ஜானக பெரேரா கொலை; புலி உறுப்பினருக்கு எதிராக செப். 5இல் தீர்ப்பு

.
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29பேரை குண்டுத் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர், இன்று தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இவருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வழங்கப்படும் என்று வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நுனந்த குமார ரத்நாயக்க கூறினார். புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்தவரும் செங்கலடியைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, குண்டுத் தாக்குதலை நடத்தி ஜானக பெரேரா உட்பட 29பேரை கொலை செய்தார் என்று இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, இன்று இடம்பெற்ற நிலையிலேயே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: