நட்சத்திர நடிகர்களின் படங்கள் திரை உலகில் கோலோச்சிக்
கொண்டிருக்கும் காலத்தில் புது நடிகர்கள், இளம் நடிகர்களின் படங்களும் இடையில் ஊடுருவி வெற்றிக் கம்பத்தைப் பிடிப்பது காலத்துக்கு காலம் நடந்து வரும் வாடிக்கை. அந்த வரிசையில் 1966ம் ஆண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இளம் நடிகராக ரவிச்சந்திரன் உருவாகி இருந்தார். இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் காதலிக்க நேரமில்லை வண்ணப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, அப்படம் வெள்ளி விழா படமான நிலையில் , அவரது இரண்டாவது படமான இந்தயக் கமலம் படமும் வண்ணத்தில் வெளி வந்து வெள்ளி விழா படமானது. இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு சக்ஸஸ் படங்களில் நடித்து திரையுலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டார் அவர்.
இந்த வரிசையில் அவருக்கு மற்றுமொரு வெற்றி படமாக அமைத்தப்
படம் குமரிப் பெண். படத்தில் குமரிப் பெண் ஜெயலலிதா என்றால் அவரின் காதலனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இவர்களின் ஜோடிப் பொருத்தம் அவர்கள் இணைந்த இந்த முதல் படத்திலேயே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
படம் குமரிப் பெண். படத்தில் குமரிப் பெண் ஜெயலலிதா என்றால் அவரின் காதலனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இவர்களின் ஜோடிப் பொருத்தம் அவர்கள் இணைந்த இந்த முதல் படத்திலேயே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
படத்தின் கதை அப்படி ஒன்று புதுமையானதல்ல. தலையில் குடுமி, காதில் கடுக்கண் , கையில் வளையல் என்று கிராமத்தில் மாடு மேய்த்து வாழ்ந்து வரும் கந்தன் , கல்லுரி மாணவியான சியாமாளாவால் கிண்டலும் , பரிகாசமும் செய்யப் படுகிறான். ஆனால் அவளின் தாத்தா அவளை திருமணம் செய்யும் படி வற்புறுத்தவே தற்காலிக காதலனாக கந்தனை அவர் முன் கொண்டு வந்து நிறுத்துகிறாள். சில பயிற்சிகள் மூலம் கந்தனை நவீனப் படுத்தி காந்தனாக்கினாலும் அவனது வெகுளித்தனம் அவ்வப்போது வெளிப்போடவே செய்கிறது. இதனிடையே ரங்கநாதனின் சொத்துகளையும், குமரிப் பெண்ணான சியாமளாவையும் அடையத் திட்டமிடும் தேவராஜன் , மேலும் சில சொந்தக்காரர்களை தன் சதித் திட்டத்துக்கு துணை சேர்த்துக் கொள்கிறான். அவனின் சதியால் ரங்கநாதனுக்கு சித்த பிரம்மை என்று அறிவிக்கப்படுகிறது. கந்தனின் தாய் இறக்கிறாள்.அவனும், சியாமளாவும் பிரிகிறார்கள். ஆனாலும் சியாமளாவை இக்கட்டில் இருந்து காப்பாற்ற கந்தன் முனைகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் சியாமளவுக்கு கந்தன் மீது காதல் பிறக்கிறது. தேவராஜனின் திட்டங்களை முறியடிக்க சியாமளாவின் உறவினன் சட்டநாதனும் முயற்சி செய்கிறான். குமரிப் பெண்ணுக்கு காதலனை கரம் பிடிக்க கிடைத்ததா என்பதே மீதி படம்!
பெரிய இடத்துப் பெண் என்று வந்து, குமரிப் பெண்ணாகி,பட்டிக்காடா பட்டணமா என்று உருவாகி, மாட்டுக்கார வேலனாக உலா வந்து, பிறகு கல்யாணமாம் கல்யாணம் ஆகி, சகலகலா வல்லவன் என்று உருவெடுத்து ரசிகர்களை கலா காலமும் கவர்ந்த கதை என்றாலும் நடிகர்களே படத்துக்கு படம் மாறி இருந்தார்கள். ஆனால் எல்லா படங்களும் வெற்றி பெறவே செய்தன. அந்தளவுக்கு தமிழ் பட ரசிகர்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தது.
படத்துக்கான கதை வசனத்தை டி . என். பாலு எழுதியிருந்தார். அது வரை தெய்வத்தாய் , ஆசைமுகம், இரவும் பகலும் படங்களுக்கு கதை மட்டும் எழுதிய பாலு முதல் முறையாக இப் படத்தின் மூலம் வசனகர்த்தாவானார். வசனங்களும் எடுபட்டன .
கண்ணதாசன் பாடல்களுக்கு எம். எஸ் . விஸ்வநாதன்
இசையமைத்தார். வருஷத்தைப் பாரு 66 உருவத்தைப் பாரு 26, ஜாவ்லே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா, பாடல்கள் ஆர்ப்பாட்டத்துடன் ஒலித்தன. நீ சொல்லு நடந்தது என்னவென்று நீயே சொல்லு பாடல் கண்ணதாசனின் காமரசனையை வெளிப்படுத்தும் வரிகளுடன் , இறுதி இரண்டு வரிகள் நீக்கப் பட்டு கிளுகிளுப்பாக ரசிகர்களை கவர்ந்தது. பி. பி. சீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரியின் குரல் பாடலுக்கு மெருகூட்டியது.
இசையமைத்தார். வருஷத்தைப் பாரு 66 உருவத்தைப் பாரு 26, ஜாவ்லே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா, பாடல்கள் ஆர்ப்பாட்டத்துடன் ஒலித்தன. நீ சொல்லு நடந்தது என்னவென்று நீயே சொல்லு பாடல் கண்ணதாசனின் காமரசனையை வெளிப்படுத்தும் வரிகளுடன் , இறுதி இரண்டு வரிகள் நீக்கப் பட்டு கிளுகிளுப்பாக ரசிகர்களை கவர்ந்தது. பி. பி. சீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரியின் குரல் பாடலுக்கு மெருகூட்டியது.
படத்தை ஜி . துரை ஒளிப்பதிவு செய்ய , ஸ்டண்ட் காட்சிகளை திருவாரூர் தாஸ் , நாகூர் பரீத் இருவரும் திறம்பட அமைத்திருந்தனர்.
எம் ஜி ஆருடன் இணைந்து சில படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு ஏற்ற இளம் இணையாக ரவிச்சந்திரன் இப் படத்தில் அடையாளம் காணப்பட்டார். ஆட்டம். பாட்டு , சண்டை, நடிப்பு என்று ரவிச்சந்திரனின் கொடி இந்தப் படத்தில் உயர்ந்தது. ரசிகர்கள் அவரை குட்டி எம் ஜி ஆர் என்று அன்போடு அழைத்தார்கள்!
அதே போல் இளம் துடிப்புள்ள நாயகியாக ஜெயலலிதா ரசிகர்கள் மனதை சுண்டி இழுத்தார். வித விதமாக ஆடி பாடி , நடித்து ஸ்கொர் பண்ணினார் அவர். வில்லனாக வரும் மனோகர் நடிப்பு எடுபட்டது. காமெடியனாக வந்து முக்கிய திருப்பங்களுக்கு உதவுகிறார் நாகேஷ். எஸ் .வி . ரங்கராவ் நடிப்பு அருமை.
இவர்களுடன் சி . கே. சரஸ்வதி, சேதுபதி, மாதவி, என்னத்தே
கன்னையா, எஸ் . என் .லஷ்மி, அங்கமுத்து , ஜெமினி பாலு, பிரபாகர் என்று பலரும் நடித்திருந்தனர்.
கன்னையா, எஸ் . என் .லஷ்மி, அங்கமுத்து , ஜெமினி பாலு, பிரபாகர் என்று பலரும் நடித்திருந்தனர்.
படத்தை தயாரித்தவர் நடிகை இ . வி சரோஜாவின் சகோதரரான இ . வி . ராஜன். சரோஜாவின் கணவரான ராமண்ணா படத்தை இயக்கினார். பொழுது போக்கு அம்சங்களுடன் உருவான குமரிப் பெண் நூறு நாட்களுக்கு மேல் ஓடி பெற்றி பெற்று ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடிக்கு திரையுலகில் ஒரு மவுசை ஏற்படுத்திக் கொடுத்தது . பின்னர் ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment