மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
மார்கழி மாதம் மனமுறை மாதம்தேவர் விரும்பும் திருவுறை மாதம்சைவம் வைணவம் போற்றிடும் மாதம்மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்இறையினைத் துதித்து எல்லோர் மனமும்புனிதம் ஆகியே நிற்பது தையிலேதையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழாஅதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழாஉழவை மதிக்கும் உன்னதப் பெருவிழாஉழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழாநன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழாசமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்நீராடி யாவரும் புத்துடை அணிவார்மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்கோலம் போடுவார் கும்பம் வைப்பார்குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்அப்பா அம்மா தாத்தா பாட்டிஅனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்பொங்கற் பானையை அலங்காரம் செய்துமங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்அத்தனை பேரும் பொங்கலைப் படைத்துஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திடஇறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்பெருநாள் திருநாள் பெறுமதி என்பதைஉணரும் போது உள்ளம் உவக்கும்பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்யாவரும் மகிழும் கோலமும் பெருகும்இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்பொங்கல் என்பது மங்கலம் ஆகும்பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை
No comments:
Post a Comment