நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 அவுஸ்திரேலியா மெல்பேனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க்


கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/12/23) கொண்டாடப்பட்டது.

 

ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன்விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும்அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி ஸ்ருத்திகா உருத்திரகுமாருக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

 

மேலும்பரிசளிப்பு விழாவின் இறுதியில்அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலைகலாச்சாரசமய வளர்ச்சிக்கும்தமிழ் தேசியத்திற்கும்தமிழ்க்கல்விஊடகத்துறையின் வளர்ச்சிக்கும்தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது உழைத்த திரு. சாண்டி சந்திரசேகரம்  அவர்களுக்கு நரே-வொரென் தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால்  சாதனைத் தமிழன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.   இவ்விருதினை மாண்புமிகு  ஹோல்ட் பாராளுமன்ற உறுப்பினர்  கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) அவர்களினால்சாண்டி சந்திரசேகரம் அவர்களுக்கு  வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

 


































































Parents Committee – Narre Warren Tamil School

secretary.pc@tamilschoolvtanc.org.au 

No comments: