ஆன்மிகப் பயிற்சியின் உண்மையான பலன்

 

ஒரு நிலத்தில் பயிரை அறுவடை செய்ய முன், முதலில் களைகளை அகற்ற வேண்டும்; பின்னர் நிலத்தை உழ வேண்டும்; விதைகளை விதைக்க வேண்டும்; தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறான செயல்முறைகளின் பின்னரே அறுவடை சாத்தியமாகிறது. அதுபோலவே, மனிதனின் இதயம் எனும் நிலமும் முதலில் தீய எண்ணங்களும் தீய உணர்ச்சிகளும் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். அது அன்பால் நீரூட்டப்பட வேண்டும். ஆன்மிகப் பயிற்சிகளால் உழப்பட வேண்டும். அதன் பின்னரே தெய்வீக நாமத்தின் விதைகள் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறே செய்தால் மட்டுமே ஞானம் (தெய்வீக ஞானம்) எனும் அறுவடையை பெறுவதற்கான தகுதி கிடைக்கும்.

இன்றைய காலத்தில், ஆன்மிகப் பயிற்சிகள் போதனைகளை கேட்பதிலேயே முடங்கிக் கிடக்கின்றன; அவற்றைப் நடைமுறைப்படுத்துவதில் இல்லை. கேட்பது ஒரு நோயாகவே மாறியுள்ளது. வெறுமனே கேட்டவுடன், எல்லாவற்றையும் அறிந்தவர்கள் போல பெருமை பேசுகின்றனர். இந்த பைத்தியக்காரமான பெருமை, அவர்களின் அறியாமையை மேலும் ஆழமாக்குகிறது.

ஒருவர் கேட்டதை மீண்டும் மீண்டும் சிந்தித்து ஆராய வேண்டும். அந்த மனனத்தின் பின்னர், நிதித்யாசனம் செய்து, அதாவது கற்றுக் கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை உருவாகும்.

ஆனால் இன்று, மக்கள் உபந்யாசங்களை வெறுமனே கேட்பதிலேயே திருப்தி அடைகின்றனர். இது உண்மையான ஆன்மிக அனுபவத்திற்கோ, இறை உணர்விற்கோ வழிவகுக்காது.

No comments: