கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!
17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
ஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை
"சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'
பொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்
விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்கின்றவர்கள் பழிவாங்கப்படவோ அச்சுறுத்தப்படவோ கூடாது :ஐரோப்பிய ஒன்றியம்
பயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு
புலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்
இந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது
==================================================================
கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு இந்த காலநிலை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
01/07/2014 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரிஇலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!
01/07/2014 இலங்கைக்கு அடுத்த வருடம் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், வடக்கிற்கும் விஜயம் செய்வார் என மன்னார் ஆயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மடு தேவாலய அதிகாரிகளை நேற்றையதினம் பாப்பரசரின் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மடுத்திருத்தல நிர்வாக உத்தியோகத்தர் அருட்தந்தை எமலியானுஸ்பிள்ளை கலந்துகொண்டார்.
இலங்கைக்கான விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் மடுத்திருத்தலத்திற்கும் விஜயம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மடுத்திருத்தலம் மற்றும் வடக்கிற்கான பாப்பரசரின் விஜயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் பின்னர் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
01/07/2014 தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து 3 இந்திய இழுவைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் கடலில் வைத்து கைதுசெய்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த 17 மீனவர்களையும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை மன்னார் நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் இவ் மீனவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரிஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை

பொது பல சேனா அமைப்பை தோற்றுவிக்க முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியான வீஸா வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அந்த வீசாவானது மேலும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கப்பட தயாராக இருந்துள்ளது. இந் நிலையிலேயே அமெரிக்க உயரிஸ்தானிகராலயம் ஊடாக அந் நாட்டின் இராஜாங்க அமைச்சின் தடை தொடர்பான விபரம் ஞானசார தேரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலானது கடந்த வாரம் அமெரிக்க உயரிஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஒருவரூடாக தேரருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் வீசா தடை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ' எனது அமெரிக்கா வீசாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜன நாயகம் தொடர்பில் இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகின்றது. சிங்கள பெளத்தர்கள் இலங்கையில் பெரும்பான்மையானாலும் உலகை பொருத்தவரையில் சிறுபான்மையினராவர். அப்படிப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் குரல் கொடுத்து வரும் எனக்கு அமெரிக்கா செல்வது தடை செய்யப்பட்டுள்ளது' என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கலகொட அத்தே ஞானசார தேரரின் அமெரிக்கா வீசா தடை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க உயரிஸ்தானிகராலயத்துக்கு பொது பல சேனாவும் விஷேட விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தை கேசரி தொடர்புகொண்டு கேட்ட போது, அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு அமைய தனிப்பட்டவர்களின் வீசா விண்ணப்ப விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிடாது என்று தூதரகத்தின் பேச்சாளர் கிறிஸ்டோப்பர் டீல் தெரிவித்தார்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் வன்முறைகளை தொடர்ந்து கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ள நிலையில் 'பேஸ் புக்' நிறுவனமும் அண்மையில் ஞானசார தேரர்,பொதுபல சேனா அமைப்பின் முகப் புத்தக கணக்குகளை முடக்கியிருந்தது. அந்த நிறுவனத்துக்கு குரித்த கணக்குகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையிலேயே இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது.இந் நிலையிலேயே தற்போது கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி"சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'
02/07/2014 இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை முழுநாட்டிற்கும் பரப்பி சர்வதேச அளவில் முஸ்லிம்கள் கொண்டு சென்றுவிட்டனர். பொதுபலசேனாமீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும். எமது தரப்பு நியாயங்களை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாள ருமே செவிமடுத்தனர். வேறு எவரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்பினரும் தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்திரித்தனர். ஆனால்இ தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடாக தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாகவே அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுபலசேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததவாது: ஒரு கிராமத்தில் ஏற்பட்ட சிறிய சண்டை இன்று சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அளுத்கம சம்பவம் ஏற்பட்டதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே காரணம். சிறிய பிரச்சினையாக ஆரம்பித்த விடயம் இறுதியில் இரு இனங்களுக்கிடையிலான கலவரமாக மாற்றப்பட்டுவிட்டது. நடந்த சம்பவம் ஒரு சிறிய சம்பவம். அதை பெரிதுபடுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி இந்த பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத எம்மீது இறுதியில் குற்றம் சுமத்திவிட்டனர்.
இப்போது ஆளும் தரப்பினரும்இ எதிர்க்கட்சியினரும் பொதுபலசேனா அமைப்பினரையே குற்றம் சுமத்தி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் எமக்கு வேதனையாகவும் உள்ளது. உண்மையிலேயே இந்த சம்பவம் ஏன் ஏற்பட்டது என்பதை எவரும் கேட்கவில்லை. நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்தோம். நாட்டில் முஸ்லிம் மதவாதிகளின் தீவிரவாத செயற்பாடுகள் காணப்படுகின்றது என. அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்புகளும் பேருவளைஇ தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்தரித்தனர். ஆனால் தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடான தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றி வைத்துள்ளனர். அதன் விளைவாகவே இன்று அப் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த பொசன் தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பன்சலைக்கு முன்னால் மாடொன்றினை வெட்டி பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டிருந்தனர். இது தொடர்பில் ஏன் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
நாட்டில் இன்று 30 பெளத்த அமைப்புகள் உள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் எண்ணிக்கையில் இது மிகவும் குறைந்த அளவே. ஆயினும் சிறிய தொகை முஸ்லிம்களுக்கு இலங்கையில் 90 முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. இதில் பல அமைப்புகள் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டவை. இவை தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும் வாய் திறக்கவில்லை. நாம் பேசினால் எம்மை இனவாதிகள் என சித்தரிக்கின்றனர். அளுத்கம சம்பவத்திற்கு மூல காரணம் நாம் என்றே இன்று அனைத்து முஸ்லிம் தரப்பும்இ அமைச்சர்களும்இ எதிர்க்கட்சிகளும் குறிப்பிடுகின்றன.
ஆம் இந்த இனக்கலவரத்திற்கு நாம்தான் காரணம். அவ்வாறு பொதுபலசேனா அமைப்பினர்தான் காரணம் என்றால் அதற்காக எம்மை கைது செய்து சட்ட நடவடிக்கைகள் எடுங்கள். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி சிங்கள இளைஞர்களை உடனடியாக விடுவித்துவிட வேண்டும். சம்பவத்தில் ஆயுதமேந்திய முஸ்லிம்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால், கலவரத்தை தடுக்க முயன்ற சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும்இ எதிர்க்கட்சியும்இ பொலிஸும் நாட்டிற்கு உண்மையாக நடக்க வேண்டும். அதைவிடுத்து பொதுபலசேனா அமைப்பின் மீது எவரேனும் கைவைத்தால் இந்த நாடே கொந்தளிக்கும். பொதுபலசேனா என்பது வெறுமனே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொதுபலசேனா என்பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்தையும் சிங்கள மக்களையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்பது பெளத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேலும்இ இந்த நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமும் நாம் எடுத்துக்கூறினோம். ஆயினும் எவரும் இதை கண்டுகொள்ளவில்லை. எனினும்இ எமது முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் ஜனாதிபதியும்இ பாதுகாப்புச் செயலாளருமே கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். பல சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டதை கவனத்திற்கொண்டு நாட்டிற்கு எதிராக ஏற்படவிருந்த அசம்பாவிதங்களை தடுத்தனர். எனினும்இ இதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கும் எமக்கும் தொடர்புகள் இருக்கின்றதென எவரும் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர் சமில லியனகே தெரிவிக்கையில்;
தமிழ் மக்கள் புத்திசாலிகள், நேர்மையானவர்கள் என்று வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தமிழ் மக்கள் நேர்மையானவர்கள்இ புத்திசாலிகள் என்ற நம்பிக்கை சிங்களவர்கள் மத்தியில் இருந்ததன் காரணத்தினாலேயே இன்றும் தமிழர்களுடன் ஒன்றாக வாழ்கின்றனர். எனினும் விக்கினேஸ்வரன் போன்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளினாலேயே தமிழ் - சிங்கள சமூகத்திடையே பிரிவினை ஏற்பட்டு முரண்பாடுகள் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலந்த விதானகே இவ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்;
பாதுகாப்புச் செயலாளர் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்றோ அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு பொதுபலசேனா அமைப்பு உதவ வேண்டுமென்ற அவசியமோ இல்லை. நாட்டில் 30 வருட காலம் இருந்த விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை தனியாக அழித்த ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரினால் இப்போது முஸ்லிம் தீவிரவாதத்தினை அழிக்க எமது உதவி தேவையில்லை. அதேபோல் இனப் பிரச்சினையினை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் செய்யப் பார்க்கின்றனர் இதையும் நாம் முழுமையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரிபொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்
03/07/2014 பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் பொது பல சேனாவின் பின்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்தது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர்
கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேற்படிகுற்றச்சாட்டினை முற்றாக மறுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொது பல சேனா அமைப்பின் பின்னணியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. இது அடிப்படையற்றதாகும். இந்த குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் அவ்வாறானவர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு காலியில் வைத்து எடுக்கப்பட்டவையாகும். இவை 2013 ஆம் அண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் எடுக்கப்பட்டுள்ளது.
காலியில் மெத் செவன எனும் கட்டிடத்தை திறந்து வைக்க சென்ற போதே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அது பொது பல சேனாவின் நிகழ்வு அல்ல. மதிப்புக்குரிய தேரர் கிரம விமலஜோதி அவர்கள் வைத்த அழைப்பினை ஏற்றே அவர் அங்கு சென்றிருந்தார்.
அந்த கட்டிடமானது ஜேர்மனியை சேர்ந்த மைக்கல் ஜே.ஏ. கிரைட் மைனர் என்பவரால் பெளத்த கலாசார மத்திய நிலையத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வுக்கு ருஹுணு பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான பல்லந்தர விமலஜோதி தேரர் தலமைவகித்த நிலையிலும் கிரம விமல ஜோதி தேரரின் அழைப்பிலுமே அவர் அங்கு அந்நிகழ்வுக்காக சென்றிருந்தார்.
மாறாக பொது பல சேனாவின் அழைப்பின் பேரில் அல்ல என குறிப்பிட்டார் இதன் போது ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் முன்வைத்தனர்.
கேள்வி: அந்த நிகழ்வு பொது பலசேனா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றது எனவும் அதில் கோத்தபாய ராஜபக் ஷ கலந்துகொள்கின்றார் எனவும் ஊடகங்கள் நிகழ்வுக்குபல வாரங்களுக்கு முன்னரேயே கூறின. அப்போது கூட அது பொது பல சேனாவின் நிகழ்வு என்பதை மறுக்காத பாதுகாப்பு அமைச்சு அளுத்கம விவகாரத்தின் பின்னர் இவ்வாறு திடீரென விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது ஏன்?
பதில்: விமல ஜோதி தேரரின் அழைப்புக்காகவே பாதுகப்பு செயலாளர் அங்கு சென்றுள்ளார். வேறு காரணங்கள் இல்லை. அப்படி ஊடகங்கள் முன்கூட்டியே செய்தி வெளியிட்டமை தொடர்பிலும் அதனை மறுக்காமை தொடர்பிலும் எனக்கு கருத்து கூற முடியாது.
ஏனெனில் அப்போது நான் இராணுவப் பேச்சாளர் மட்டுமே. நான் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளராக ஏப்ரல் மாதம் முதலே கடமையாற்றுகின்றேன்.
நன்றி வீரகேசரிவிசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்கின்றவர்கள் பழிவாங்கப்படவோ அச்சுறுத்தப்படவோ கூடாது :ஐரோப்பிய ஒன்றியம்
03/07/2014 இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள, சர்வதேச விசாரணைக் குழுவுடன் தொடர்புகொண்டு செயற்படுகின்றவர்கள் பழிவாங்கப்படவோ அச்சுறுத்தப்படவோக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும், ஏற்படுத்த வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐ.நா. வின் விசாரணைக் குழுவுக்கு பின்லாந்து அரசின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம்.
அந்தவகையில் சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதேவேளை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கின்ற நபர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
அத்துடன் இலங்கையில் ஸ்திரதன்மையையும் சமாதானத்தையும், ஏற்படுத்த வேண்டுமாயின் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன் மூலமே நீண்டகால சமாதானத்தை கொண்டுவர முடியும்.
அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் இது முக்கிய நடவடிக்கையாக அமையும்.
இலங்கையானது யுத்தத்துக்குப் பின்னர் ஐந்து வருடகால நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் எதுவும் நிறுத்தப்படக்கூடாது. இந்த விவகாரங்களில் இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்றது.
நன்றி வீரகேசரிபயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு
02/07/2014

இராணுவத்தில் கடந்த மார்ச் மாதம் இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள் தமது மூன்று மாதகால பயிற்சியை இன்றுடன் நிறைவு செய்தனர்.
குறித்த யுதிகள் பயிற்சியை நிறைவு செய்ததை முன்னிட்டு முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆலோசனைக்கு அமைய குறித்த பெண்கள் இராணுவத்தின் பெண்கள் படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.


நன்றி வீரகேசரி
புலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்
04/04/2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கடந்த வியாழக்கிழமை மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலையடுத்தே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினர், முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் சந்தேக நபர் அண்மையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்காம் சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தகவல்களை திரட்டியவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரிஇந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது
04/04/2014 இந்தோனேஷியாவில் ஏ.ரீ.எம். மோசடியில் ஈடுபட்ட நான்கு இலங்கையர்களும் அவர்களுக்கு உதவி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment