பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - திருமகள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 19

 .




தமிழ் திரையுலகில் மிக மூத்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந தவர் ஏ எஸ் ஏ சாமி.இலங்கையைசேர்ந்த பட்டதாரியான இவர் தமிழகம் 

சென்று  பில்ஹணன் என்ற  வானொலி நாடகத்தை எழுதி அதில்அன்றைய சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் நடித்து அந்த நாடகம் மிக பிரபலம் அடைந்தது.இவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்களாக சோமு மொஹிதீன் இருவரும் சாமிக்கு தாங்கள் தயாரிக்கும் படங்களை இயக்கும்வாய்ப்பை வழங்கினார்கள்.


அந்த வகையில் 1947ல் உருவான ராஜகுமாரி படத்தை சாமி டைரக்ட் 

செய்தார்.இந்த படத்திற்கு உதவிவசனகர்த்தாவாக பணியாற்ற வந்தவர்தான் கலைஞர் மு கருணாநிதி.முதல் முதலாக எம் ஜீ ஆருக்குகதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இப் படத்தின் மூலமாகத்தான் சாமியின் பலத்த சிபாரிசின் மூலம்கிட்டியது.ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து அபிமன்யு,கற்புக்கரசி,துளிவிஷம்,தங்கப்பதுமை,கைதிகண்ணாயிரம்,நீதிபதி,அரசிளங்குமரி,முத்துமண்டபம் போன்ற அவர் இயக்கிய படங்கள் நல்ல வரவேற்பைபெற்றன.அதிலும் அறிஞர் அண்ணா எழுதி இவர் இயக்கிய வேலைக்காரி புரட்சிப் படமாக ரசிகர்களைகவர்ந்தது.இவ்வாறு பல படங்களை இயக்கிய சாமி 1971ல் இயக்கிய படம்தான் திருமகள்.


மூத்த நடிகர்களான ஜெமினி ,பத்மினி,இருவருடன் இளைய நடிகர்களான சிவகுமார் ,லட்சுமி,ஏ வி எம்ராஜன்,ஆகியோரும் படத்தில் நடித்தனர்.இவர்களுடன் நாகேஷ் ,சுந்தரராஜன்,எஸ் வரலக்ஷ்மி,எம்பானுமதி ,பேபி ராணி  ஆகியோரும் படத்தில் இடம் பெற்றனர் .


ராஜு,ராதா இருவரும் தொட்டதெற்கெல்லாம்  சண்டை  போடும்  மனமொத்த  காதலர்கள்.பொருளாதாரரீதியில் கஷ்டப்படும் தன் நண்பனும் சக                    மாணவனுமான  ராமுவை தன் வீட்டிற்கே கூட்டி வந்து தன்னுடன்தங்க        வைதது பராமரிக்கிறான் ராஜு.இதை அவன் அண்ணி கல்யாணி விரும்பாவிட்டாலும் விட்டுவிடுகிறாள்.ராஜு ராமு ,ராதா மூவரும் நட்புடன் பழகுகிறார்கள்.ராஜு ராதா இருவருக்கும் திருமண நாளும்நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடக்கும் சமயத்தில் அந்த விபரீதமான சம்பவம் நடந்துவிடுகிறது.எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.





இவ்வாறு அமைக்கப்பட்ட படத்தின் திரைக்கதையை சி கே கோவிந்தராஜூலுஎழுதியிருந்தார்.வசனங்களை ஆரூர்தாஸ் அமைத்திருந்தார்.எம் கர்ணன்  ஒளிப்பதிவைகையாண்டார்.கவிஞர்  கண்ணதாசனின்  பாடல்களுக்கு  கே வி மகாதேவன் இசையமைத்தார்.படத்தின்கதைக்ருவை உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம் என்ற பாடலின் மூலம் கண்ணதாசன்வெளிப்படுத்தி இருந்தார்.சௌந்தரராஜன் ,பாலசுப்ரமணியம்,சுசீலா மூவர் குரலிலும்  பாடல் இனிமையாகஅமைந்தது.காலாலே நிலம் அளந்து,புன்னகையில்  பூ  பூக்கும்  திருமகளே,ஆகிய பாடல்களும் இனிமைதந்தன.



வித்தியாசமான கதையைக் கொண்ட இப்படம் பங்கு பற்றிய நடிகர்களினால் மெருகேறியது. பத்மினி,லட்சுமி இருவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தன. ராஜகுமாரியில் தொடங்கிய ஏஎஸ் ஏ சாமியின் இயக்குனர் பயணம்  திருமகள் மூலம் நிறைவு பெற்றது.1998ல் கலைஞர் கருணாநிதி தமிழக  முதல்வராக இருந்த போது திரைக்கு கலைஞர்களால் அவருக்கு நடத்தப் பட்ட  பிரம்மாண்டமானவிழாவில்,எண்பது வயதைத் தாண்டி விட்ட சாமியை  மேடைக்கு அழைத்து பாராட்டி பேசி நிதியுதவியும்அளித்து தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார் கருணாநிதி.



No comments: