சர்ச்சைகளுக்கு மத்தியில் சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்"


 15/3/2012

பிரித்தானியாவில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ஆம் பாகமாகிய 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால ஆவணப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சனல் 4 வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படத்தை சனல் 4 வெளியிட்டுள்ளது.

இக் காணொளியில் போரின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

வீரகேசரி இணையம்



No comments: