழக்கு பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளு­டனும் ஏனைய சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­து­ட­னான நேரடித் தொடர்­பு­களை மேற்­கொண்­டனர். போதைப்பொருள் வியா­பாரம், ஆட்­க­டத்தல் செயற்­பாடு­களை இவர்கள் மேற்­கொண்­டனர். சர்­வ­தேச அளவில் இயங்­கிய புலம்­பெயர் அமைப்­புக்கள் இன்று அர­சி­ய­லுடன் தொடர்­பு­களை வைத்­துள்­ளன. இவற்­றினை ஆயுத போராட்டம் மூலம் ஒருபோதும் அழிக்க முடியாது.
எனவேஇ சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பும் உத­வி­களும் எமக்கு அவ­சியம். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் முரண்­பாட்­டுடன் செயற்­ப­டு­வது சாத்­தி­ய­மா­காது. மேலும், யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­களில் வடக்கில் உள்ள தமி­ழர்கள் இரா­ணு­வத்தில் இணைந்­துள்­ளனர். குறிப்­பாக இந்த ஆண்டில் 109 தமிழ் பெண்கள் இரா­ணு­வத்தில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இவை பல சந்­தர்ப்­பங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டது. எனினும் தமி­ழர்­களை இரா­ணு­வத்தில் இணைத்­துக்­கொள்ளும் செயற்­பாடு யுத்த முடிவின் பின்னர் இடம்­பெ­ற­வில்லை. 1980 களில் இருந்தே வடக்கின் தமிழ் மக்­களை இரா­ணு­வத்தில் இணைத்­துக்­கொள்ளும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
எனினும் அன்று விடு­தலைப் புலிகள் அதனை விரும்­பாத காரணத்தினாலும் சுய­நல போராட்­டங்­களை ஆரம்­பித்­ததன் கார­ணத்தாலும் சாதா­ரண பொது­மக்­களின் அபி­லா­ஷைகள் முடக்­கப்­பட்­டது. எனினும் இன்று அவர்­க­ளுக்­கான கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. மக்கள் இராணுவத்தினை நேசிக்க ஆரம்பித்துள்ளனர்.
இராணுவம் வெறுமனே ஆயுதம்ஏந்தி போராடுவதற்கு மட்டுமல்ல சிவில் செயற்பாடுகளுக்கும் இவர்கள் தேவைப்படுகின்றனர். பொதுமக்களுடன் வாழ்கின்றமை தவிர சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் எவ்வித தலையீடும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி












மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு

21/08/2014 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றிலேயே மேற்படி எலும்புக் கூடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் உடைகள் என்பனவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதிகளாகவே குறித்த எலும்புக் கூடுகள் இருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நன்றி வீரகேசரி












சற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமானது த.தே.கூ.

21/08/2014 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, இந்­திய தலை­நகர் புது­டில்­லிக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பய­ண­மானது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில், தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் கூட்­ட­மைப்பின் ஊட­கப் ­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், பொன்.செல்­வ­ராஜா மற்றும் சுபாஸ் சந்திரன் ஆகி­யோ­ர­டங்­கிய அறுவர் கொண்ட உயர்­ மட்டக்குழுவே பய­ண­ மேற்கொண்டுள்ளது.
 புது­டில்லி செல்லும் இவ்­வுயர் மட்­டக்­கு­ழு­வா­னது நாளை வெள்ளிக்­கி­ழமை இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்­மா­சு­வ­ராஜை சந்­திக்­க­வுள்­ளது. மறுநாள் சனிக்­கி­ழ­மை­யன்று இந்­தி­யாவின் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ள நரேந்­திர மோடி­யுடன் கூட்­ட­மைப்பு முதன்முதலாக விசேட சந்­திப்பில் பங்­கேற்­க­வுள்­ளது. அத்­துடன் குறித்த காலப்­ப­கு­தியில் புதிய இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­டனும் விசேட பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் கலந்­து­கொள்­ள­வுள்­ளது
நன்றி வீரகேசரி












திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

21/08/2014  பிரதி அமைச்சர்களாக பி. திகாம்பரமும் பிரபா கணேசனும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தேசிய மொழிகள் பிரதி அமைச்சராக பி. திகாம்பரமும் தொழில் தொடர்பு பிரதி அமைச்சராக பிரபா கணேசனும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி









No comments: