“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும்
நனி சிறந்தனவே…”
தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழித்த
எங்கள் அப்பா தன் இறுதிக்காலம் வரை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருப்பார்.
மகாலிங்கம் பத்மநாபன் எழுதி வழங்கிய
“வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் கதை”
என்ற இந்த நூலைப் படித்து முடித்த போது
அப்பேர்ப்பட்ட உணர்வு தான் எழுந்தது. தன் மண்ணை, தன்
மக்களை நேசித்த மண்ணின் மைந்தனின் மன உணர்வுகளை அச்சொட்டாக எழுத்தில் கவர்ந்தால்
எழும் வரலாற்றுப் பெரு நூல் இது.
பெரிய பரந்தன், குஞ்சுப் பரந்தன், செருக்கன் ஆகிய மூன்று கிராமங்களின் தோற்றமும் வாழ்வியலுமாக நிஜ கதைமாந்தர்களோடு பயணிக்கிறது இந்த நூல்.
இது மூன்று கிராமங்களின் கதை மட்டுமல்ல மூன்று தலைமுறையின்
கதையும் கூட. 1900 ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையான வாழ்வு இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.
என்ற
முன்னுரையே இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கின்றது.
என்று மூத்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
அவர்களின் அணிந்துரையே, இப்புத்தகத்தைப் படித்து முடித்ததும் மனதில் எழும்
உணர்வாகவும் பிரதிபலிக்கின்றது.
அமைந்திருக்கும் பரட்டைக்காடுகளும், களப்புகளும், இவற்றின் தெற்கே அமைந்துள்ள வயலும் வயல் சார்ந்த இடங்களாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் வடக்கே, கண்டி வீதியின் மேற்குப்பக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று ஊர்களுக்கும், விவசாயம் செய்யவெண்ணி வள்ளத்தில் ஏறி, யாழ்ப்பாணக் கடல் நீரேரி ஊடாகச் சுட்டதீவுத் துறையில் இறங்கிக் கால் நடையாகவும், மாட்டு வண்டில்களிலும் பயணம் செய்த மாந்தர்களின் வரலாற்றைப் படைத்ததற்கு வாழ்த்துரையில் சிறு வரலாற்றையும் பதிந்து வைத்திருக்கிறார் மகாலிங்கம் பத்மநாதன் (ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்).
திருத்திக் கழனியாக்கிய வரலாற்றை ஆரம்ப அத்தியாயங்களில் படிக்கும் போது தீரச்செயலைச் செய்யப் புறப்பட்ட்ட நாயகர்களாகக் கண் முன்னே நிற்கின்றார்கள்.
கதைப் போக்கிலே
வரலாற்றில் நாம் மறந்து போன, புழக்கத்தில் இருந்த
பல சொற்களை மீட்டெடுத்து விளக்கமும் கொடுக்கிறார்.
வரலாற்றில்
பயணிக்கும் கதை மாந்தர்களின் இழப்பை நம்முடைய சொந்த இழப்பாகவே நினைக்குமளவுக்குத்
தாக்கத்தை உண்டுபண்ணும் உணர்வோட்டத்தோடு இந்தப் படைப்பை நிறுவுகின்றார்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரலாற்றுத் துணுக்குகள், சம்பிரதாயங்கள், உலக நடப்புகள் போன்றவற்றை முத்தாய்ப்பாகக் கொடுத்தே தொடங்குவார்.அவ்விதம் 50 வது அத்தியாயத்தில், ஒரு அரச அலுவலகர் எப்படி மக்களோடு கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், நிறைவான 51 வது அத்தியாயத்தில் இறப்பின் சிறப்பை “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்” எனத்தொடங்கும் திருவள்ளுவத்தோடும், டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழியான
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்”
என்று குறிப்பிட்டு இந்த வரலாற்று
நூலின் அத்தியாயத்தை நிறைவு செய்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் இவருக்காகவே
எழுதி வைத்து விட்டது போல மனதில் சுமையொன்று எழுகின்றது.
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்
அலகினால் சிறந்த நூலாக 2023 ஆம் ஆண்டில் “அது ஒரு அழகிய நிலாக்காலம்” பரிசினைப்
பெற்றது.
ஆனால் காலன் முந்திக் கொண்டான்.
அன்னாரின் நினைவுகளை இந்த மூன்று
கிராமங்களின் கதை உயிர்பித்து வைத்திருக்கும்.
கானா பிரபா
28.12.2024
No comments:
Post a Comment