ஒரு கோடையின் கனவு


.



  
சித்தாந்தன் 

இன்னும் மீதமிருக்கும்
ஒரு கோடையின் கனவு
அந்தியின் நிழலுருக்களாய் அசைகின்றது

நடைவழியில் முகம் திருப்பிய
ஒரு முதியவனின் அகாலப் புன்னகை
தூக்கங்களில் மிதந்து வருகின்றது

'யாரோடும் யாருமில்லை'யென
யாரோ சுவரில் எழுதிய மகா வாக்கியங்கள்
ஞாபகக் காட்டில் புதராய் முளையிடுகின்றன

வேரற்ற கனவு மரத்தின்
இலைகளை உதிர்த்துப் பூக்களைச் சூடும்
சிறுமியின் புன்னகை முகம்
வாழ்வைப் பெரும் கதையாகச் சொல்கிறது

யாரும் உலாவாத நிராதர வெளியில்
இரண்டு பட்ஷிகள்
பசியின்தருணங்களை மேய்கின்றன

இன்னும் இன்னுமாய்
நீளும் பாலையின் எரியும் வர்ணத்தோடு
வாழ்க்கை
ஒரு கொடுங்கனவின்
மூன்று காலத்தோடு
ம்

No comments: