திருமுறை முற்றோதல்


திருமுறை முற்றோதல்


உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்



உலக சைவப் பேரவையின் அவுஸ்த்திரேலியாக் கிளையினர் கடந்த நான்கு வருடங்களாக திருமுறை முற்றோதலை ஓவ்வொரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும்; காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடாத்தி வருகின்றனர். அத்துடன் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருமுறைகளிலுள்ள ஒரு பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றது. முதல் நான்கு திருமுறைகளும் முற்றோதல் செய்யப்பட்டு 04.04.2010 ஞாயிற்றுக் கிழமை முதல் ஐந்தாம் திருமுறையின் முற்றோதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை பத்தொன்பதாவது பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18,000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை (Cnr Burlington Rd & Rochester St)

நேரம்: 02.05.10 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை



பேராசிரியர் விஜயலட்சுமி ராமசாமி
                  ((M.A., M.Ed., Ph.D.).)



அவர்கள் வழங்கும் சமயச்சொற்பொழிவு

“திலகவதியாரும் திருநாவுக்கரசரும்”

 
காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்

மேலதிக விபரங்களுக்கு:

 
திரு க சபாநாதன் Tel: 96427767

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406

திரு மா அருச்சுனமணி Tel: 87460635


No comments: