மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே - வித்யாசாகர்!


தாய்ப்பால் வாசம் போலவே


மரத்தின் பச்சைவாசமும் புனிதம் மிக்கது
எனது அண்ணன் தம்பிகள்
அக்காத் தம்பிகள் போல அருகாமை

மரங்களும் உறவு மிக்கவை

மரங்களிடம் பேசுங்களேன்
மரங்களும் பேசும்

மரங்களின் மொழி மனதின் மொழியாகும்

மனதின் மொழி மறந்தோரே
மரங்களை வெட்டுகையில்

வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே?

உங்களுக்கு தெரியுமா


மரங்கள் தான் நமக்கு முன்னோர்

மரம் தான் நமக்கு கூடு
மரம் தான் மேசை
மரம் தான் ஆடை

மரம் தான் பாடையும்;



நமக்கு முதலெழுத்தும்

கடையெழுத்தும் மரம் தான்

மரம் தான் நமக்கு எல்லாம்
மரம் தான் வீடு
மரம் தான் மேளம்

மரத்தால் தான் நமக்கு கவிதையும் வாசிக்கக் கிடைக்கிறது,

உயிரென்பது காற்று எனில்
மரம் தான் காற்றின் தாய்

எனவே

மரத்தைக் காப்போம் தோழர்களே
நாளுக்கொரு மரம் நடாவிட்டால் பரவாயில்லை 
வெட்டாதிருங்கள் போதும்!
---

வித்யாசாகர்


No comments: