இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது: அரசாங்கம்
பேரினவாத செயற்பாடுகளால் மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் களைகட்டின
=======================================================================
இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
10/04/2013 இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா
நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய
இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக
இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கத்
தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி
வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 5ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய
அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை
வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித்
தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த
நட்டஈட்டுத் தொகை புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய
பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய
இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின்
பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாணசபையில்
கூடுதல் ஆசனங்களை வழங்குதல், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன்
ரூபா பண உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய
இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது: அரசாங்கம்
10/04/2013 வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் அவசர தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் உள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேறுமாறு அண்மையில் வடகொரியா கோரியிருந்தது.
இரு
நாடுகளுக்கும் இடையில் யுத்தம் ஏற்படக் கூடிய அபாய நிலைமை
உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் சுமார்
20000த்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
தென் கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு
அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு
தெரிவித்துள்ளது. வடகொரிய எச்சரிக்கை தொடர்பில் துரித கதியில் எவ்வித
தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென் கொரியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், நிiமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் எந்தவொரு தூதரகமும் வடகொரியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லைஎன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நன்றி வீரகேசரி
பேரினவாத செயற்பாடுகளால் மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் களைகட்டின
பொதுவாக முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக
நடவடிக்கைகள் மிக மந்த நிலையிலே இருந்தன. நேற்றும் இன்றும் மடவளை,அக்குறணை
போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சிங்கள் மக்கள் தமது புத்தாண்டுக்
கொண்டாட்டங்களுக்காகப் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் நகரில்
கூடுதலாக சன நடமாட்டத்தையும் காண முடிந்தது.
கடந்த வாரங்களில்
கூடுதலான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து ஹலால் பிரச்சினை காரணமாக மந்த
கதியில் இடம்பெற்ற விற்பனையால் உற்சாகமிழந்து காணப்பட்ட முஸ்லிம்
வர்த்தகர்கள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

பொதுவாக முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மிக மந்த நிலையிலே இருந்தன. நேற்றும் இன்றும் மடவளை,அக்குறணை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சிங்கள் மக்கள் தமது புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகப் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் நகரில் கூடுதலாக சன நடமாட்டத்தையும் காண முடிந்தது.
கடந்த வாரங்களில் கூடுதலான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து ஹலால் பிரச்சினை காரணமாக மந்த கதியில் இடம்பெற்ற விற்பனையால் உற்சாகமிழந்து காணப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
நன்றி வீரகேசரி
![]() |
||||
![]() |
![]() |
- |
இராணுவத்தினரால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ், சிங்கள் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்
இன்று வியாழக்கிழமை கொழும்பு 02 மலே மைதானத்தில் இராணுவத் தளபதி ஜகத்
ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
![]() |
![]() |
- |
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
![]() |
![]() |
- |
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
![]() |
![]() |
- |
|
![]() |
![]() |
- |
(ப |
![]() |
![]() |
- |
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
![]() |
![]() |
- |
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
![]() |
![]() |
- |
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) |
நன்றி வீரகேசரி
லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது
பி.பி.சி

தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்தின் பின் அடித்துக் கொன்ற தந்தை: யாழில் சம்பவம்
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர் குறித்த சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. குறித்த சிறுமியின் பெண்குறி சிதைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தலை, கை கால் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் சீறல் காயங்களும் கண்டல் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே ரூபன் நிலாஞ்சினி (வயது 9) சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தை தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் சடலம் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நன்றி தேனீ

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தடைசெய்ய வேண்டுமெனக்கோரி ராவணா சக்தி என்ற அமைப்பினால் மகஜரொன்று இலங்கை திரைப்படப் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் இலங்கைக்கு எதிராக தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் தமிழகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனை கண்டிக்கும் வண்ணம் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த அமைப்பினால் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் இலங்கையில் திரையிட வேண்டாமெனக் கோரி மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது நன்றி தேனீ
____________________________________________________________________________________________________________
No comments:
Post a Comment