வரைவிலக்கணம் --கலைமகள்ஹிதாயா ரிஸ்வி

.
உள்ளத்து வட்டையின் 
இதயத்து வரம்பில் 
குருதி நீராய் நிரம்பியோடும்  வாய்காலில் 
அழகான்  நட்பு (பூ)க்கள் 
விரிந்து மனம் வீசிக் கொண்டிருக்கின்றன....!

யாரும் காண்காணிப்பு 
இல்லாமலே -
என் -
உள்ளத்து உணர்வுகள்
பாதுகாவலனாய் இருக்கின்றன ..!

'நல்ல நண்பன் உயிர் தோழன்' 

வீட்டில் என்னம்மா 
நட்புக்கு வரைவிலக்கணம் சொல்வது 
என்காதில் தடவியது ..!

கலைமகள்ஹிதாயா ரிஸ்வி 

No comments: