துர்க்கை அம்மன் ஆலய தீர்தோர்த்சவம் 10ம் நாள்

.
  துர்க்கை அம்மன் ஆலய 10ம் நாள் அலங்கார உற்சவம் தீர்தோர்த்சவ மாக திங்கட்கிழமை  பகல்  இடம் பெற்றது. தீர்த்த தடாகம் அமைக்கப்பட்டு பூக்களாலும் வாழை தோரணங்களாலும் அதை அலங்கரித்து அம்பாள்  தீர்த்தமாடிய காட்சி கண்கொள்ளா  காட்சியாக இருந்தது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன்  வீதி உலா வந்த காட்சியும் கண்கொள்ளா  காட்சியாக இருந்தது. 

வேலை நாளாக இருந்தும் பக்தர்கள் நிறைந்த விழாவாக இருந்தது. இந்த தீர்த்த உற்சவத்தை காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்திருந்தது.



































No comments: