புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ

.
12/07/2011
நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம் எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது. நாங்கள் நியூஸிலாந்திற்குச் செல்ல வேண்டும்" என எழுதப்பட்ட பதாதைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர்.

"புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென" அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.

அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் வரவேற்கப்படவில்லையென்பதே எங்களது தகவல் என ஜோன் கீ குறிப்பிட்டார்.
வீரகேசரி இணையம்

No comments: