பொன் விழாக் காணும் ஈழத்து நாடகர் & ஊடகர் திரு. G.P.வேதநாயகம் பேசுகிறார் - கானா பிரபா

 


இலங்கை வானொலி யுகத்தில் வானொலி நாடகங்கள் தனித்துவம் மிகுந்தவை. ஆற்றல் மிகு பங்காளிகளாக ஈழத்தின் எழுத்தாளர் சமூகம் கூட இந்த வானொலி நாடகங்களில் தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இவர்களோடு வானொலி நாடகப் படைப்பாளியாக மட்டுமன்றி, நாடகக் கலைஞராகவும், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொடந்து சாதனை படைத்திருக்கின்றார் திரு. G.P.வேதநாயகம். அவரின் படைப்புகளில் ஈழத்தின் முன்னணி வானொலிக் கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றியதும் இலங்கை வானொலி வரலாற்றில் தனித்துவமாகச் சொல்லி வைக்க வேண்டியது.


திரு. G.P.வேதநாயகம் அவர்களுக்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டு. கடந்த ஏப்ரல் மாதம் தாயகத்துக்குக் குறுகிய ஐந்து நாள் பயணம் போது ஊடகரும், எம் உறவினருமான திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் திரு. G.P.வேதநாயகம் அவர்களது நூல்கள் வெளியீடு கண்ட பொன் விழா நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக திரு. G.P.வேதநாயகம் அவர்களின் நாடக & ஊடகப் பயண அனுபவங்களை பெற்றிருந்தேன். அதனை உங்களுக்குப் பகிர்கின்றேன்.


திரு. G.P.வேதநாயகம் அவர்களது படைப்புகளைக் காண

கானா பிரபா

No comments: