.
உள்ளத்து வட்டையின்
உள்ளத்து வட்டையின்
இதயத்து வரம்பில்
குருதி நீராய் நிரம்பியோடும் வாய்காலில்
அழகான் நட்பு (பூ)க்கள்
விரிந்து மனம் வீசிக் கொண்டிருக்கின்றன....!
யாரும் காண்காணிப்பு
இல்லாமலே -
என் -
உள்ளத்து உணர்வுகள்
பாதுகாவலனாய் இருக்கின்றன ..!
'நல்ல நண்பன் உயிர் தோழன்'
வீட்டில் என்னம்மா
நட்புக்கு வரைவிலக்கணம் சொல்வது
என்காதில் தடவியது ..!
கலைமகள்ஹிதாயா ரிஸ்வி
No comments:
Post a Comment