அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விழா 2013 20 .04 13





அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நடாத்தும் தமிழ் எழுத்தாளர் விழா 2013, சிட்னியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முழுநாளாக நடைபெறும் இவ்விழாவில் வெளியிடப்படும் விழா மலருக்கு இலக்கியகர்த்தாக்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 கட்டுரைத் தலைப்புகள்  
அ. தமிழ் வளர்ச்சியில் இசையும் கலையும்
ஆ. இணையமும் தமிழ் இசைவும்.
இ. தமிழ்க் கல்வியில் அடுத்த கட்டம்.

பிரசுரத்திற்கென கிடைக்கப்பெறும் கட்டுரைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் கலந்துரையாடலுக்காக ஆய்வரங்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.  வழமை போல இம்முறையும் மாணவர்களுக்கும், வளர்தோருக்குமென தனித்தனியாக இரு வேறு அமர்வுகள் இடம்பெறுகின்றன.
கட்டுரைகள் A4 தாளில் இரு பக்கங்களுக்கு மேற்படாமல் கணினியில்    ஒருங்குறியில் (யூனிகோட்) தட்டச்சிடப்பட்டு மென் பிரதியாக (Soft copy – Word Format only) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படல் வேண்டும்.  கணினியில் தட்டச்சிட முடியாதவர்கள் கட்டுரைகளை 250 சொற்களுக்கு மேற்படாமல் தாளின் ஒருபக்கத்தில் எழுதி அனுப்பலாம்.
கட்டுரைகளை அனுப்பிவைக்கவேண்டிய இறுதித் தினம் மார்ச் மாதம் 03ஆம் திகதி (03/03/2013) ஆகும்.
விழா இடம்பெறும் இடம் மற்றும் பிற விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்:
            மாத்தளை சோமு –  02 96366674
      சௌந்தரி கணேசன் - 0433 343 007
      திரு திருநந்தகுமார் – 0403534458  
      மின்னஞ்சல்: thirunantha@gmail.com
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்துடன் தொடர்புகொள்ள;
பாடுமீன் சு சிறீகந்தராசா ( தலைவர்) 03 9465 1319

1 comment:

Anonymous said...

விழா நடைபெறும் இடம்: ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலை.
Homebush Boys High School, Bridge Road, Homebush.