உலகச் செய்திகள்


பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்

விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களது புகைப்படங்கள் வெளியீடு

இஸ்ரேல் - காஸா பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு - மோதல்களில் பலியானவர்கள் தொகை 500 ஆக உயர்வு

விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கருதப்படும் 'பக் ஏவுகனை" ரஷ்யாவுக்கு கடத்தும் புகைப்படங்கள் வெளியீடு

விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனத்தின் அப்பாவி இளைஞன்...

தாய்வானில் கோர விமான விபத்து: 51 பேர் பலி

நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்

அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

உக்ரேனிய பிரதமர் பதவி விலகல்


=======================================================

பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்

21/07/2014   பலஸ்­தீன - காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் சனிக்­கி­ழமை இரவு நடத்­திய உக்­கிர ஷெல் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 40 பேர் பலி­யா­ன­துடன் 400 பேருக்கும் அதி­க­மானோர் காய­
ம­டைந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி ஷெல் தாக்­கு­தல்கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் தொடர்ந்­துள்ளன. இஸ்ரேல் ஞாயிற்­றுக்­கி­ழமை ஷியேயா பிர­தே­சத்­தி­லுள்ள சிரேஷ்ட ஹமாஸ் அதி­கா­ரி­யான காலில் அல்-­-ஹே­யாவின் வீட்டை இலக்கு வைத்து நடத்­திய ஷெல் தாக்­கு­தலில் அவ­ரது மகன், மரு­மகள் மற்றும் இரு சிறு­வர்கள் உட்­பட 4 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
மேலும் அன்­றைய தினம் அந்தப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஷெல் தாக்­கு­தல்­களில் பலஸ்­தீன புகைப்­படக்கலைஞர் காலெத் ஹம்மாட் துணை மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் புவாத் ஜபார் ஆகியோர் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
மேற்­படி புகைப்­ப­டக்­க­லை­ஞரும் துணை மருத்­துவ உத்­தி­யோ­கத்­தரும் பய­ணித்த அம்­புலன்ஸ் வண்டி மீதே தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.அவர்கள் இரு­வரும் தாக்­கு­தல்­களில் காய­ம­
டைந்­த­வர்­களை மருத்­து­வ­ம­னைக்குச் கொண்டு செல்லும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டி­ருந்­த­தாக பிராந்­திய அவ­சர சேவைகள் பேச்சாளர் அஷ்ரப் அல்-­-கட்ரா தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் கட்­டா­ருக்கு விஜயம் செய்ய­வுள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் ,பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பாஸை சந்­தித்து பிராந்­திய பதற்ற நிலை குறித்து கலந்­து­
ரை­யா­ட­வுள்ளார்.
இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வன்­முறை மோதல்­களை முடி­வுக்குக் கொண்டு வரும் முக­மாக அந்­தப்­பி­ராந்­தி­யத்­துக்­கான பய­ணத்தை பான் கீ மூன் மேற்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்­கி­றது.
கடந்த 8 ஆம் திகதி ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கையை இஸ்ரேல் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இது­வரை 350க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரு­ம­ள­வானோர் பொது­மக்கள் என ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்­கி­றது.
இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யா­னது கடந்த வியா­ழக்­கி­ழமை காஸா பிராந்­தி­யத்­துக்கு தரைவழி படை­யி­னரை முதன்­மு­த­லாக அனுப்­பி­யி­ருந்­தது.இந்­நி­லையில் ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கு எதி­ரான தரை வழித் தாக்­கு­தல்­களை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எல்லைப் பிராந்தியத்திலான சுரங்கங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைவீரர்களுக்குமிடையே சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரு இஸ்ரேலிய படைவீரர்கள் பலியானார்கள்.
இந்­நி­லையில் காஸா­வி­லுள்ள பாட­சா­லை­களில் தஞ்­ச­ம­டைந்­துள்ள 50,000 க்கு மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் உதவி விநி­யோ­கங்கள் தொடர்பில் பற்­றாக்­கு­றையை எதிர்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை எச்­ச­ரித்­துள்­ளது. காஸாவின் எகிப்­திய மற்றும் இஸ்­ரே­லிய எல்­லை­க­ளுக்கு அருகில் பெரு­ம­ள­வான மக்கள் இடம்­பெ­யர்வு இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் அதி­காரி கூறினார்.
இந்­நி­லையில் இஸ்ரேல் -- காஸா­வுக்கு இடையில் யுத்த நிறுத்­த­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்­காக எகிப்து, கட்டார், பிரான்ஸ் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் முயற்­சிகள் முன்­னேற்­றத்தை எட்­டத் த­வ­றி யி­ருந்­தன.
அதே­ச­மயம் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹு­வுடன் சனிக்­கி­ழமை சந்­திப்பை மேற்­கொண்ட பிரான்ஸ் வெளி­நாட்டு அமைச்சர்,யுத்த நிறுத்­த­மொன்­றுக்கான இணக்­கப்பாட்டை எட்­டு­வ­தற்­கான தனது முயற்சி தோல்வியடைந்­துள்­ள­தாக கூறினார்.
கட்­டாரில் பலஸ்­தீன ஜனா­தி­பதி அப்­பா­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ள பான் கீ மூன் குவைத், எகிப்து, இஸ்ரேல் மற்றும் பலஸ்­தீ­னத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். நன்றி வீரகேசரி 








 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களது புகைப்படங்கள் வெளியீடு

21/07/2014  கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்து சிதறிக் கீழே விழுந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களில் 22 சிறுவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
மேற்படி சிறுவர்கள் தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்கவும்  உறவினர்களை சந்திக்கவும் விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். 
இந்த விமான அனர்த்தத்தில் உயிரிழந்த 3 பாலகர்களில் ஒருவரான கேலா தோஸ் (21 மாதம்) மார்னிக்ஸ் வான் டென் ஹென்ட் (12 வயது) அவரது சகோதரர் பியாஸ் (15 வயது) சகோதரி மார்கயுக்ஸ் (8வயது) இந்தோனேசியாவிலுள்ள தமது பாட்டியின் கல்லறைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த மார்டின் போலிஸன் (5வயது) அவரது சகோதரி ஸ்ரி (3வயது) மலேசியாவைச் சேர்ந்த அப்ஸல் ஜியீ (17வயது) அவரது சகோதரர் அபிப் (19 வயது) மற்றுமொரு சகோதரரான அப்ருஸ் (13வயது) சகோதரியான மார்ஷா (15வயது) சகோதரர்களான மோ மஸ்லின் (12வயது) ஒரிஸ் (8வயது) அவர்களது சகோதரியான எவி (10 வயது) பாலிக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற சகோதரிகளான ரெஸ் துறுக் (10 வயது) எவி (8 வயது) தமது பெற்றோர் மற்றும் இரு சகோதரர்கள் சகிதம் உயிரிழந்த நெதர்லாந்து சகோதரிகளான அமெல் வெல்ஸ் ஜின்ட் விடுமுறை சுற்றுலா மேற்கொண்ட வொதர்  ஸ்மோலென் பேர்க் மற்றும் அவரது சகோதரி கறிஜின் தனது நெதர்லாந்து தந்தை மற்றும் இந்தோனேசிய தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த யெலெனா கிளாறிக் ஹுயிஸென் நெதர்லாந்தைச் சேர்ந்த வான் வெல்ட்ஹுயி ஸன் தம்பதியின் பச்சிளம் பாலகனான மகன் ஆகியோரது புகைப்படங்களே மேற்படி வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ளடங்குகின்றன. நன்றி வீரகேசரி











இஸ்ரேல் - காஸா பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு - மோதல்களில் பலியானவர்கள் தொகை 500 ஆக உயர்வு

21/07/2014   இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்திலுள்ள போராளிகளுக்குமிடையே உடனடி யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. 
மேற்படி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிகெய்ரோ சென்றுள்ள நிலையிலேயே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
காஸா பிராந்தியத்திலான தாக்குதல் நடவடிக்கையை இரு வாரங்களுக்கு முன் இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து 500க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் பலர் பொது மக்களாவர். 
அதேசமயம் இஸ்ரேலிய தரப்பில் 18படை வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேற்படி மோதல்களில் அதிகளவானோர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். அன்றைய தினம் 13 இஸ்ரேலிய படை வீரர்களும் 100 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
 நன்றி வீரகேசரி






விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கருதப்படும் 'பக் ஏவுகனை" ரஷ்யாவுக்கு கடத்தும் புகைப்படங்கள் வெளியீடு

22/07/2014  மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
 நன்றி வீரகேசரி








விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

23/07/2014   கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார்.
அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ரஷ்யர் ஒருவரால் முதன்முதலாக டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் குறிப்பிட்ட நேரத்துக்குள் உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி







இஸ்ரேலியர்களால் சுட்டுக் கொல்லப்படும் பாலஸ்தீனத்தின் அப்பாவி இளைஞன்...

23/07/2014    இஸ்ரேலிய வான் தாக்குதலையடுத்து காணாமல் போன தனது குடும்பத்தினரை தேடிச்சென்ற நிராயுதபாணியான பொதுமகன் ஒருவர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் சுட்டுக்குகொல்லப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
காஸா நகரில் அயலிலுள்ள ஷிஜாயியாஹ் பிரதேசத்தில் பலஸ்தீன ஆதரவு சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான முஹமட் அப்டெல்லாவால் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் கடும் வான் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசத்தில் குறிப்பிட்ட பலஸ்தீன இளைஞருக்கு உதவும் முகமாக அவருடன் தானும் ஏனைய செயற்பாட்டாளர்களும் சென்ற போதே அந்த இளைஞர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் பலியானதாக அப்டெல்லாஸ் கூறினார்.
எனினும் இந்த வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என அதனை வெளியிட்டுள்ள பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி









தாய்வானில் கோர விமான விபத்து: 51 பேர் பலி

23/07/2014   தாய்வானில் அவசரமாக விமானம் தரையிரங்கியபோது ஏற்பட்ட கோர விபத்தில் 51 பேர் பலியாகியுள்ளதோடு 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விமானம் விழுந்த இடத்தில் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இதுகுறித்து தாய்வான் விமானபடை அதிகாரிகள் கூறுகையில். இன்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளான ஜி.ஈ. 222 விமானம் ட்ரான்ஏசியா ஏர்வேய்ஸ்க்கு சொந்தமானது. இதில் 54 பயணிகள் உட்பட நான்கு விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். 
 விமானம் அவசரமாக தரையிரங்க முயன்றபோதே திடீரென விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தனர்.
T
நன்றி வீரகேசரி









நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்

24/07/2014  கிழக்கு உக்­ரே­னிய பிராந்­தி­யத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலே­சிய எம்.எச். 17 விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது சட­லங்கள் நெதர்­லாந்­துக்கு விமா­னத்தில் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளன.
அங்கு அந்த சட­லங்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான பிரேத பரி­சோ­த­னைகள் முன்னெ­டுக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்த 298 பேரில் 193 பேர் நெதர்­லாந்து பிரஜை­க­ளாவர்.
இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் முக­மாக நெதர்­லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களில் 200 பேரின் சட­லங்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்­றிய பகு­தியை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்கள் சட­லங்­களை ஒப்­ப­டைப்­பதை தாம­தப்­ப­டுத்­து­வ­துடன் ஆதா­ரங்­களை மாற்­றி­வ­ரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
விமான அனர்த்தம் இடம்­பெற்று 4 நாட்­களின் பின் சுமார் 200 சட­லங்­க­ளுடன் குளி­ரூட்­டப்­பட்ட புகை­யி­ரதம் உக்­ரே­னிய அர­சாங்கக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கார்கிவ் நகரை செவ்­வாய்க்­கி­ழமை வந்­த­டைந்­தது.இத­னை­ய­டுத்து புதன்­கி­ழமை காலை அவற்றில் 40 சவப்­பெட்­டிகள் கார்கிவ் விமான நிலை­யத்­தி­லி­ருந்த இரு இரா­ணுவ விமா­னங்­களில் ஏற்­றப்­பட்­டன.
இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் தூது­வர்­களும், அதி­கா­ரி­களும், படை­வீ­ரர்­களும் கூடி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.நெதர்­லாந்தின் எயின்­ஹோவன் விமான நிலை­யத்தை புதன்­கி­ழமை மாலை முத­லாவது விமானம் வந்­த­டைந்­துள்­ளது.
இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் நெதர்­லாந்து பிர­தமர் மார்க் ருத்தும் அந்­நாட்டு அரச குடும்­பத்­தி­னரும் சமு­க­ம­ளித்­தி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதே­ச­மயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்­சி­யா­ளர்­களால் மலே­சிய அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட விமா­னத்தின் கறுப்பு பெட்டி தரவு உப­க­ர­ணங்கள் பிரித்­தா­னி­யா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.
அவை பார்ன்­ப­ரோ­வி­லுள்ள விமான விபத்­துக்கள் தலை­மை­ய­கத்தில் பரி­சோ­திக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமானம் சுட்டு வீழ்த்­தப்­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட்­டதில் ரஷ்யா பொறுப்­பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்­தத்தில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டியாக தொடர்பு பட்­ட­தற்­கான சான்று எதுவும் இல்லை என அமெ­ரிக்க சிரேஷ்ட புல­னாய்வு அதி­கா­ரிகள் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.
அமெ­ரிக்க தேசிய புல­னாய்வு பணிப்­பாளர் அலு­வ­ல­கத்தை சேர்ந்த அதி­கா­ரிகள் அந்த விமானம் கிழக்கு உக்­ரேனில் உள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தற்­கான சான்­று­களை சமர்­பித்­துள்­ளனர்.
ரஷ்­யாவின் உத­வி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையின் கீழ் கிழக்கு உக்­ரேனில் இருந்து ஏவப்­பட்ட எஸ். ஏ.11 ஏவு­கணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
நன்றி வீரகேசரி










அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி

24/07/2014   நடு வானில் மாயமகியதாக தெரிவிக்கப்பட்ட  அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் சென்ற 6 விமான ஊழியர்கள் உட்பட  116 பேர் உயிரிழந்துள்ளனர். 
பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து  புறப்பட்ட விமானம் புறப்பட்டு 50 ஆவது நிமிடத்தில் தொடர்பு  துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
நன்றி வீரகேசரி








உக்ரேனிய பிரதமர் பதவி விலகல்

25/07/உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார்.
 
சக்தி வளத்துறையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதற்கான சட்டமொன்றை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற தவறியதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
 
அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன.
 
ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன.
 
மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார்.
 
பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போருக்கு நிதிவசதி அளித்தல் மற்றும் 298 பேர் பலியாவதற்கு காரணமான மலேஷிய எம்.எச். 17 விமான அனர்த்தத்துக்கு பின்னரான நிலைமைகளை கையாளுதல் என்பன தொடர்பில் போராடி வரும் உக்ரேனின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளை பெரிதும் பாதிப்பதாக அமைவதாக கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி





No comments: