பண்டித ஆசிரிய கலாசாலை - -ஆரம்பித்தைமை!
எனவே ஆசிரியர் சமூகப்
பணியிலே ஈடுபட்டவர் இத்துடன் மாத்திரம் அமையாது ஈழத்து இலக்கிய வரலாற்றிலே நாங்கள்
பெருமையாகக் கூறக்கூடிய பல எழுத்துகளையும் எங்களுக்குத் தந்திருக்கின்றார்.
அவருடைய பெயர் நவநீத கிருஷ்ணபாரதியார்.அதிலே நவநீதம் என்றால் வெண்ணெய். கிருஷ்ணன்
என்றால் கண்ணன். அதை வைத்து வெண்ணெய்க்கண்ணனார் என்ற பேருடன் அவர் எழுத்தாக்கங்களை
வெளிப்படுத்தி உள்ளார். அவர் எழுதிய முக்கியமான முதலில் வந்த நூல் உலகியல்
விளக்கம். இந்த உலகியல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டவர் விபுலானந்த அடிகளார். 1922ஆம் ஆண்டு 70 பாடல்கள் அடங்கிய இந்த
நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்துவானான மட்டக்களப்பைச் சேர்ந்த பூபாலபிள்ளை
அவர்களின் உரையுடன் வெளிவந்தது. இந்த
நவநீதகிருஷ்ணபாரதியார் ஒரு அமைதியானவர். சாந்த குணம் உள்ளவர். ஆனால் தமிழுக்கு
என்று ஒன்று வந்தால் விடமாட்டார்.
அவருடைய சாந்த குணமும் அமைதியுமோ தெரியாது
அவர் இந்த உலகியல்
விளக்கம் பற்றிய பாடல்களை
எழுதிவைத்திருந்த போதும் அதை இராமநாதன் கல்லூரியில் ஆசிரியராக இருந்த
வைரமுத்துஎன்பவரிடம்காட்டியிருந்திருக்கிறார். வெளியிடவில்லை. எழுத்திலே இருந்திருக்கின்றது.
அதைப் பார்த்த வைரமுத்து
ஆர்வங்கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக
வெளியிடுவோம் என்று சொன்னார்கள்.1919ஆம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுவரை உள்ள காலப்
பகுதியிலே இவை வெளிவந்தன. நான் ஏற்கனவே கூறியதுபோல நவநீதகிருஷணபாரதியார் ஒரு மரபு
வழிவந்த கவிஞர.; என்றபடியால் அந்த 70 பாடல்களும் பெரிய
ஆசிரியவிருத்தப் பாக்கள். சில பாடல்வரிகள் 100க்கும் கூடப்போகின்றது அப்படிப்பட்ட
பாடல்கள் இருந்தாலும் இவருக்குச் சமுதாய உணர்வு இருந்தது என்பதை அந்தப் பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. எந்த ஒரு கவிஞனும் தன்னுடைய காலச் சமுதாயத்தால்
தாக்கப்படாமல் இருப்பது மிகவும் குறைவு. இவருடைய காலத்திலே தமிழ்மொழி
புறக்கணிக்கப்பட்டது. கிருத்தவ சமயத்திலே மதப்பிரசாரத்தினாலே மக்கள்
சேர்ந்தார்கள். எத்தனையோ உடை நடையிலே
மாற்றம். அவை எல்லாவற்றையும் அவர் உலகியல் விளக்கத்திலே கூறுகின்றார். கடினமான பாடல்களாக இருந்தாலும் அதிலே சொல்வப்படுகின்ற சிலவரிகளைப்
பார்க்கலாம் என்று திருமதி கலையரசி மிகவும் அழகாக சில வரிகளை விளக்கினார். நாங்கள்
தாய் மொழியை மறந்து பிறமொழிக்குப் போய்விடுகிறோம்
தாய்மொழியை வெறுத்துப்
பிறமொழிகளை விரும்புகின்றார்கள். இன்னும் சிலர் என்ன செய்கிறார்கள் மரபுவழி
தெய்வம் மாய்த்து - மரபு மரபாக நாங்கள் போற்றிவருகின்ற தெய்வங்களை விடுத்து மற்ற மதங்களிலே ஈடுபட்டுத்
துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர் என்ன செய்கிறார்கள். ஆங்கிலேயருடைய
செல்வாக்கினாலே எங்களுடைய மேன்மையைக் குறைத்துவிடுகிறார்கள் என்பதையும் பாடல்களால்
விளக்கினார்.
எங்களுடைய உணவு உடை
எல்லாம் மாறிவிட்டதென்று சொல்லியதோடு விட்டுவிடவில்லை. இதெல்லாம் போகட்டும்.; நாங்கள் செய்வனவெல்லாம்
செய்யுங்கள் ;ஒற்றுமை கொள்ளுங்கள். என்றார்.
இதெல்லாம் அவருடைய சமகாலத்தவராகிய தமிழ்நாட்டுப்
பாரதியும் ஈழ நாட்டுப் பாவலர்
துரையப்பாபிள்ளை அவர்களின் பாடல்களிலும்
காணப்படுகின்றது. பாவலர் துரையப்பா பிள்ளை சொல்லுவார் இவர் சொன்னதையே!. இதெல்லாம்
என்னத்தைக் காட்டுகின்றன? அவருக்குச் சமுதாய உணர்வுஇருந்தது.
அது இந்த மரபுவழிப்
பாடல்களிலே இருந்தபடியால் இலக்கிய ஆர்வலர்களுடைய கவனத்தை ஈர்க்கவில்லை. இவை
ஆராயப்படவேண்டியது. இன்னுமொன்றை அவரிடம் பார்த்தேன் நான். அவருக்கு உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டும் என்பது.
அவர் ஒரு பிராமண வர்க்கத்திலே பிறந்தவர். அந்தணர்களை மிகவும் மதித்தவர்.அப்படி
இருந்தும் அவர் வாழ்ந்த காலத்துச் சூழலிலே சில அந்தணர்கள் ஊழல் நிறைந்தவர்களாக -
அவர்களின் பாரம்பரியப் பண்புகளை அறியாதவர்களாக இருந்ததைப் பல இடங்களிலே
சொல்லுகின்றார். பாடல்களிலே காணப்படுகின்றன. திருமணம் நடக்கி;ன்ற காலங்களிலே
பொருள்களைப் பெறுகின்ற இந்தப் புரோகிதர்கள் இப்பொழுது
மரணச் சடங்குகளுக்குஞ் சென்று பொருள்களைப் பெறுகின்றார்கள். அது மாத்திரமல்ல
தங்களுடைய பண்பினை அறியாத இவர்கள் எட்டறிவு நூல் படிதத்ததுடன் கல்வியை
நிற்பாட்டிக் கொள்கின்றனர். அவர் தொடர்ந்து எல்லாமே மாறிவிட்டதென்று சொன்னதோடு
நிற்கவில்லை. பிறகு சொல்லுகின்றார். உயர்ந்த குலத்திலிருந்து வந்தவர்கள்.
ஆனபடியால் அவர்களை நாங்கள் தாழவிடாது ஆதரவளித்தல் வேண்டும். இப்படியான கருத்துகளை
அவர் சொன்னார். அவருக்கு எதிர்ப்பு இருக்குமென்று நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். இப்படிச் கூறிய
கலையரசி சின்னையா அவர்கள் பாரதியார்
வாழ்ந்த காலத்திலே ஆங்கிலேயரின் தலையீட்டால் எமது தமிழ் மக்களின் நடை உடை பாவனை
எல்லாம் எப்படி மாறியது தமிழ் எப்படிப் புறக்கணிக்கப்பட்டது என்பதை பாரதியார்.
எப்படிச் சொன்னார் என்பதை விபரமாகக் கூறினார். அப்படி உலகியல் விளக்கத்திலே பல
விடயங்களை அவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் இது மாத்திரமல்ல. பல நூல்களை
எழுதியுள்ளார்.அவர் வாழ்ந்த காலத்திலே அவடைய பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தால்
அவை வெளிவரவில்லை. அவருக்கு மாத்திரம் அல்ல எத்தனையோ புலவர்களுடைய ஆக்கங்கள்
வெளிவராமல் இருந்தன. இவர் பாடிய புத்தளம் செங்கதிர் என்ற ஒரு நூல். 525.வெண்பாக்களாலே
ஆக்கப்பட்டது. அது காந்தி அடிகள் இலங்கைக்கு வந்த காலத்தை ஒட்டிப் பாடப்பட்டது
எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த நூல் இன்று எவருக்கும் கிடைக்வில்லை. இதற்கு
அடுத்ததாக இவருக்குப் பெருமைதேடித் தருவதாக இருப்பது திருவாசகப் பேருரை
இந்தத் திருவாசகத்துக்கு
உரை எழுதுவதென்பது ஒரு காலகட்டத்திலே எங்களுடைய தமிழ் அறிஞர்கள் மத்தியிலே ஒரு
பயந்த விடயமாகக் கருதப்பட்டது. இதுபற்றிச் சுவாமிநாத ஐயர் ஒரு இடத்திலே
எழுதியிருக்கின்றார். தியாகராசச் செட்டியார் என்பவர் மிகுந்த தமிழ் அறிஞர். தனது
பதவியைச் சுவாமிநாத ஐயருக்குக் கொடுத்துவிட்டுப் போனவர். சுவாமிநாத ஐயர் என்ன செய்தார்
என்றால் தனக்கு வாழ்வளித்த அவரின் பெயரைச்
தனது இல்லத்துக்குத் தியாகராச இல்லம் என்று பெயர் வைத்து வாழ்ந்தவர்.
இந்தத் தியாகராசச் செட்டியார் எல்லா நூல்களுக்கும் உரை எழுதி வந்தவர். அவரின்
நண்பர் ஒருவர் அவரைப்பார்த்து எப்பொழுதும் கேட்பாராம் திருவாசகத்துக்கு எப்பொழுது
உரை எழுதப் போகிறீர்கள் என்று. அப்ப அவர் சொல்லுவாராம் பார்க்கலாம் என்று. ஒருமுறை
காவேரி ஆற்றருகே ஒரு மரண வீட்டுக்குப் போய்விட்டு வருகின்ற பொழுது இந்தப்
பட்டாபிராமப்பிள்ளை என்பவர் எதிரிலே வந்து கேட்டாராம். எப்படி இருக்கிறது திருவாசக
வேலை என்று. இவருக்கு நல்ல கோபம் வந்துவிட்டது. இவர் சொன்னாராம். நீர் என்னிடம்
இதைக் கேட்காதையும். அந்தத் திருவாசகத்துக்கு நானா உரை எழுதுவது என்று. அதற்கு வேத
உபநிடதம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். என்னால் எழுத முடியாது .இனிமேல் நீர் கேட்டால் நான் இந்தக் காவேரி
ஆற்றிலே விழுந்துவிடுவேன் என்று. அந்தப் பெரியவரே தன்னால் திருவாசகத்துக்கு உரை
எழுத முடியாது என்று சொன்னவர். அதற்குப் பிறகு மறைமலை அடிகள் முதல் நான்கு பதிகங்களுக்கும் உரை எழுதியபோது எதிர்ப்பு
வந்தது திருவாசகத்துக்கு ஏன் உரை எழுதவேண்டும் என்று. என்றாலும் 1897ஆம் ஆண்டிலிருந்து மு
இராமலிங்கம் என்பவர் திருவாசகத்துக்கு
பொழிப்புரை எழுதினார். அதற்குப் பிறகு மறைமலை அடிகள் முதல் நான்கு பதிகங்களான
சிவபுராணம்- கீர்த்தித் திரு அகவல் - திரு அண்டப்பகுதி – போற்றித் திரு அகவல்
என்பவற்றிற்கு உரை எழுதினார்.அதற்குப்
பிறகு கதிரேசன் செட்டியார் என்பவர் இரண்டிற்கு அதாவது திருச்சதகத்துக்கும் நீத்தல்
விண்ணப்பத்துக்கும் எழுதினார். திருவாசகத்துக்கு ஒரு பெரிய பேருரை வெளிவராத காலம்.
நவநீத கிருஷணபாரதியார் திருவாவடுதுறை ஆதீனத்திலே திருமுறைத் துணை ஆலோசகராக
இருந்தவர் திருவாசகத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருவாசக ஆக்கம் என்று 5 பாடல்கள்
பாடியிருக்கிறார். அவர் சொல்லுகிறார் சொல்லாதவரையும் நெக்குருகிச் சொல்ல வைக்கும்
நில்லாதவரையும் என்னருகில்
நிற்கவைக்கும்
பொல்லாதவரையும் போக்கறுத்து வாழவைக்கும் வல்லாளன்--
…. ……..தேன ;வாசகம் என்று முடிக்கிறார்.அப்படித் திருவாசகத்திலே ஊறினவர்.அவருக்கு ஒரு குணம் இருக்கிறது. தமிழை ஆரோடும் கதைக்க வேண்டும். பாடசாலையில் படிக்கின்ற பிள்ளைகள் அல்லது ஆசிரியர்கள் எவருக்கம் தான்கற்ற இலக்கிய இலக்கணங்களையம் தனது தமிழறிவையும் சொல்லவேண்டும் என்று.
அவருடைய மாணவர். நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீ ர்கள். மாவை சச்சிதானந்தம். அவர் என்ன சொன்னார்? நான் தமிழ் படித்துச்
சாகவேண்டும் என் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்அளவெட்டி நாகலிங்கம் மாவை
சச்சிதானந்தம் போன்றோர் அவருடைய விருப்புக்குரிய மாணவர்கள். பேராசிரியர்
சுசீந்திரராஜா அவர்களிடம் படிக்கவில்லை என்றாலும் அவரால் தமிழறிவு பெற்றேன் என்று
கூறுவார். அவர்கள் எல்லோரும் அவருடைய அந்த ஆசிரியத் தன்மையைப் வியந்து
போற்றியவர்கள். இப்படிப் பல நூல்களை எழுதியவர் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால்
ஒன்றும் எமது கைக்குக் கிடைக்கவில்லை. இந்தத் திருவாசக உரைக்கு
அவர் ஆறு ஆண்டுகள ;முயற்சித்து திருவாசகப் பேருரை எழுதினார். அவர் சொல்லுவார் நான்
இந்தத் திருவாசகத்துக்கு எழுதுகிற உரை வித்தியாசமானது- அதாவது அன்பின் அடிப்படையில்
தான்….
திருக்கோவையாரில்
உங்களுக்குத் தெரியுமோ தெரியாது மாணிக்கவாசவகரின் பாட்டுக்களில் ஒரு தலைவன்
தலைவியை எங்கிப் பாடுவது போல – திருவெம்பாவை தொடக்கம் திருப்பள்ளி எழுச்சி ஈறாக
-அது ஒரு அகத்திணை மரபிலே அமைந்தது. அதிலேதான் நான் எழுதப்போகிறேன். அப்படிச்
சொன்னவர் மறைமலை அடிகள் கூட இதைச் சிந்திக்கவில்லை என்று சொல்லியிந்தார். அந்த
நூலை வெளியிடுவதற்கு இங்கு அவருடைய பேரன் ஞானாகரன் வந்திருக்கிறார். அவருடைய
தந்தையார் பூரணானந்தா திருவாசகப் பேறு என்று
முதல் நான்கு பகுதிகளுக்கும் அவர் எழுதிய உரை ஒரு பார்வைப் பிரதியாக
எப்படிச் சமூகத்தினர் பார்க்கின்றார்கள் என்பதற்காக வெளியிட்டு வெளிவந்தது.
அடுத்து 54ம் ஆண்டு பாரதியாருடைய திருவாசகப் பேருரை - அது அவருக்கு முன்பு வந்த எல்லா உரைகளிலும்
சிறந்த உரையாகக் எற்றுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு காரைநகரைச் சேர்ந்த
அருளம்பலமுதலியார் எழுதியிருக்கின்றார்.
இப்படிப்பட்ட ஒரு பெரியார்
தமிழைத் தனது மூச்சென்று வாழ்ந்தவர். தமிழுக்காக எந்த உண்மைகளையும்
வெளிக்காட்டுபவர். ஆசிரியப் பணியிலிருந்து நீங்கியவுடன் ஒரு பாராட்டு விழா
நடைபெற்றது.
அது யாழ். நகர மண்டபத்திலே
நடைபெற்றது. அதை நடத்தியவர் சு நடேசபிள்ளை. அவர்கள். அதற்குத் தலைமை தாங்கியவர்.
பாராட்டு விழா நடைபெற்ற பொழுது ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. நான் முன்பு
கூறியிருக்கின்றேன் அவருடைய நுலைப்பற்றி. அவரின் உலகியல் விளக்கம் என்று. அதிலே 70
பாடல்கள் இருக்கின்றன. அவரிடம் படித்த மாணாக்கரான பண்டிதர் நாகலிங்கம்
அவர்கள் அந்த 70 பாடல்களுக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பவுண் என்ற அடிப்படையில்
பவுண் சேர்த்து பாரதியாருக்கு ஒரு பொற்கிழி வழங்கப்பட்டது. அந்தப் பொற்கிழியை
வழங்கியவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்த
கணபதிப்பிள்ளை அவர்கள். அவர் தான் பேசும்பொழுது சொன்னார். நவநீதகிருஷ்ணபாரதியார்
எமது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த ஒரு பேறு என்று.
இந்த இடத்திலே எனது தந்தையாராகிய வேந்தனர் அவர்களும் சொற்பொழிவாற்றினார்.
பாரதி அவர்களின் தந்தையார் இளமுருகனார் அவர்களும் சொற்பொழிவாற்றினார். நவநீத கிருஷ்ண
பாரதியார் பல நுல்கள் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். எல்லா
இடத்திலும் அவருக்குச்
சுதந்திரம் வரவேண்டும்
என்ற உணர்வு இருந்தது. அந்த உணர்வை அவர் சாந்தமாக வெளிப்படுத்தி இருந்தார். 54ஆம்
ஆண்டு தமிழ் விழா நடந்தபொழுது அந்தத் தமிழ் விழாவை நடத்திய ஆசிரியர்
குறிப்பிட்டுச் சொன்னார் தமிழ் நாட்டிலே ஒரு பாரதி . அவர் ஒரு வீரக்கவி! ஆவேசக்
கவி! ஈழத்திலே ஒரு பாரதி! அவர் ஒரு
சாந்தக் கவி! அழகான கவி! அமைதியாக இருந்து தமிழ்ப் பணியும் சைவப் பணியும்
செய்கிறார் என்று. அவருடைய ஆக்கங்களைப் படித்தால் அவர் ஒரு அமைதியானவரோ
தெரியாது. தலைவராக இருந்து தமிழறிவுள்ள ஆசிரியராகத் தமிழ்ப் பணி புரிந்தவர்.
நேரங் கருதி இளமுருகனார்
கூறிய ஒரு பாடலைக் கூறி முடிக்கிறேன்.அவர் கூறுகிறார் பொற்கிழி வழங்கிய பொழுது
தமிழர்கள் அவரை எப்படிப் பார்த்தார்கள் என்று…..
இருந்தமிழ்ப் பழிக்கு
மேதிலர் நடுங்கத்
திருந்திய பேரவைச் செங்கள
மேறித்
துணிவுவில் வாங்கித்
தெளியுநா ணேற்றிக்
குறிநிலை பிழையா தறிவுகோல்
துரந்து
செஞ்சொற் போர்புரி வெஞ்சின
வீர!.
நின்
நினைவுஞ் செந்தமிழ்
புனைவுஞ் செந்தமிழ்
உணர்வுஞ் செந்தமிழ்
உயிர்ப்புஞ் செந்தமிழ்
எல்லாமாகி யியன்றனை
நிற்றலின்
தமிழொரு வடிவந் தாங்கிய
தெனவே
இமிழ்திரை ஞால மிசைத்திடு
மம்ம!
இந்தப் பாலுக்கு
விளக்கமும் கொடுத்தார் திருமதி கலையரசி
இளமுருகனார் இவருடன்
நெருங்கிப் பழகியவர். அவருடைய குணங்களைப் பாடுகின்றபடியாலும் நவநீத
கிருஷ்ணபாரதியாரின் ஆக்கங்களை ஓரளவு படித்து அவருடைய மனப்பாங்கை அறிந்துகொள்கின்ற
பண்புடையவர் என்றதாலும் உள்ளதை உள்ளவாறு
சொல்பவர்.
நவநீத கிருஷ்ண பாரதியார்
இப்படிப்பட்ட ஒரு மாமனிதர். மேன்மையானவர்.
......
அப்படிப்பட்ட சான்றோருக்கு
இங்கு விழா எடுப்பது நலம்தான்!
அண்மையிலே ஒரு நல்ல செய்தி
அறிந்தேன். அவருடைய பேரனார் சொன்னார். அவருடைய திருவாசகப் பேருரை மறுபதிப்பாக வருகிறது என்று. உண்மையாக அந்த
நூல்கள் ஒன்றும் வெளிவராததாலே அவருடைய முழுமையான ஆற்றல்களை அறிய
முடியாதிருக்கின்றது. அவரைப்பற்றிச் சிந்திக்கவைத்த பாரதி அவர்களுக்கு நன்றி
கூறுகிறேன் என்று கூறி தனது நீண்டதொரு பேருரையைக் கலையரசி சின்னையா அவர்கள் நிறைவு செய்தார்.
சிவத்திரு ஆறு திருமுருகன்
அவர்கள் சிவஞானச் சுடர் பாரதி அவர்கள் இயற்றி வெளியிட்ட செந்தமிழ்ப் பூக்கள்
என்னும் 80 சிறுவர் பாடல்கள் அடங்கிய இரு பகுதிகளாக வெளியளிடப்பெற்ற நூலைச் சுருக்கமாக அறிமுகஞ் செய்துவைத்த நிகழ்ச்சியும் சிவத்திரு
நரேந்திரநாதன் அவர்களின் நூல் பற்றிய
அனுபவப்பகிர்வையும் செஞ்சொற் செல்வர் பிரம்மசிறீ வீரமணி ஐயரைப்பற்றி ஆற்றிய
சிறப்பரையும் தொடர்ந்து வெளியிடப்படும்
------------------------------- யசோதை.
No comments:
Post a Comment