தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா

.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள்!(Photos)

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம்   பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும்
நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, கவியரங்கம, ‘தமிழ் நாயகம்’ – நூற்றாண்டு மலர் வெளியீடு, அடிகளாரின் ‘தமிழ்த்தூது’ நூலின் புத்தாக்கப் பதிப்பு வெளியீடு என்பன இடம்பெறவுள்ளன.
28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் ஆய்வரங்கம் இடம்பெறும். இந்நிகழ்வின் போது நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவரிடையே ஐந்து மாவட்டங்களிலும் ஏககாலத்தில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும்.
28 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு யாழ். திருமறைக் கலாமன்றத் திறந்த வெளியரங்கில் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறும். இதில் பட்டிமண்டபம், திருமறைக் கலாமன்றம் வழங்கும் ‘அற்றைத் திங்கள்’ நாடகம் என்பன சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன.




நன்றி sarithamnews.com

No comments: