இந்திய மாணவி கற்பழித்துக் கொலை

.
24 வயது இந்திய மாணவி ஒருவர் கடந்த வாரம் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரது உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு சிட்னியில் ஒரு கால்வாய் அருகே வீசப்பட்டிருந்தது. மீடோபேங்க் பூங்கா அருகே கால்வாய் ஒன்றில் சூட்கேஸினுள் ஒரு பெண்ணின் உடல் இருந்ததை மார்ச் 11-ம் தேதி கட்டுமானத் தொழிலாளர்கள்



 பார்த்துள்ளனர்.  பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக உள்ளூர் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இந்திய மாணவி டோஷா தாக்கர் என அடையாளம் காணப்பட்டது.  தாக்கர் சிட்னியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். ஆஸ்திரேலியாவில் அவர் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என தாக்கரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக 19 வயதான டேனியல் ஸ்டானி-ரெஜினால்டு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராய்டனில் தாக்கரின் வீட்டில்  ஸ்டானி வசித்து வந்தார். அவர் ஆஷ்ஃபீல்டு ஹோட்டலில் கைது செய்யப்பட்டு பாரமட்டா உள்ளூர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.



No comments: