மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அவற்றுள்
எங்கள் தமிழ்மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பினை எங்கள் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதாவது பக்தியை இலக்கியமாக்கிய தனித்துவம் எனலாம். ஏனைய மொழிகள் பக்தியைத் தனியாகவே பார்த்தன. ஆனால் எங்கள் தமிழ் மொழி அதனை வாழ்வுடன் இணைத்து இலக்கியமாகக் கண்டது.இதன் காரணமாகப் பக்தியின் வழியில் சென்ற அடியார்களின் மனத்தினின்று உதித்த சிந்தனைகள் அத்தனையும் திருப்பாட ல்களாய் தமிழை வளம்படுத்தி வழிகாட்டியாய் அமைகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது எனலாம். அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் வந்து அமைகின்றன.
பன்னிரு திருமுறைகளைத் தந்தவர்கள் பல இடங்களைச்
சேர்ந்தவர்கள். பல அனுபவங்களைப் பெற்றவர்கள். அவர்களின் அனுபங்கள் ஆண்டவனின் பாற்பட்டதாகவும் அதேவேளை உலகியல் நிலைப்பட்டதாகவும் அமைந்தே இருந்தது. ஒன்பதாம் திருமுறைவரை அமைந்த திருப்பாடல்கள் ஒரே வகையினவாய் இருப்பதைக் காணமுடிகிறது. பத்தாம் திருமுறையாக அமைகின்ற திருமுறையானது ஒன்பது திருமுறைகளையும் விட வித்தியாசமானதாக அமைவதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. தேவாரம் , திருவாசகம், திருப்
இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா, சமய நூல் என்பதா, மருத்துவ நூல் , என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக்களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா ! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத் திருநூல் அமைந்தி ருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப் பக்தி உலகில் திருமந்திரம் தனித்து வமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.
இப்படிப் பல புதுமைகளைக் கொண்ட திருமந்திரத்தைத் தந்தவரின் வரலாறும் கூட புதுமையாகவே காணப்படுகிறது. இவரின் தொடக்கமே எம்பெருமான் உறைகின்ற கயிலாயமாகிறது. அங்கிருந்து ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவரின் வருகை பிறப்பாய் அமைகிறது. வந்தவருக்கு அவர் வந்த உடலே வாய்க்காது விட வேறொரு உடலிற் புகுந்து அந்த உடலுக்கு உரியயவனின் பெயருடன் இம்மண்ணில் நிற்கும் ஒரு புதுமை நிகழ்கிறது. அப்பொழுதுதான் அவருக்குத் தான் தாங்கிய உடலுக்கு உரித்தானவனின் பெயரான மூலன் என்னும் பெயர் வாய்க்கிறது. திருவருட்சக்தி அவரிடம் நிறைந்த காரணத்தால் மூலன் - திருமூலன் ஆகும் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அதுவும் நிரந்தர மாகவில்லை என்பதையும் அவர்பற்றிய கதை எடுத்து இயம்புகிறது.
திருமந்திரம் எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை " நம்பிரான் " என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்கத்தகது. சம்பந்தப் பெருமானை " எம்பிரான் " என்றவர் திருமூலரை " நம்பிரான் " என்று சுட்டுவது மனமிருத்த வேண்டிய கருத்தாகும்.
திருமூலர் வரலாறு எப்படி இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பது அவசியம் அற்றதாகும். அவரால் அளிக்கப்பட்ட பொக்கிஷமான " திருமந்திரம் " என்பதே கவனித்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.திருமந்திரம் எப்படிப் பாடப்பட்டது யாரால் பணிக்கப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியமான செய்தியாகும்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
இறைவன் தன்னைப் படைத்ததற்கான சரியான விடையைத் திருமூலரே தருகிறார். " தமிழ் கொண்டு தன்னைப் பாடவே இறைவன் படைத்தான் பணித்தான் " என்பதுதான் அந்த மறுமொழியாகும். இதுதான் அவரின் பிறப்பின் நோக்கமாகும். இங்கே தமிழ் என்று அழுத்திச் சொல்லப்படுவது கருத்திருத்த வேண்டியதேயாகும். திருமூலர் இறைவன் விருப்பப்படி தமிழில் நன்றாகவே பாடினார். அறம் பாடினார். பொருள் பாடினார். இன்பம் பாடினார். தத்துவம் பாடினார். யோகம் பாடினார். ஆரோக்கியம் பாடினார். ஒழுக்கம் பாடினார். நிலையாமை பாடினார். விஞ்ஞானம் மொழிந்தார். அதேவேளை அரிய மெஞ்ஞானமும் மொழிந்தார். எதைப் பாடினாலும் இறைவனை அகமிருத்தியே அத்தனையும் தந்துநின்றார் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். சைவசித்தாந்தம், யோக சாத்திரமுறை, விஞ்ஞானமுறை என்று திருமந்திரம் இருந்தாலும் அடிநாதமாய் அமைந்திருந்திருந்தது - பரம்பொருளை உணர்ந்து கொள்ளுதலே என்பதை மறந்துவிடக் கூடாது.
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடி மூவாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பது வரலாறு. இதில் நாம் நுழைந்து விவாதம் செய்ய வேண்டியதில்லை. திருமூலரைச் சித்தர் என்றே அழைப்பது வழக்கம். சித்தர்கள் வாழ்வானது விசித்திரமானது. அறியமுடியா பல அதிசயங்கள் கொண்டது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து நிலையாகும். அவரின் பிறப்போ அல்லது அவரின் மறைவோ பற்றிய சர்ச்சைகளை விட்டு விட்டு அவரின் சிந்தனைக் கருவூலமான திருமந்திரத்தையும் அதன் மூலம் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைத்திட்ட திறத்தையுமே நாமனைவரும் எம்மகத்தில் அமர்திட வேண்டும். அதுதான் மிகவும் பொருத்த மானதுமாகும்.
மூவாயிரம் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த வைரங்கள். அவற்றில் அறிவார்ந்த பல கருத்துகள் பொதிந் திருக்கின்றன என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அறிவார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த திருமூலர் கையாண்ட மொழி நடையினை வியந்துமே பார்க்க வேண்டி இருக்கிறது. இலகுவான சொல் லாக இருக்கும். படிக்கும் பொழுது ஒரு கருத்தை எமக்குள் ஏற்படுத்தும். ஆனால் உள்நுழைந்து பார்க்கும் பொழுதுதான் திருமூலர் தெரிவார். அவர் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திடக் கையாண்ட சித்தும் தெரிய வரும். அந்த அளவுக்கு ஆழம் நிறைந்திருக்கும். அதேவேளை கவிதை அழகும் செறிந்திருக்கும். அதற்குள் பக்தியும் , தத்துவமும் , புதை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை அனைவருமே தேடுகின்றோம். அந்த அருட்சோதியை வேண்டிப் பல இடங்களைத் தேடியும் ஓடுகின்றோம்.மனம் அங்கலாய்த்தபடியே இருக்கிறது. அருட்பெ ருஞ்சோதியை அறிய முடியாமல் இருப்பார்க்கு திருமூலர் புதுமையாய் ஒரு கருத்தைச் சொல்லி புதுப் பாதையையும் காட்டுகின்றார். இது யாருமே சிந்திக்கா சிந்தனையாகும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே
சித்தம் போக்கு சிவன் போக்கு என்று சொல்லுவதை நாமெல்லாம் கேட்டிருக்கின்றோம். இதன் அர்த்தம் சிவபெருமானின் போக்கானது அன்பு நிலையேயாகும்.இதனைக் கருத்திருத்தியே திருமூலரும் சிவனை " அன்பாய் " காணுகின்றார். ஆகவேதான் சிவன் வேறல்ல - அன்பு வேறல்ல . இரண்டுமே ஒன்று தான் என்று உரக்கக் கூறுகிறார். ஆண்டவனை அன்பாய்க் காணுவதே மிகவும் உகந்த நிலை என்பதுதான் திருமூலர் எண்ணமாகும்.பரம்பொருளை அன்புடன் இணைத்து அப்பரம்பொருளுக்கு அன்புதான் பெயர். அந்த அந்த அன்புதான் சிவன் என்று காட்டும் பாங்கில் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விளங்காதவருக்கும் விளங்கப் பண்ணிடும் உத்தியாய் இருக்கிறதல்லவா ?
உடம்பினைப்பற்றி அதனுள் இருக்கும் உள்ளத்தினைப் பற்றியெல்லாம் பலரும் பலவாறு பார்த்திருக் கிறார்கள். ஆனால் திருமூலர் பார்வையோ யாவரையும் விட வித்தியாசமானதாய் அமைந்திருக்கிறது. உடம்பு இழுக்கா என்றால் இல்லையே என்கிறார். அதற்குத் தக்க காரணமும் தருகிறார். அங்குகூட பரம்பொருளையே உட்புகுத்தியும் நிற்கிறார்.
உடம்பினைப் பற்றிய பார்வையும் , அதனூடாக வெளிப்பட்ட புதுமையான சிந்தனையும் , திருமூலர் உலகினுக்கு உணர்த்திய பெருந் தத்துவமாய் இருக்கிறது அல்லவா ! இந்தப் பாடல்களை அறிவால் அணுகுவதைவிட உணர்வால் உள்ளிருத்துவதே உகந்ததாகும்.
. இந்தப் பாடலை நாமனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். பாடலைப் பாட மாக்குவதோ அல்லது பாடலின் பொருளைக் கூறுவதோ இங்கு முக்கியம் அல்ல. இப்பாடல் ஊடாக திருமூலர் சமூகத்துக்கு எதனை உணர்த்திட விரும்புகிறார் என்பதே மிக மிக முக்கியமானதாகும். பரம்பொருளைப் பூசிப்பதற்குஒரு பச்சிலையே போதும் என்கிறார். பரம்பொருளைப் பூசித்தால் மட்டும் போதுமா என்று கேட்டு விட்டு - பசுவுக்குப் புல்லுக்கொடு .உண்ணும் போது யாராவது வந்தால் ஒரு கைப்பிடி உணவு கொடு. இப்படி யெல்லாம் உனக்குச் செய்வது கஷ்டமாக இருந்தால் நல்லதாக ஒரு வார்த்தையினையாவது மற்றவரைப் பார்த்துச் சொல்லிவிடு. என்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதுபோல எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார். பரம்பொரு
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே
வந்தார். நன்றாகவே அதுவும் சுவையாகவே உண்டார். அழகான மனைவியுடன் இன்பமாய் இருந்தார். இட துபக்கம் சிறிது வலிக்கிறது என்றார்.நோவினால் படுத்தார். படுத்தவர் படுத்தே விட்டார். எழவே இல்லை ! ஒரு நாடகம் போல காட்டி மனித மரணத்தினை திருமூலர் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கிறார். இங்கே நிலை யாமையும் இருக்கிறது. மருத்துவமும் இருக்கிறது. இடப்பக்கம் நொந்தால் இருதய நோய். அதனால் உயிராபத்து வரும். இதனை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சித்தர் பெருமான் சொல்லி இருப்பது எம்மையெல்லாம் அவர் பக்கம் திருப்பிப் பார்த்திட வைத்திடும் நிலைதானே !
படுத்தவர் எழவேயில்லை. படுத்தவர் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர். வசதிகள் வாய்ப்புகள் நிறை ந்தவர்.ஆள் பலம் படைத்தவர்.அரசியலில் உயர்நிலையில் இருப்பவர். அனைவரையும் ஆட்டிவைத்தே வாழ்ந்தவர். அவரிப்போ எழமுடியாமல் வீழ்ந்துவிட்டார். ஊரிருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஒலிக்கி அழுதார்கள். சற்று நேரங்கழித்து - அந்தஸ்த்திலிருந்தவரின் பெயரினைச் சொல்லாது எப்பதான் இந்தப் பிணத்தை எடுக்கப் போகிறார்களோ என்று சொல்லி நிற்கின்றார்கள். - நிலைமை உடனேயே மாறி விட்டது என்கிறார் திருமூலர். அதுமட்டுமா ? ஆடவைத்து நின்றவரின் ஆட்டம் அடங்கிய பின் பிணம் என்னும் பெயருடன் சூரையங் காட்டுக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்து , அங்குள்ள நீர் நிலையில் மூழ்கி எழுந்து - அந்தஸ்த்தில் இருந்தவரையே நினைப்பிலிருந்து அகற்றியே விட்டார்கள். இதுவும் ஒரு படமாக காட்டப்படுகிறது அல்லவா ! இதுதான் வாழ்கை ! இதுதான் வாழ்கையின் நிதர்சனமான நிலை !
உலகிலே இருக்கின்ற அனைவருக்கும் இப்படி ஒரு தத்துவத்தை மிகவும் பக்கு வமாய் அதேவேளை உறைக்கும்படியும் உரைத்தவர் திருமூலர் ஒருவரே என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய உண்மையாகும்.
திருமுறைகளை ஆலயங்களில் பாடும் பொழுது திருமந்திரம் அங்கு இடம்பெறுவதைக் காணவே முடிவதில்லை.திருமந்திரம் என்பது ஒரு சாத்திர நூல். அது தோத்திர நூல் அல்ல. அது நிலையாமையினை உணர்த்தும் நூல். தத்துவங்களை உள்ளடக்கிய நூல்.சாதாரண மானவர்களுக் கெல்லாம் விளங்காத நூல்.சித்தரின் நூல்.முத்தியினை முன்னிறுத்தும் நூல்.விளங்குவது கடினம். என்றெல்லாம் பல கருத்துகள் இருப்பதனால் திருமூலரையோ அல்லது திருமந்திரத்தையோ நாடுவதும் தேடுவதும் குறைவாகவே இருக்கிறது.கோவில்களில் கூட புராணங்கள் பற்றியே விரிவுரைகள் பெரும்பாலும் இடம் பேறும். திருமந்திரம் என்றாலே அது ஒரு மந்தி நூல் என்று எண்ணுவதே வழக்கமாகிவிட்டது.ஆம் ... அது மந்திர நூல்தான். நிறை மொழியான பலகருத்துக்கள் அதில் இருப்பதால் அது மந்திர நூல் அதாவது உயர் வான , சிறப்பான, மதிப்பான மந்திர நூல் ஆகையால்த்தான் திரு என்னும் அடை மொழி இணைக்கப்பட்டு " திருமந்திரம் " ஆகி திரும்பிப் பார்த்திட வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment