29/04/2015 மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 கைதிகளின் மரண தண்டனையை இந்தோனேஷிய அரசாங்கம் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 12.25 மணிக்கு நிறைவேற்றியுள்ளது.
மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா, பிறேசில், நைஜீரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.