இலங்கைச் செய்திகள்

'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"

மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க முயற்சி

சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்
=======================================================================
'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"

01/03/2014 இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று  இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று தான் இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது.
இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
எனினும் அவர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட நலன்சார் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அந்தவகையில் மரணமான கோபிதாஸ் சிறையில் இருக்கும் காலத்தில் அவருக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்தோம்.
அத்துடன் அவரது நிலை குறித்தும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளையே எம்மால் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
;நன்றி வீரகேசரி 




மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க முயற்சி

01/03/2014   மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத்திட்ட பகுதியில் போது தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 1 ஏக்கர் காணியை அரசியல் செல்வாக்கில் சிலர் அபகரிக்க முற்பட்ட போது மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக குறித்த காணி அபகரிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 




சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்

01/03/2014   ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இம்­முறை இலங்­கை­க்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற பதம் உள்­ள­டங்­காது என்றும் சுயா­தீன விசா­ரணை என்ற விடயம் மட்­டுமே இடம்­பெறும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றது.
இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயா­தீன விசா­ர­ணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரி­வித்­தி­ருந்த கருத்தும் சர்­வ­தேச விசா­ரணை கோரப்­ப­ட­மாட்­டாது என்ற விட­யத்தை உறு­தி­ப்ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது.
அத்­துடன் சர்­வ­தேச அரங்கில் முக்­கிய நாடு­க­ளாக கரு­தப்­படும் சீனாவும் ரஷ்­யாவும் இலங்­கை­ககு எதி­ரான தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­த­துடன் இல­ங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தன.
அதன்­படி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் இம்­முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற விடயம் இடம்­பெ­றாது என்றும் சுயா­தீன விசா­ரணை என்ற விட­யமே உள்­ள­டங்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை இலங்கை அர­சாங்­கமும் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­கா­சத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் அர­சாங்கம் பாரி­ய­ளவு முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­வ­தா­கவும் மேலும் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­காசம் தேவை என்றும் இலங்கை அர­சாங்க தரப்பில் கோரப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.
உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்த இந்தக் கூட்டத் தொடரில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பல்­வேறு நாடுகள் தொடர்பில் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளன. ஆரம்ப அமர்வில் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
அந்­த­வ­கையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவ­காரம் தொடர்பில் ஜெனி­வாவில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை உரை­யாற்­ற­வுள்­ள­துடன் விசேட அறிக்கை ஒன்­றையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
அந்­த­வ­கையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா சமர்ப்­பிக்­க­வுள்ள பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு இடம்­பெறும் என்று எதிர்­பார்­கக்ப்­ப­டு­கின்­றது.
அமெ­ரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் ரஷ்­யாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளி­வி­வ­கார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெ­ரிக்­காவின் அமைச்­ச­ரவை உறுப்­பினர் சமந்தா பவர், பிரிட்­டனின் இரா­ஜாங்க மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கன­டாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்­ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
அமைப்­புக்­களை பொறுத்­த­வ­ரையில் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் சர்­மாவும் அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் அன்டர்ஸ் ஜோன்­ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உரை­யாற்­ற­வுள்ளார்.
இம்­முறை கூட்டத் தொடரில் இல­ங் கைக்கு எதி­ராக மூன்­றா­வது தட­வை­யா­கவும் பிரே­ரணை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பிரே­ர­ணைக்கு பிரிட்­டனும் அனு­ச­ரணை வழங்­க­வுள்­ளது. பிரே­ர­ணைக்கு உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் பாரிய இரா­ஜ­தந்­திர முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளன. அதே­வேளை மறு­புறம் இலங்­கையும் உறுப்பு நாடு­க­ளிடம் ஆத­ரவு கோரி படை­யெ­டுத்­துள்­ளது.
வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ் அண்­மையில் சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்­டி­ருந்­த­துடன் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார்.
எனினும் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்பில் இந்­தியா எவ்­வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் வழங்­காத நிலையில் சீனா இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. அத்­துடன் ரஷ்­யாவின் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வொன்று அண்­மையில் இலங்­கை­ககு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் சர்­வ­தேச அரங்கில் இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.
இந்­தி­யா­வா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும் அது­மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் பல்­வேறு அமைச்­சர்­களும் மனித உரிமைப் பேர­வையின் பல்­வேறு உறுப்பு நாடு­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் ஆத­ரவு கோரும் பட­லத்­தையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.
இதே­வேளை அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் ஆத­ரவைப் பெறும் பாரிய இரா­ஜத்­தந்­திர முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த பிரி­ட­டனின் இரா­ஜாங்கஇ சமூக திணைக்­களம், உள்­ளூ­ராட்சி மற்றும் வெளி­வி­வ­காரஇ பொது­ந­ல­வாய அலு­வலகம் ஆகி­ய­வற்­றுக்­கான சிரேஷ்ட அமைச்சர் பரனெஸ் வர்சி பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வெளி­யிட்­டுள்ள உறுப்பு நாடு­க­ளுடன் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றோம். பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வது தொடர்பில் மிகவும் கடின உழைப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம் என்று தெரி­வித்­துள்ளார்.
இலங்­கையின் சார்பில் இம்­முறை ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்ள தூதுக்­கு­ழு­வுக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்­க­வுள்ளார்.
மேலும் தூதுக்­கு­ழுவில் பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க மற்றும் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்கஇ சட்­டமா அதிபர் பாலித்த பெர்­னாண்டோ உள்­ளிட்­ட­வர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர். ஜெனி­வாவில் உள்ள இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்­கவும் இலங்கை தூதுக்­கு­ழுவில் இடம்­பெ­ற­வுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­பட்ட இரண்டு சந்­தர்ப்­பங்­களில் இலங்கை தூதுக்­கு­ழு­வுக்கு பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­கவே தலை­மை­தாங்­கி­யி­ருந்தார். எனினும் இம்­முறை அமைச்சர் சம­ர­சிங்­க­வுக்கு பதி­லாக வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ்.எல். பீரிஸ் தூதுக்­கு­ழு­வுக்கு தலை­மை­தாங்­க­வுள்ளார். அந்­த­வ­கையில் நாளைய தினம் தூதுக்­கு­ழுவின் சில உறுப்­பி­னர்கள் ஜெனிவா பய­ண­மா­க­வுள்­ளனர். அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க எதிர்­வரும் ஒன்பதாம் திக­தியே ஜெனிவா செல்­ல­வுள்ளார்.
இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை இவ்­வாரம் வெளி­யிட்­டி­ருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என்று கூறி­யி­ருந்தார். ஆனால் இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யா­கவே நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்­கையை நிரா­க­ரித்­தி­ருந்­த­துடன் அவரின் அறிக்­கைக்கு கடும் விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தது.
இம்­முறை என்­று­மில்­லா­த­வாறு ஜெனி­வா­வுக்கு ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க விஜயம் மேற்­கொண்டு இலங்­கையின் முன்­னேற்ற நிலை­மைகள் குறித்து பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஜெனிவா சென்ற ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க ஜெனி­வாவில் முக்­கிய கூட்டம் ஒன்றை நடத்­தி­யி­ருந்தார். அந்தக் கூட்­டத்­துக்கு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 47 உறுப்பு நாடு­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 42 உறுப்பு நாடுகள் கலந்­து­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டின் முன்­னேற்ற நிலை­மைகள் குறித்த இந்தக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். இதே­வேளைஇ கற்­ற­றிந்த பாடங்­களும் நல­லி­ணக்­கமும் தொடல்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் தேசிய செயற்­றிட்­டத்தின் தலை­வ­ரா­கவும் லலித் வீர­துங்க இருப்­பதால் இந்த கூட்­டத்தில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்தும் செயற்­பாடு குறித்தும் விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.
ஐ.நா. மனித உரி மை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டி ருந்தார். அதன்போது நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை அவர் மேற்கொண்டி ருந்தார். மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிக ளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடி யேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 13 நாடுகள் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள் வில்லை.
அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடு களும் எதிராக 15 நாடுகளும் வாக்க ளித்திருந்தன.
நன்றி வீரகேசரி 







No comments: