தமிழ் சினிமா

அம்புலி

ampuli_ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".

ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!

அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ ‌அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!
ampuli_2

மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!

திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!

ampuli_3
கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!

ஆக மொத்தத்தில் "அம்புலி", தமிழ் சினிமாவின் "டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!

நன்றி தினக்குரல்

அரவான்

Tuesday, 06 March 2012

 "Aravaan_2வெயில்", "அங்காடித்தெரு" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் மற்றும் ஓர் திரைக்காவியம் தான் "அரவான்"! பல நூற்றாண்டுகளுக்கு முன் களவும், காவலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த தமிழர்களைப்பற்றிய கதைதான் அரவான் மொத்தமும்!



கதைப்படி திருடுவதையே தொழிலாக கொண்ட மக்களை உடைய கொம்பூதி - பசுபதியின் ஊர் பெயரைச் சொல்லி புதிதாக ஒரு கள்வன் அங்கே இங்கே என நிறைய இடங்களில் தன் கைவரிசையை காண்பிக்கிறான். இதனால் இன்னல்களுக்கு உள்ளாகும் பசுபதியும், அவரது ஊர்மக்களும், அவன் யார்? எவர்...? என்று ஒரு பக்கம் தேடிக் கொண்டே மற்றொருபக்கம் குலத்தொழிலான களவையும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு களவில் கொம்பூதி-பசுபதியிடம் கையும் களவுமாக மாட்டுகிறான் அந்த பலே திருடன். அவன் தான் வரிப்புலி எனும் ஹீரோ ஆதி! ஆதியின் கைவரிசையையும், களவாடும் திறனையும் பார்த்து மிரளும் பசுபதி, தான் ஒரு அநாதை எனும் ஆதியை தனது ஊருக்கு அழைத்து வந்து, தனது களவாடும் குரூப்பில் ஒருவர் ஆக்குகிறார். இந்நிலையில் கைதேர்ந்த களவுக்காரனும் கொள்ளையடிக்க முடியாத து‌ணியாத காவலும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஓர் ஊருக்கு ஒரு சவாலாக ஆதியும்-பசுபதியும் தங்களது களவு கூட்டத்துடன் களவாட போகின்றனர். அங்கு திருடி திரும்பும் வழியில் காவல்காரர்களின் கண்ணில் மாட்டிவிடும் இவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி வரும்போது தவறி விழும் பசுபதி மட்டும் அவர்கள் கையில் சிக்கி கொள்கிறார்.


aravaan_780
ப்புறம்? அப்புறமென்ன...? பசுபதியை அத்தனை பேர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு குற்றுயிரும், கொலை உயிருமாக துணிச்சலாக போய், மறுநாள் காலை மீட்டு வருகிறார் ஆதி! அப்படி ஆதி, பசுபதியை தூக்கி வரும் போது அவரை துரத்தி வரும் காவல்காரர் கரிகாலன், ஆதியை பார்த்து டேய் சின்னான் உன்னை விடமாட்டேன்டா என கூவுவது அரைமயக்கத்தில் இருக்கும் பசுபதியின் காதுகளில் விழுகிறது. அதன்பிறகு படுத்த படு‌க்கையாகிவிடும் பசுபதி மீண்டும் எழுந்ததும், அவரது தங்கை சிமிட்டி, ஆதியை காதலிப்பதாக தெரியவருகிறது. அதனால் அரைமனதுடன் ஆதியின் பூர்வீகம் என்ன...? திருடபோய் திரும்பிவந்தபோது துரத்தி வந்த காவல்காரன் கரிகாலன், வரிப்புலி ஆதியை சின்னான் என அழைக்க காரணம் என்ன? தன் தங்கையின் காதலுக்கு பதில் என்ன...? என ஆதியிடம் கேட்கிறார். அதற்கு ஆதி, எனக்கு திருமணமாகிவிட்டது, அதற்குமேல் வேறு எதையும் கேட்காதீர்கள்... என்கிறார். அப்புறம் ஆதி அரவானாக, பலிஆளாகி தப்பி பிழைத்து ஊருக்கு தெரியாமல் வாழ்வதும், உண்மை குற்றவாளியை ஊர் முன் நிறுத்த முடியாமல், போவதும், இறுதிவரை உயிரோடு வாழ்ந்தாரா, இல்லையா என்பதும் தான் அரவான் படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

புகை கூண்டின் வழியாக ஏறி இறங்கி பொத்தினார் போல் மணியக்காரர் வீட்டிற்குள் கொள்ளையடிக்க போகும் காட்சிகளில் தொடங்கி, ஒவ்வொரு சீனிலும் தனது அஜானுபாகுவான உடம்பை வைத்து கொண்டு அசால்ட்டாக நடித்திருக்கும் ஆதிக்கு வைக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! களவிற்குபோன இடத்தில் காவல்காரர்களிடம் மாட்டிக்‌கொள்ளும் பசுபதியை காபந்து செய்ய போகும் காட்சியில், மாட்டு மந்தையில் மாடுகளுடன் மாடுகளாக போய், பசுபதியை மீட்டு, மாட்டின் மேலேயே அவரை படுக்க வைத்தபடி தானும் அமர்ந்து கொண்டு தைரியமாக துரத்தும் குதிரை வீரர்களை தாக்கியபடி திரும்பும் ஒரு காட்சி போதும் ஆதி, அரவானுக்காக எத்தனை உழைத்திருக்கிறார், எத்தனை ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு கட்டியம் கூற! வாவ், ஹேட்ஸ் ஆஃப் ஆதி!

aravann_3
பசுபதி களவாணி-கொம்பூதியாகவே வெற்றிலை காவிபடிந்த பற்களும், மீனாட்சி கொண்டையுமாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கும் ஆதிக்கு இணையான பாத்திரம். அதை ஆதியை விட அழகாகவே செய்திருக்கிறார் மனிதர். ஜல்லிக்கட்டில் தன் ஊர் மானத்தை காக்க ஒற்றை ஆளாக காளையுடன் முட்டி மோதும் காட்சி ஒன்றும் போதும் பசுபதியின் நடிப்பு திறமையை பறைசாற்ற! இனி, இவர் பசுபதி இல்லை... பலேபதி!!

வனப்பேச்சியாக சின்னான்-ஆதியின் காதல் மனைவியாக ப்ளாஷ்‌பேக்கில் வரும் தன்ஷிகாவிற்கு விருதுகள் நிச்சயம்! சிமிட்டி-அர்ச்சனா கவி, ஆதியின் அம்மா ஒச்சாயி டி.கே.கலா, மாத்தூரன்-கரிகாலன், மொசக் காதன், சிங்கம்புலி, வீரணனாக ஆதியின் நண்பராக வரும் திருமுருகன், பாளையக்காரராக வரும் விஜய் சந்தர் உள்ளிட்டவர்களும், சிறப்பு தோற்றத்தில் வந்துபோகும் பரத், அஞ்சலி, ஸ்வேதாமேனன், ஸ்ருதிபிரகாஷ் உள்ளிட்டவர்களும் கூட பாத்திரமறிந்து பளிச் என்று நடித்திருப்பதால் படம் முடிந்து வெகுநேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றனர். ஆனாலும் அரவான் படத்தின் அத்தனை முகங்களையும் கரிசல் மண்ணில் போட்டு புரட்டியெடுத்த மாதிரி காட்டியிருப்பது சுத்த போர்.

பிரபலபாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். பேஷ், பேஷ், சபாஷ்! கார்த்திக்கின் இசை மாதிரியே, சித்தார்த்தின் ஒளிப்பதிவும், விஜய் முருகனின் கலை இயக்கமும் படத்தின் பெரும்பலம்!

சு.வெங்கடேசனின், "களவு இருந்தால் தான் காவலுக்கு வேலை..." உள்ளிட்ட நறுக் - சுறுக் வசனங்களும், வசந்தபாலனின் திரைக்கதை-இயக்கமும் அரவானை தமிழ்சினிமாவுக்கு புதியவனாக காண்பித்திருக்கிறது சில பல ஆங்கிலப் படங்களின் சாயலுடன் (உதாரணம் - மெல் கிப்ஸனின், அபோகலிப்டா) பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருடர்களின் வாழ்க்கையை திகட்ட திகட்ட தந்திருப்பதின் அவசியத்தையும் வசந்தபாலன் காட்டியிருந்தால், அரவான் மேலும் மெச்சும்படி இருந்திருக்கும். ஆனாலும், மரண தண்‌டனைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்திருக்கும் வசந்தபாலனின் அரவான், வித்தியாசமான தமிழ் சினிமாவில் ஒருவன்.
நன்றி தினக்குரல்

No comments: