துயரினைத் துணிவுடன் விரட்டுவாய் – அன்பு ஜெயா பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.

வாழ்க்கைதனின் ஓட்டமதில் வளமதுவும் வந்துபோகும்,

    வழக்கமிதை உணர்ந்துநீயும் வாழ்வாய் – அன்றேல்

    வளம்குன்றி வாழ்வினிலே தாழ்வாய்!

தாழ்ந்தவரும் வாழ்விலோர்நாள் தன்னிறைவும் பெறுவர்தான்,

    தவறாமல் அதற்கெனவே உழைப்பாய் – அந்நாள்

    தகுதியுள்ள வாழ்வுபெற்றே தழைப்பாய்!  (1)

 

வாழ்க்கையதோ பேரலையில் தடுமாறும் ஓடம்போல்

    வழியொன்றும் தெரியாமல் நோக்கும் – துணிவே

    வழியொன்றைக் கண்டெடுத்துக் காக்கும்!

தாழ்வான இடம்நோக்கிப் பாயுமந்த ஆறுபோல

    தத்தளிக்கும் உன்னையுமே காக்கும் – மாந்தம்

    தளிர்விட்டே வாழ்வுதனை நோக்கும்!      (2)

 

1 comment:

Anonymous said...

அருமையா கவிதை ,
மனம் தளராது ஊக்கமளிக்கும்