உலகச் செய்திகள்


சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்

ஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை

========================================================================

சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

30/06/2014   சென்னை போரூர் அருகே 11 மாடி கட்­டடம் இடிந்து விழுந்து தரை­மட்­ட­மானதில் பெண் உட்­பட 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கட்­டட இடி­பா­டு­களில் 50 பேர் வரை சிக்­கி­யி­ருப்­பதால் பலி­யா­கியோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் என அஞ்­சப்­ப­டு­கிறது.




போரூரை அடுத்­துள்ள முக­லி ­வாக்கம் பகு­தியில் 11 மாடி­க ளைக் கொண்ட இரண்டு குடி­யி ­ருப்பு கட்­ட­டங்கள் புதி­தாக கட்­டப்­பட்டு வந்­தன. `ப்ரைம் சிருஷ்டி` என்ற தனியார் நிறு­வனம், இக்­கட்­ட­டங்­களை கட்டி வந்­தது. முக­லி­வாக்கம் பகு­தியில் கடந்த சனிக்­கி­ழமை மாலை, புதி­தாக கட்­டப்­பட்டு வந்த இரண்டு கட்­ட­டங்­களில் ஒரு கட்­டடம் முற்­றாக இடிந்து விழுந்­தது.
இச்சம்பவத்தில் கட்­டட தொழி­லா­ளர்கள் உட்­பட 50 பேர் இடி­பா­டு­களில் சிக்கிக் கொண்­டனர்.
காய­ம­டைந்த பலர், மீட்­கப்­பட்டு சிகிச்­சை க்­காக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­ வைக்­கப்­பட்­டனர். அவர்­களில் மதுரை யைச் சேர்ந்த மரு­து­பாண்டி என்­பவர் உயி­ரி ­ழந்தார். இதே­போன்று, சங்கர் என்ற தொழி­லா­ ளரும் சிகிச்சை பல­னின்றி பலி­யா னார். இதேேவளை கட்­டட இடி­பா­டு­க­ளி­லி­ருந்து பெண் ஒருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். மீட்­புப்­பணிகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்றன.
இரும்­புச்­சா­ரங்கள் அதி­க­மாக இருப்­பதால், அவற்றை ஒவ்­வொன்­றாக வெட்­டி­யெ­டுத்து இடி­பா­டு­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்க அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இரவு நேரம் என்­ப­ தாலும், மழை பெய்­தி­ருப்­ப­தா லும் மீட்புப் பணியில் தாம தம் ஏற்­பட்­டி­ரு ப்­ப­தாக தெரி­கி­றது.
இதனால் அரக்­கோ­ணத்­தி­லி­ருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 260 பேர் விபத்து நடந்த மவு­லி­வாக்கம் பகு­திக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு மீட்­புப்­ப­ணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
இத­னி­டையே, பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை 11 ஆக உயர்ந்­துள்­ளது. இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருந்த பெண் உட்­பட இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்­கப்­ப ட்­டன. முதி­யவர் ஒரு­வரின் சடலம் முதல் மாடியில் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது.
தர­மற்ற பொருட்­களால் கட்­டடம் கட்­டப் ­பட்­டதே கட்­டடம் இடிந்­து­விழ காரணம் என முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கள் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தை காண பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், போரூர்- குன்றத்தூர் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நன்றி வீரகேசரி 









புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு

30/06/2014  இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே குறித்த படகிலில் பயணித்த 600 பேரை இத்தாலியக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த 30 பேரும் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக இத்தாலி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி











ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்

02/07/2014   ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா அர­சுக்கு எதிராக சுன்­னி­பி­ரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போரா­ளிகள் உள்­நாட்டு போரில் ஈடு­பட்­டுள்­ளனர். ஈராக் இரா­ணு­வம் பலத்­துடன் உள்­ள போதும் போரா­ளி­களை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.
காரணம் அவர்­க­ளிடம் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள் உள்­ளன. அவற்றை சுன்­னி­பி­ரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்­ளன. மேலும் அந்நாடுகள் அவர்­க­ளுக்கு மறை­முக ஆத­ரவு அளித்து வரு­கின்­றனர். ஈராக் இரா­ணு­வத்தில் உள்ள சுன்­னி­பி­ரிவு வீரர்­களும் போரில் ஈடு­பட மறுக்­கின்­றனர். இது போன்ற கார­ணங்­களால் அர­சுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.
ஈராக்கில் முகா­மிட்­டி­ருந்த அமெ­ரிக்கப டைகள் 2011– ஆம் ஆண்டில் வெளி­யே­றின. அதன்­பி­ற­குதான் அங்கு போரா­ளிகள் கை ஓங்­கி­யது. அங்கு முகா­மிட்­டி­ருந்­த­போது ஆயி­ரக்­க­ணக்­கான அமெ­ரிக்க வீரர்கள் உயி­ரி­ழந்­தனர். பலத்த சேதம் ஏற்­பட்­டது.
தற்­போது நிலை­மையை சமா­ளிக்க மீண் டும் அமெ­ரிக்க உத­வியை ஈராக் நாடி­யது. ஆனால் ஏற்­க­னவே ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வத்தால் உட­ன­டி­யாக அதில் தலை­யிட அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா விரும்­ப ­வில்லை. நிலை­மையை உற்று கவ­னிப்­ப­தாக தெரி­வித்தார். இரா­ணு­வத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறி­வித்தார்.
அதே சம­யத்தில், பக்­தாத்தில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் மற்றும் அங்கு முகா­மிட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை பாது­காக்­கவும்இ அவர்­க­ளு க்கு பயிற்சி அளிக்­கவும் 300 ஆலோ­ச­கர்­களை அனுப்­பு­வ­தாக அறி­வித்தார். அவர்­களில் பலர் அங்கு சென்று ஈராக் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு போர் பயிற்­சி­களை அளித்து வரு­கின்­றனர்.
இதற்­கி­டையே, போரா­ளி­க­ளையும் அவர்­களின் இருப்­பி­டங்­க­ளையும் கண்­கா­ணிக்க ஆளில்லா விமா­னங்கள் பற க்க விடப்­படும் என ஏற்­க­னவே அமெ­ரிக்கா அறி­வித்து இருந்­தது.
அதன்­படி தலை­நகர் பக்தாத் நகரின் மீது அமெ­ரிக்­காவின் ஆளில்லா விமா­னங்கள் பறந்து வட்­ட­மிட்டு வரு­கின்­றன. அவற்றில் ‘ஹெல்­பயர்’ என்ற ஏவு­க­ணைகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்க தூத­ர­கங்­களின் பாது­காப்­புக்­கா­கவே இந்த ஆளில்லா விமா ­னங்கள் பயன்­ப­டுத்­த­ப்ப­டு­கின்­றன என அமெ­ரிக்கா தெரி­வித்­தது.
இந்­நி­லையில், ஈராக்­குக்கு மேலும் 200 இராணுவ வீரர்­களை அனுப்ப அமெ­ரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஒப்­புதல் அளி த்­துள்ளார். இதன்­படி, ஏற்­க­னவே ஈராக்கில் உள்ள 275 அமெ­ரிக்க வீரர்கள், பின்னர் அறி­விக்­க ப்­பட்ட 300 வீரர்கள், தற்­போது அறி­விக்­க ப்­பட்­டுள்ள மேலும் 200 வீரர்கள் என சேர் த்து ஈராக்­குக்கு அமெ­ரிக்கா அனுப்பும் இரா ணுவ வீரர்­களின் மொத்த எண்­ணிக்கை 775 ஆக உயர்ந்­துள்­ளது.
இவர்கள் அனை­வரும் அங்­குள்ள அமெ ரிக்க தூதரகங்கள் மற்றும் தலைநகர் பக் தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலை யம் ஆகியவற்றை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ட்டக னின் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கோன் எப் கிர்பி தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி








ஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை

03/07/2014   ஜெருசலேமில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 17 வயது  இளைஞரின் மரணச்சடங்கு இன்று வியாழக்கிழமை பலஸ்தீனத்தில் இடம்பெற்றது.
மொஹமட் அபு காதிர் என்ற மேற்படி இளைஞன் புதன்கிழமை கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
3 இஸ்ரேலிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழி தீர்க்கும் முகமாக அந்தப்படுகொலை இடம்பெற்றதாக பாலஸ்தீனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து பலஸ்தீன போராளிகளால் இஸ்ரேலின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இஸ்ரேல் பலஸ்தீன் காஸா பிராந்தியத்தின் மீது இன்று வியாழக்கிழமை தொடர்வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸாவிலுள்ள 15 தீவிரவாத தளங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படையினர் இன்று வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
17 வயதான இளைஞன் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு யூத குடியிருப்பாளர்களே காரணம் என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்படி படுகொலையை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேசமயம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹ_  மேற்படி இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் சட்டத்தை தமது கையில் எடுக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
 நன்றி வீரகேசரி






No comments: