இலங்கைச் செய்திகள்


பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்

மலேஷியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் நாடு கடத்தல்

பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதி

நாடு கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் :மனித உரிமை கண்காணிப்பகம்

வவுனியாவில் மாணவனை காணவில்லை

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் ஜனாதிபதி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்






========================================================================

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்

28/05/2014  பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும் யாழ்.மாவட்டத்தில் புதிய படைமுகாம்களை நிறுவுவதற்கென ஏக்கர் கணக்கில் காணிகளை சுவீகரிப்பதில் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இன்றைய தினம்யாழ்.வடமராட்சி அல்வாய் திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர் மூலம் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வியடம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவிக்கையில்,
ஜே - 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அறிந்ததையடுத்து, தானும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வி.சிவயோகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று காணி அளவிடுவதினைத் தடுத்து நிறுத்த முயன்றோம்.
இருப்பினும் இராணுவத்தினர் எங்களை உள்ளே நுழைய விடாமல் இராணுவ வாகனங்களைக் குறுக்காக விட்டிருந்ததுடன், காணிகள் சுவீகரிப்பதற்கான அளவீடுகளையும் மேற்கொண்டனர்.
குறித்த காணிகளுக்குச் சொந்தமான குடும்பங்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் என்பதுடன், அவர்கள் இந்தக் காணிகளை இழந்தால் அவர்களிடம் மீதமாக எதுவுமே இருக்காது. 
இராணுவத்தினர் எடுத்துவரும் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வையேற்படுத்தியுள்ளதோடு இராணுவத்தினர் மீது பகையை மேலும் அதிகரித்துள்ளது என்றும் மாகாண சபைஉறுப்பினர் மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 






மலேஷியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் நாடு கடத்தல்

27/05/2014   மலேஷியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபப்பட்டிருந்த புலி சந்தேக நபர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் கைதுக்கான  காரணம் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக  ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார். 
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அட்டைகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி






பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதி


27/05/2014    பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2015 ஆண்டு ஜனவரி மாதம் பாப்பரசர் இலங்கை வரவுள்ளார்.
அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

நன்றி வீரகேசரி







நாடு கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் :மனித உரிமை கண்காணிப்பகம்

28/05/2014   மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 
அண்மையில் மலேசியாவிலிருந்து மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். 
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எவ்வாறெனினும், நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எனவும், துன்புறுத்தப்படக் கூடாது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இருவருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அகதி அந்தஸ்து வழங்கியுள்ளதுடன் ஏனைய நபருக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த தருணத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். பலவந்தமான அடிப்படையில் மலேசியா குறித்த இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடாத்தும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கண்காணித்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பாகத்தின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பில் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த மலேசியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா பலவந்தமாக நாடு கடத்தியதனை சாதகமாக பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மலேசிய அரசாங்கம் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதனை விடவும், இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   நன்றி வீரகேசரி









வவுனியாவில் மாணவனை காணவில்லை



28/05/2014   வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவன் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரணிக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மகாலிங்கம் ரஜீவன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.



நன்றி வீரகேசரி









கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

28/05/2014    இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும்,தமிழ் மக்களின் காணிகளைப் படையினர் ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஆக்கிரமித்த நிலங்களை மீள ஒப்படைக்கக் கோரியும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை  கவனயீர்ப்புப் போராட்டம்ஒன்று இடம்பெற்றது. 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், வடமாகாணசபை அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன், சு.பசுபதிப்பிள்ளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்றையதினம் திட்டமிட்டபடி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி வீரகேசரி









13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் ஜனாதிபதி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்

28/05/2014   இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்கு 13ஆவது திருத்தச்சட்­டத்­தினை அமுல்­ப­டுத்தி உரிய தீர்வு காணப்­பட வேண்டும். வடக்கு – கிழக்கு பகு­தி­களில் புன­ர­மைப்பு பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­ மோடி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்­தி­யாவின் புதிய பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டிக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நேற்று டில்­லியில் அமைந்­துள்ள ஹைத­ராபாத் மாளி­கையில் இடம்­பெற்­றது.
காலை 10.47 மணி முதல் சுமார் 20 நிமிடம் இந்தப் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. இதன்­போது இலங்கை தமிழர் பிரச்­சினை குறித்தும் இலங்கை இந்­திய மீனவர் விவ­காரம் தொடர்­பிலும் சார்க் நாடுகள் அமைப்பின் எதிர்­கால செயற்­பா­டுகள் குறித்தும் இரு தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டினர்.
இலங்­கையில் புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் குறித்து இந்தச் சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்­தியப் பிர­த­ம­ருக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். இதன்­போது கருத்து தெரி­வித்த இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறும் வடக்கு கிழக்குப் பகு­தி­களில் புனர்­வாழ்வுப் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அர­சியல் தீர்­வுக்கும் இலங்கை இந்­திய மீனவர் பிரச்­சினை தீர்­வுக்கும் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு தொட­ரு­மென்றும் மோடி உறு­தி­ய­ளித்­துள்ளார்.
இந்­தியப் பிர­தமர் மோடியை இலங்கை வரு­மாறு சந்­திப்­பின்­போது ஜனா­தி­பதி மஹிந்த ரா௪­ஜபக் ஷ அழைப்பு விடுத்­துள்ளார். அதை ஏற்­றுக்­கொண்ட இந்­தியப் பிர­தமர் இலங்கை வரு­வ­தற்கு சம்­ம­தமும் தெரி­வித்­துள்ளார்.
இந்தச் சந்­திப்பில் இலங்கை இந்­திய மீனவர் பிரச்­சி­ன­கை்கு நிரந்­தர தீர்வு காண்­பது குறித்து இரு­வரும் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் மீன­வர்­க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் கூட்­டுக்­கு­ழுவின் தொடர்ச்­சி­யான சந்­திப்­புக்கள் தொட­ர­வேண்டும் என்று முடிவும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. தனது பதி­வி­யேற்பு நிகழ்­வுக்கு வருகை தந்­த­மைக்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நன்­றியும் தெரி­வித்­துள்ளார்.
இந்­திய பிர­த­ம­ராக நரேந்­திர மோடி நேற்று முன்­தினம் மாலை பத­வி­யேற்றார். இந்த பத­வி­யேற்பு விழாவில் சார்க் நாடு­களை சேர்ந்த தலை­வர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். இலங்கை ஜனா­தி­ப­தியும் மோடியின் பத­வி­யேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்­நி­லையில் நேற்­றுக்­காலை பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்கு சென்று தனது பொறுப்­பு­களை பிர­தமர் நரேந்­திர மோடி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹைத­ராபாத் இல்லம் சென்ற மோடி அங்கு ஆப்கன் ஜனா­தி­பதி ஹமீத் கர்­சாயை முதலில் சந்­தித்து பேச்சு நடத்­தினார். அத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் மோடி பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.
இச் சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், கால்­நடை வளர்ப்பு மற்றும் கிரா­மிய சமூக அபி­வி­ருத்தி அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான், வெளி­வி­வ­கார அமைச்சின் கண்­கா­ணிப்பு உறுப்­பினர் சஜின்வாஸ் குண­வர்த்­தன, யாழ்ப்­பாண மாந­கர சபையின் மேயர் யோகேஷ்­வரி பற்­கு­ண­ராஜா, ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க, வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் ஷேனுக்கா சென­வி­ரட்ன, இந்­தி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் பிரசாத் காரி­ய­வசம் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இந்­நி­லையில் இரு­வ­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு தொடர்பில் ஜனா­தி­பதி பேச்­சாளர் மற்றும் சர்­வ­தேச ஊடக அலகு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.
இரண்டு தலை­வர்­களும் நெருக்­க­மான விட­யங்கள் குறித்து ஆழ­மாக ஆராய்ந்­தனர். இலங்­கையில் புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள வேலைத்­திட்­டங்கள் குறித்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு விளக்­கினர்.
அத்­துடன் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான மீனவர் பிரச்­சினை தொடர்­பா­கவும் இரண்டு தலை­வர்­களும் பேச்சு நடத்­தினர். இரண்டு நாடு­க­ளி­னதும் மீன­வர்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து இந்தப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வைக் காண்­பது குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். மீன­வர்­க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் கூட்டுக் குழுவின் தொடர்ச்­சி­யான சந்­திப்­புக்கள் தொட­ர­வேண்டும் என்று இரு­வரும் இணங்­கி­யுள்­ளனர்.
தனது பத­வி­யேற்பு விழா­வுக்கு வருகை தந்­த­மைக்கு ஜனா­தி­ப­திக்கு நன்றி தெரி­வித்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி சார்க் நாடுகள் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்­ட­மை­யா­னது எதிர்­கால சார்க் ஒத்­து­ழைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு வலு­வாக அமைந்­துள்­ளது என்று குறிப்­பிட்டார்.
சார்க் நாடுகள் அமைப்பு பிராந்­தி­யத்­துக்கு நன்­மை­களை தரும் பொது விட­யங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் சர்வதேச மேடைகளில் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி இந்தியாவின் தலைமைத்துவம் சார்க் நாடுகளின் திட்டங்களுக்கு தீர்க்கமானதாக அமையும் என்றும் சார்க் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட இலங்கை எதிர்பார்க்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடி­யு­ட­னான சந்­திப்பை தொடர்ந்து இந்­திய ஜனா­தி­பதி பிரணாப் முகர்ஜி மற்றும் வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாஜக தலை­வர்­களை மஹிந்த ராஜ­பக்ஷ சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.
இந்தச் சந்­திப்பு குறித்து கருத்து தெரி­வித்த இந்­திய வெளி­யு­றவு அமைச்சின் செய­லாளர் சுஜாதா சிங், தமிழர் பிரச்­சினை குறித்து பேச்­சு­வார்த்­தை­யின்­போது விவா­திக்­கப்­பட்­டது. இலங்கை வரு­மாறு அந்­நாட்டின் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ விடுத்த அழைப்பை மோடி ஏற்­றுக்­கொண்டார். இந்தச் சந்­திப்பில் 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை துரிதப்படுத்துமாறும் இலங்கை ஜனாதிபதியை மோடி கேட்டுக்கொண்டார். அதேசமயம் இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடருமென்றும் மோடி உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி
































No comments: